பள்ளிக்கல்வி - டெங்கு பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தடுப்பு முறைகளையும் பள்ளிகளில் கையாள வழிமுறைகளையும் வகுத்து அரசு கடிதம் வெளியீடு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 செயல்படுத்தும் போது தடை மற்றும் பிரச்சனைகள் காரணிகளை அறிக்கையாக அனுப்ப கல்வித்துறை அலுவலர்களுக்கு - அரசு கடிதம்

உதவிபெறும் பள்ளிகள் - பணியாளர் நிர்ணய பட்டியல் தொகுக்கும் பணிக்காக பணியாளர் வருகை புரிய தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

10 வயது முதல் 19 வயதுள்ள பெண் குழந்தைகளுக்கான இலவச சுகாதார திட்டத்தினை கண்காணிக்க பள்ளி மற்றும் மாவட்ட அளவிலும் பொறுப்பு ஆசிரியர்களை நியமித்தல் - பள்ளிக்கல்வி செயல்முறை

அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணி நீக்கம் செய்யப்பட்டனர் - தினகரன் செய்தி.


கடந்த செப்டம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் வெற்றி பெற்றாக வேண்டும் என எந்த வித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை. 



     ஆனால் டிசம்பர் - 2011 மாதத்தில் அரசு பள்ளிகளில் TRB மூலம் Seniority அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணிநியமன ஆணையில் TET தேர்வில் 5 ஆண்டுக்குள் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பனி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். 




       இதனால் இதே நிபந்தணையின் அடிப்படையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பலர் கல்வித்துறை மூலமாக நியமனம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 5 ஆசிரியர்கள் TET தேர்வில் வெற்றி பெறாத காரணத்தால் பணிநீக்கம் செய்யப்பட்டனர் - என்ற தினகரன் செய்தியால் அரசு நிதி உதவி பெறும்பள்ளிகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டவர்கள் Posting நிலைக்குமா என்று குழப்பம் அடைந்துள்ளனர்.

      TET தேர்வில் வெற்றி பெற்றால் அரசு பள்ளியிலயே வேலை வாய்ப்பு கிடைக்கும் போது அரசு நிதி உதவி பள்ளி பணியை  ஆசிரியர்கள் விரும்ப மாட்டார்கள். 

     இதனால் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நிரப்ப இயலாத காரணத்தினால்  மாணவர்களின் கல்வி பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

      இது குறித்து கல்வி துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, இது மாநிலம் தழுவிய பிரச்சினை என்பதால் விரைவில் கல்வி துறை இயகுனரகம் மூலம் தெளிவுரை கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக கூறினர்.

 

மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி - கொயம்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறுதல் - கூடுதல் விவரம் கோரும் செயல்முறை

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 2 நாள் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் (SABL) பயிற்சி மூன்று கட்டங்களாக நடத்த உத்தரவு - அனைவருக்கும் கல்வி இயக்கம் செயல்முறை

இரவு காவலர் மற்றும் துப்புரவு பணியாளருக்கான Online முறையில் கலந்தாய்வு செய்வது குறித்து பள்ளி கல்வி துறை இயக்குனர் அறிவுரை

தொடக்கக்கல்வி - 22.11.12ன் படி காலியாக உள்ள நடுநிலை தலைமையாசிரியர் / பட்டதாரி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு பருவ சுகாதார வாழ்வியல் பயிற்சியினை உரிய மருத்துவர்களைக்கொண்டு அளிக்க - தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

பத்தாண்டு பணிமுடித்து தேர்வுநிலை பெறுவதர்க்கு கல்விசான்றுகள் உன்மைதன்மை அறிய வேண்டியது அவசியமில்லை தகவலறியும் உரிமை சட்டம்மூலம் பெறப்பட்ட விளக்கம்

மாற்றுத்திறன் உள்ள குழந்தைகளுக்கான "உள்ளடங்கிய கல்வி விளையாட்டு விழா" -12.12.12 அன்று நடத்த வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி SSA செயல்முறை

TET - தகுதிதான் அடிப்படை! - தினமணி கட்டுரை

ஆசிரியர் தகுதித் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டபோது, தேர்வு எழுதியவர்களில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். அப்போது தேர்வு எழுதியவர்கள் பலரும் வினாத்தாள் கடினமாக இருந்தது என்று கருத்துத் தெரிவித்ததால், மீண்டும் ஒருமுறை தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்விலும் சுமார் 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இரண்டு முறையும் தேர்ச்சி விகிதம் குறைவு என்பதால் இந்தத் தேர்வு முறை தவறு என்று ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள் சார்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டு, தகுதித்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.

