புகை பிடித்தால் வேலை கிடையாது : ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, அரசு வேலை கிடையாது என, மாநில, காங்., அரசு அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு, அடுத்த மாதம், 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. 
 மாநில அரசு, சமீபத்தில் பிறப்பித்துள்ள அரசாணையில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என, தெரிவித்துள்ளது. மேலும், அரசு வேலையில் சேர்பவர்கள், புகைபிடிக்க மாட்டேன்; புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என, உறுதிமொழி அளிக்க வேண்டியது கட்டாயம் எனவும், அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு, புகையிலை எதிர்ப்பாளர்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Popular Posts