ஆனால், அவர்கள் முன்வைக்கும் காரணங்கள் அவர்கள் கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக இல்லை. வினாத்தாள் கடினம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. 6 லட்சம் பேர் தேர்வு எழுதும்போது, வினாத்தாள் கடினமாகத்தான் இருக்க முடியும். அதற்காகத்தான் அதை "தகுதித் தேர்வு' என்று அழைக்கிறார்கள். 

இந்த அமைப்புகள் எழுப்பும் இன்னொரு கேள்வி, ஒரு தமிழாசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் ஏன் மற்ற பாடங்களின் கேள்விக்குப் பதில் எழுத வேண்டும், ஆங்கில ஆசிரியர் பணியேற்கப்போகிறவர் ஏன் தாவரவியல், கணிதம் ஆகிய பாடங்களுக்கான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் என்பதுதான். மேலும், பி.எட். பாடத்திட்டத்திலிருந்து அதிகக் கேள்விகள் இடம்பெறுகின்றன என்ற முணுமுணுப்பும் உண்டு. இதில் எந்தவித நியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை.

இவர்கள் பணியாற்றப்போவது கல்லூரியில் அல்ல, பள்ளிகளில் பணியாற்றப் போகிறவர்கள். தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் 90 சதவீதம் புறநகர்ப் பகுதிகளில் இருப்பவை. பல நடுநிலைப் பள்ளிகளிலும் மேனிலைப் பள்ளிகளிலும் ஒரே ஆசிரியர் இரண்டு பாடங்களை எடுக்க வேண்டிய தேவையும் பொறுப்பும் இருக்கிறது. 

மேலும், ஒரு மாணவன் ஓர் ஆசிரியரைத் தனக்குத் தெரியாத அனைத்தும் தெரிந்தவராக மதிக்கிறார். அனைத்துப் பாடங்களிலும் ஆசிரியருக்குத் தேர்ச்சி இல்லாவிட்டாலும், அந்நிலையில் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, குறைந்தபட்சம் அதற்கான சரியான விடையை எங்கே தேடலாம் என்கின்ற அறிவு படைத்தவராக ஆசிரியர் அமைய வேண்டும். இதுதானே நியாயமான எதிர்பார்ப்பாக இருக்க முடியும்?

அதைக் கருதியே, பல்வேறு பாடங்களில் இருந்தும் அடிப்படைக் கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டுள்ளன. இதையும்கூட தவறு என்று சொல்வார்கள் என்றால், அவர்கள் கல்லூரி விரிவுரையாளர்களாகப் பணியாற்ற முயற்சி செய்யலாமே தவிர, பள்ளிகளில் பணியாற்ற வேண்டியதில்லை.

இந்த இரண்டு தகுதித் தேர்வுகளிலும் அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது என்னவென்றால், வெற்றி பெற்றிருப்போர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பதுதான். அதாவது, தொடர்ந்து படித்துக்கொண்டும், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்திக்கொண்டும் இருப்போர் மட்டுமே இந்தத் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். பட்டம் மட்டும் வாங்கிக்கொண்டு வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்துவிட்டு, பதிவுமூப்பு அடிப்படையில் வேலை கிடைத்துவிடும் என்று எதையும் படிக்காமல் சும்மா இருந்தவர்களால் இத்தேர்வில் வெற்றி பெற முடியவில்லை. இதுதான் மிகவும் கசப்பான உண்மை.

இந்த உண்மையை ஏற்கவும், ஆன்ம பரிசோதனை நடத்தவும் முயல வேண்டிய ஆசிரியர் அமைப்புகள், கூட்டணிகள், அதற்கு மாறாக பணம் கொடுத்துதான் இவர்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது தங்களைத் தாங்களே தரம் தாழ்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அறிவால் தேர்ச்சி பெற்றவர்களை வெறும் காழ்ப்புணர்ச்சியால் இதைவிடக் கொச்சைப்படுத்தும் செயல் வேறு ஏதும் இருக்க முடியாது.

தகுதித் தேர்வுகள் மிகவும் இன்றியமையாதது என்பதும், குறிப்பாக ஆசிரியர் பணிக்கு அறிவுத்திறன் சோதனை அவசியமானது என்பதும் மேலும்மேலும் உறுதிப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆகவே, தமிழக அரசு இத்தகைய அடிப்படையற்ற விமர்சனங்களுக்காக அச்சப்படாமல், தகுதித் தேர்வைத் தொடர்ந்து முறைப்படி, நடத்தவும், அதில் தேர்ச்சி பெறுவோரை மட்டுமே பணியமர்த்தவும் செய்தல் வேண்டும். அதுமட்டுமே அடுத்த தலைமுறைக்கு நல்ல ஆசிரியர்களை வழங்கும் செயலாக இருக்கும்.

மேலும், தற்போதைய ஆசிரியர்கள் எந்த அளவுக்குத் தங்கள் பாடங்களில் ஆழமும் விரிவும் கொண்ட அறிவுப்புலம் பெற்றிருக்கிறார்கள் என்பது இன்றியமையாத கேள்வி. ஒருமுறை பணியில் சேர்ந்துவிட்டால், அந்த ஆசிரியருக்குச் சம்பளம் மட்டுமே வழங்க வேண்டும் என்பது எந்த நாட்டிலும் இல்லாத ஒரு நடைமுறை. ஆகவே, ஆசிரியர்கள் அனைவருக்கும், அவர்கள் பணியில் சேர்ந்த பிறகு, ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை, சுய ஆய்வுத் தேர்வு ஒன்றை நடத்துவது அவசியமாகிறது.

காலத்துக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்கள் அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்களா, இவர்களுக்குத் தாங்கள் நடத்தும் பாடப்புத்தகத்தில் உள்ள விஷயங்களாகிலும் முழுமையாகத் தெரிந்திருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள இத்தகைய சுய ஆய்வுத் தேர்வு அவசியம். அந்தத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆசிரியர்களாகத் தொடர அனுமதிக்க வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் என்பது உறுதி. ஆனாலும், ஓர் ஆசிரியர் காலத்தால் பின்தங்கிவிட்டு, ஒரு மாணவனுக்கு எப்படி அறிவு புகட்ட முடியும்? தகுதியற்ற ஒருவருக்கு மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வழங்கிக் கொண்டிருப்பது எந்த வகையில் நியாயம்?

ஒரு சாதாரண தொழிலாளிக்கும்கூட புதிய இயந்திரங்களில் பயிற்சி அளித்து அவரைத் தரப்படுத்துகிறார்கள். மருத்துவர்கள், பொறியாளர்கள் தங்கள் துறையின் தொழில்நுட்ப வளர்ச்சியைப் புத்தாக்கப் பயிற்சிகள் மூலம் வளர்த்துக்கொள்கிறார்கள். ஓர் ஆசிரியர் காலத்துக்கேற்ற அறிவுப்புலம் கொண்டிருக்கிறாரா என்பதை அறிய சுயஆய்வுத் தேர்வு நடத்துவதில் என்ன தவறு?

2013 ஆம் ஆண்டிற்கான அரசு பொது (அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகள்) விடுமுறை நாட்கள் அறிவித்து - அரசாணை 981 வெளியீடு

1.6.1988 முன் இடைநிலை ஆசிரியராய் பணியாற்றி 1.6.88 பிந்தைய தலைமையாசிரியர் பணிகாலத்தோடு சேர்த்து தேர்வு/ சிறப்பு நிலை வழங்குதல் - கூடுதல் விவரம் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் செயல்முறை

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் (SABL Training) பயிற்சி - குறு வள மைய அளவில் அளிக்க இருப்பதால் மாநில அளவிலான கருத்தாளர்கள் பயிற்சி அளிக்க - SCERT செயல்முறை

School Development Planning Power point

மாற்று திறனாளிகளுக்கு பொது தேர்வில் வழங்கப்படும் சலுகைகள் -திருத்த அரசாணை வெளியீடு

பள்ளிக்கல்வி - 131 மேல்நிலைப்பள்ளிகளுக்கு NABARD திட்டம் XIன் கீழ் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த உரிய பள்ளிபெயர்களுடன் அரசாணை வெளியீடு

மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து வகை கல்வி உதவித்தொகை விவரங்கள் கோரி - பள்ளிக்கல்வித்துறை செயல்முறை

ஆசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு? மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நேர்முக உதவியாளர் பணியிடை நீக்கம் - dinamani

நாகை மாவட்டத்தில், ஆசிரியர் பணி நியமனத்தில் எழுந்த முறைகேடு புகாரைத் தொடர்ந்து அம் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி, அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 5 பேரை பணி நியமனம் செய்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி உத்தரவிட்டார். பணியேற்ற 5 பேரில் 2 பேர் முழு ஊதியம் பெற்றுள்ளனர். 3 பேரின் ஊதியம், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் ஆட்சேபனையால் இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த வியாழக்கிழமை சென்னையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்ட கல்வித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், நாகை உள்பட சில மாவட்டங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இந் நிலையில், நாகை மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எஸ். மார்த்தாள் பிரபாவதி வெள்ளிக்கிழமையும், அவரது நேர்முக உதவியாளர் வை. திருவள்ளுவனை சனிக்கிழமையும் பணியிடை நீக்கம் செய்து பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் டூ முடிக்காமல் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர்களுக்கும் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்கும் வரை பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை

பி.எட்., எம்.எட்., படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு


பி.எட்., - எம்.எட்., உள்ளிட்ட, ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கைக்கு, நுழைவுத்தேர்வு முறையை அமல்படுத்த, மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

நீதிபதி வர்மா குழு அளித்த பரிந்துரை அறிக்கையின் அடிப்படையில், இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த பரிந்துரைக்கு, கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில், ஒப்புதலும் வழங்கப்பட்டுள்ளது.

வர்மா குழு
நாடு முழுவதும், ஆசிரியர் கல்வியில் கொண்டு வர வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்தும், தரமான ஆசிரியரை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்து, பரிந்துரை அறிக்கை வழங்க, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு அமைத்து, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. வர்மா குழு, சமீபத்தில், தன் பரிந்துரையை, மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

பரிந்துரையில், "தரமான கல்வியை அளிக்க வேண்டும் எனில், தரமான ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும். அதற்கு, பி.எட்., - எம்.எட்., மற்றும் ஆசிரியர் கல்வி பட்டய படிப்பு ஆகிய ஆசிரியர் கல்வி படிப்பு சேர்க்கையில், நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்த வேண்டும்" என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் நடந்த, முதல், டி.இ.டி., தேர்வை, கிட்டத்தட்ட, ஏழு லட்சம் பேர் எழுதிய போதும், 1 சதவீதத்திற்கும் குறைவாக, வெறும், 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றதை, வர்மா குழு சுட்டிக் காட்டி, நுழைவுத் தேர்வின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.

தமிழகத்தின் நிலைப்பாடு: வர்மா குழுவின் பரிந்துரை அறிக்கை, சமீபத்தில், டில்லியில் நடந்த கல்விக்கான மத்திய ஆலோசனை வாரிய கூட்டத்தில் வைக்கப்பட்டு, வாரியத்தின் ஒப்புதலும் பெறப்பட்டது. கூட்டத்தில், பல்வேறு மாநில பிரதிநிதிகள், ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வு திட்டத்தை ஆதரித்துள்ளனர். ஆனால், இந்தவிவகாரத்தில், தமிழக அரசின் நிலைப்பாடு தெரியவில்லை.

30 ஆயிரம் மாணவர்கள்
தமிழகத்தில், 700 ஆசிரியர் கல்வி கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஆண்டுதோறும், 40 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு படிப்புகளில், 30 ஆயிரம் பேர் வரை சேர்கின்றனர். இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு, தற்போது நுழைவுத்தேர்வு கிடையாது.
ஆசிரியர் கல்வி பட்டயத் தேர்வு விண்ணப்பதாரர்கள், பட்டப் படிப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பெற்ற மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில், தேர்வுப் பட்டியலை வெளியிட்டு, கலந்தாய்வு அடிப்படையில் சேர்க்கை நடத்தப்படுகிறது.

எப்போது வெளியாகும்?
இந்த முறையால், தரமான ஆசிரியரை தேர்வு செய்ய முடியாது என்பதை, டி.இ.டி., தேர்வு, வெட்ட வெளிச்சமாக்கி விட்டது. எனவே, நுழைவுத் தேர்வு முறையை அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து, உயர்கல்வித் துறை தீவிரமாக ஆலோசித்து வருவதாக, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழக அரசின் நிலைப்பாடு குறித்த அறிவிப்பு, அடுத்த கல்வியாண்டு சேர்க்கைக்கு முன்னதாக வெளியாகலாம் என திர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து, பல்கலைக்கழக ஆசிரியர் சங்க பொதுச் செயலர் பிச்சாண்டி கூறியதாவது: கலை, அறிவியல் பட்டதாரிகள் மட்டுமே, பி.எட்., - எம்.எட்., படிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றனர். நுழைவுத் தேர்வு திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன், கல்லூரி பாடத் திட்டங்களின் தரத்தை உயர்த்த வேண்டும்.  இல்லை எனில், நகரங்களைச் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே, ஆசிரியர் கல்விக்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவர். கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த மாணவர்களின் நிலை, கேள்விக்குறி ஆகிவிடும். வ்வாறு பிச்சாண்டி தெரிவித்தார்.

மாணவர்கள் வெளியே செல்லலாமா?


"பள்ளி மாணவர்களை மதிய உணவு இடைவேளையின்போது, வளாகத்தை விட்டு வெளியே அனுப்ப வேண்டாம்" என பெற்றோர், பள்ளி நிர்வாகங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு காரணம் என்ன, எங்கு இந்த கோரிக்கை என்றால், வழக்கம் போல, வெளிநாட்டில் தான்.

இங்கிலாந்தில் படிக்கும் மாணவர்கள், மதிய உணவு இடைவேளையில், வெளியே சென்று, துரித வகை(fast food) உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். இவர்களது உடல்நலம் பாதிக்கப்படுவதாக அவர்களது பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளிகளுக்கு, பெற்றோர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இது குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், 73 சதவீத பெற்றோர் இக்கருத்தை தெரிவித்துள்ளனர். 

பள்ளி தரப்பில் கூறும்போது, "இடைவேளையில் மாணவர்களை வெளியே செல்லக்கூடாது என சொல்ல எங்களுக்கு உரிமையில்லை. இருப்பினும், பள்ளி வளாகத்தில் உள்ள சத்தான உணவுகளை மட்டும் உட்கொள்ளுமாறு, மாணவர்களை அறிவுறுத்துவோம்" என்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளி களும் இதை கடைபிடிக்கலாம்.

ஆசிரியர் தகுதித்தேர்வு முடித்தவர்களுக்கே நிதியுதவி பள்ளிகளில் நியமித்தல் சார்பான - தொடக்கப்பள்ளித் துறையின் செயல்முறை

NCC Directorate : Recruitment for the post of LDC

தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை அனைத்து அரசு அலுவலகங்களிலும் 19.11.12 அன்று 11.00am மணியளவில் எடுக்க அரசு கடிதம் வெளியீடு

மனிதவள மேம்பாட்டு மையங்களுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு


பல்கலைகளில் செயல்பட்டு வரும், அகடமி ஸ்டாப் காலேஜ் - ஏ.எஸ்.சி., மையங்களின் பெயரை, ஹியூமன் ரிசோர்ஸ் டெவலப்மென்ட் சென்டர் - எச்.ஆர்.டி.சி., என, மாற்ற வேண்டும். தற்போதுள்ள, 66 மையங்களை, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்திற்குள், 100 ஆக உயர்த்த வேண்டும். இந்த மையங்களுக்கு, 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற, நிபுணர் குழுவின் பரிந்துரையை, மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

நாடு முழுவதும், தேர்வு செய்யப்பட்ட, 66 பல்கலைகளில், தேசிய ஆய்வு மற்றும் அங்கீகாரக் குழுவின் சார்பில், ஏ.எஸ்.சி., மையங்கள் செயல்பட்டு வருகின்றன. உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும்; பல்கலை, கல்லூரி ஆசிரியர்கள், பணியாளர்கள், நிர்வாகத்தில் உள்ள ஆசிரியர்கள் என, மூன்று தரப்பினருக்கும், அவரவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கும் பணியை, ஏ.எஸ்.சி., மையங்கள் செய்து வருகின்றன.

தேசிய கவுன்சில்இந்த மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, மையங்களை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக, உரிய பரிந்துரைகளை அளிக்க, ஏழு உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழுவை, யு.ஜி.சி., அமைத்தது. இக்குழு, 2011, டிசம்பர் முதல், ஜூன் வரை, 66 மையங்களிலும் ஆய்வு செய்து, மத்திய அரசுக்கும், யு.ஜி.சி.,க்கும், பரிந்துரை அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை விவரங்களை, சமீபத்தில், தேசிய ஆலோசனை கவுன்சில் வெளியிட்டது.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எந்த நோக்கங்களுக்காக ஏ.எஸ்.சி., மையங்கள் அமைக்கப்பட்டனவோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், 13 மையங்கள் தான் செயல்பட்டுள்ளன. ஏழு மையங்கள் செயலிழந்து விட்டன; மற்ற மையங்கள், ஓரளவுக்கு செயல்படுகின்றன.

மையங்களில், நிரந்தர பணியாளர்கள் இல்லாதது, இயக்குனர் பணியிடமே, பல மையங்களில் காலியாக இருப்பது, அனைத்து வகையான பயிற்சிகளையும் முழுமையாக அளிக்காதது போன்ற குறைகள் அதிகம் உள்ளன.

சென்னை பல்கலை, பாரதியார், பாரதிதாசன் மற்றும் மதுரை காமராஜர் ஆகிய, நான்கு பல்கலைகளில், ஏ.எஸ்.சி., மையங்கள் இயங்கி வருகின்றன. இதில், பாரதிதாசன் பல்கலை மையம், சுத்தமாகச் செயல்படவில்லை என, ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, நிபுணர் குழு உறுப்பினரும், சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தருமான எஸ்.பி.தியாகராஜன் கூறியதாவது:எந்த பல்கலையையும் குற்றம்சாட்டாமல், அந்த பல்கலையில் உள்ள மையத்தை வலுப்படுத்துவது குறித்து பேச வேண்டும். நிபுணர் குழுவின் பரிந்துரை அறிக்கையை, மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. 

அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் அனைத்தும், 2012 - 17க்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் செயல்படுத்தப்படும்.மனிதவள மேம்பாட்டு மையங்கள் வலுப்படுத்தப்பட்டால், உயர்கல்வியின் தரம் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாள் (Non - Residential) பயிற்சி 26.11.12 முதல் 12.12.12 வரை 2 கட்டங்களாக அந்தந்த குறு வள மைய அளவில் நடைபெறுகிறது

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் 2013 - B.Ed சேர்க்கைக்கு விண்ணப்பம் வரவேற்பு - - நுழைவுத் தேர்வு இல்லை

பெண் கல்வி - நடுநிலைப்பள்ளி மாணவிகளுக்கு - வட்டாரவள மைய அளவில் வாழ்வியல் திறன் பயிற்சி

சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பயிற்சி - 2012 நவம்பர் மாத குறு வள மைய பயிற்சி கட்டகம்

பள்ளிக்கல்வி - தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட Watchman மற்றும் Sweeper பெயர் பட்டியல்

இக்னோ ( IGNOU ) - TIME TABLE for TERM END EXAMINATION -December 2012

நன்னெறி போதனை வழங்க - மாணவர்கள் தங்கள் நிறை/குறைகளை மற்றும் பிரச்சனைகளை தெரிவிக்க ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனை பெட்டி வைக்க - பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு

தலைமையாசிரியர் பதவி:இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை


உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்களாகும், இடைநிலை ஆசிரியர்கள், பணிமூப்பு அடிப்படையில், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஆகின்றனர். இதில், நேரடி பட்டதாரி ஆசிரியருக்கும், இடைநிலை ஆசிரியராக இருந்து, பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் சமநிலை உள்ளது.
தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுனர்களாக, பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் 2002 முதல் பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர். உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வின் போது, ஆசிரியர் பயிற்றுனர்களாக இருந்து, பட்டதாரி ஆசிரியர்களாக வந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது.
இதனால் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கின்றனர்.இதன் மீது, பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து, ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு 50 , இடைநிலை ஆசிரியர்களுக்கு 50 சதவீதம் என, ஒதுக்கீடு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TNPSC introduced Online Test

தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் - ஓய்வு பெற்றோர் விவரம், ஓய்வூதிய தொகை , குடும்ப ஓய்வூதியம் , கடன், வீட்டுகடன், முதலீடு செய்தமை மற்றும் வட்டி வீதம் குறித்த - தொடக்கக்கல்வி இயக்கத்தின் தகவல் அறியும் உரிமைச்சட்ட கடிதம்

10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்று திறந்தவெளி பல்கலை கழகத்தில் பயிலும் பட்டங்கள் பதவியுயர்விற்கு தகுதியுண்டு ஆனால் இரட்டை பட்டங்கள் தகுதியற்றது அதே நேரத்தில் அரசாணை வெளியிடப்பட்ட 18.08.2009 முன் பதவியுயர்வு வழங்கப்பட்டிருந்தால் பதவியிறக்கம் செய்ய இயலாது - பள்ளிகல்வித்துறை - தகவல் அறியும் உரிமைச் சட்ட கடிதம்

தொடக்க/ உயர்தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் 2012 மாதத்திற்கான குறுவளமைய பயிற்சி 17.11.2012 அன்று சுற்றுசுழல் விழிப்புணர்வு என்ற தலைப்பில் நடத்த - SSA மாநில திட்ட இயக்கம் உத்தரவு


2006ல் ABL மாதிரி பள்ளிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் விவரங்களையும் அப்பள்ளிகளின் தற்போதும் மாதிரிப்பள்ளிகளாக இயங்குகிறதா என்ற விவரத்தையும் , வழங்கப்பட்ட ABL அட்டைகளின் விவரங்களையும் கோரி - மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

ஒரே கல்வியாண்டில் வெவ்வேறு கால அட்டவணையில் பயின்ற இரு பட்டப்படிப்புகள் ( இளங்கலையோ, முதுகலையோ, இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்போ) பதவியுயர்வுக்கு தகுதி உண்டு - பள்ளிகல்வித்துறை தகவல் அறியும் உரிமை சட்ட கடிதம்

IGNOU Entrance Result-2012 Release

திருச்சியில் மா .தொ.க.அலுவலர் மற்றும் உ.தொ.க .அலுவலர் களுக்கு கூட்டம் :

01.11.2012 Pending Court Cases

காலி உ .தொ .க .அலுவலக பணியாளர்கள் நிரப்ப உத்தரவு :

Foundation Course on Education of Children with Disabilities-IGNOU


HRD to inform HM's all schools to make the students take the pledges everyday after prayer

அரசு முதன்மை செயலாளர் ஆய்வு : தொடக்க கல்வித்துறையில் நேர்முக உதவியாளர் முதல் துப்புரவு பணியாளர் வரை காலிப்பணியிடம்

வழக்கு நிலுவைகள் பற்றி விவரம் இயக்குனர் மாவட்ட தொடக்ககல்வி அலுவலரிடம் கோருதல்

ஆசிரியர் குறை தீர் கூட்டம் நடத்த ஆணை வெளியீடு :

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP EXAMINATION, 2013

15.03.2012 நிலவரப்படி உதவியாளர் பணியிலிருந்து (இருக்கைப்பணி) கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்குவதற்கான முன்னுரிமைப் பட்டியல் - பள்ளிக்கல்வித்துறை வெளியீடு

நேர்முக உதவியாளர் பணியிடம் முதல் துப்புரவுப் பணியாளர் பணியிடம் முதற்கொண்டு காலிப்பணியிட விவரம் கோரி - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

தூய்மையான இந்தியாவை உருவாக்கிட, தூய்மை மேம்பட்ட உறுதிமொழியை தினமும் பள்ளி பிராத்தனைக்கு பிறகு எடுக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

ராய்பூரில் 21 முதல் 28.11.12 வரை நடைபெறும் கையெழுத்துப் பயிற்சிக்கு 30 தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்கள் பங்கேற்க அனுமதியளித்து - தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு

மைய அரசின் திட்டம் (IDMI) - நிதி உதவி கோரி சிறுபான்மையினத்தவர்களால் நடத்தப்படுகின்ற பள்ளிகளிலிருந்து பெறப்படுகின்ற கருத்துருக்களை பரிசீலினை செய்து அனுப்ப கோருதல் தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவிகளின் விலையில்லா சீருடைகள் வழங்குவது குறித்து விவரம் கோரி இயக்குநர் உத்தரவு

பச்சை நிற மை பயன்பாடு குறித்து தெளிவுரை, ஊழியர்களின் வகைகள் மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் பச்சை நிற மையை பயன்படுத்த அதிகாரம் வழங்கி முக்கிய அரசாணைகள்

பண்டிகை முன்பணம் ரூபாய் .2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு / ஆசிரியர்களுக்கு  பண்டிகை முன்பணம் ரூபாய்.2000 லிருந்து ரூபாய்.5000 உயர்த்தி தமிழக முதல்வர் இன்று(01/11/12) பேரவையில் அறிவிப்பு.

Press Release

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் ஆட்சேபனைகளுக்கு நவம்பர் 20ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டித்து - தேர்தல் ஆணையம் உத்தரவு

மொத்தமாக எஸ்.எம்.எஸ்., யார் யாருக்கு சலுகை


மொத்தமாக, அதிக எண்ணிக்கையில், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., செய்திகளை அனுப்புவதை கட்டுப்படுத்த முடிவு செய்துள்ள மத்திய அரசு, அதில், யார் யாருக்கு விலக்கு அளிக்கலாம் என்பது குறித்து, முடிவெடுக்க குழு ஒன்றை அமைத்துள்ளது.வதந்தி, தீ போல பரவக் கூடியது.
ஒருவர், பத்து ரூபாயைத் திருடி விட்டாராம் என பரப்பப்படும் வதந்தி, பத்தாவது நபரைச் சென்றடையும்போது, பத்து கோடி ரூபாயாக மாறியிருக்கும்; அந்த அளவுக்கு, "வதந்தீ' கொடூரமானது.உண்மையான, நல்ல, நட்புறவான தகவல்களை, ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ள, அருமையான ஊடங்களாக இருக்கும், மொபைல் போனின், எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., கலவரங்களை ஏற்படுத்தி விட்டன என்பது, சமீப கால உண்மை.வட கிழக்கு மாநிலங்களில் நடந்த சம்பவங்களை, ஒரு தரப்பினர், தவறாக புரிந்து கொண்டு, வதந்தியை பரப்பும் விதத்தில் அனுப்பிய, எஸ்.எம்.எஸ்., செய்திகளால், நாட்டின் பல பகுதிகளில் தங்கி வேலை பார்த்து வந்த, வட கிழக்கு மாநிலத்தவர் ஏராளமானோர், ஆகஸ்டில் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பினர்.
சொந்த நாட்டிலேயே அகதிகள் போல ஆக்கப்பட்ட, அவர்களை கட்டுப்படுத்த, மத்திய, மாநில அரசுகள் முயன்றும் முடியவில்லை.அதையடுத்து, மொத்தமாக, அதிக எண்ணிக்கையில் (பல்க்), எஸ்.எம்.எஸ்., செய்திகளை அனுப்ப, மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது; நிலைமையும் சில நாட்களில் சீரானது.
ஆனால்,"பல்க்' எஸ்.எம்.எஸ்., செய்திகளை பரிமாறிக் கொள்ளும் காது கேளாதோர், தகவல்களை தெரிவிக்கும் நிறுவனங்கள், ரயில்வே, விமான விசாரணை தகவல்கள் பாதிக்கப்பட்டன.
பல்க் எஸ்.எம்.எஸ்., என்ற பிரிவிற்குள் கொண்டு வரப்படும் பிரிவினர், யார் யார், யாருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்ய, முன்வந்த மத்திய உள்துறை அமைச்சகம், அது குறித்து ஆராய, குழு ஒன்றை அமைத்துள்ளது.அந்த குழுவிற்கு, தொலை தொடர்புத்துறை இயக்குனர், ஆர்.சாக்யா அமைப்பாளராக இருப்பார். அதில், தொலை தொடர்புத்துறை, தகவல் தொழில்நுட்பம், உளவுப் பிரிவினர், தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற அமைப்பினர் இடம்பெற்றிருப்பர்.இந்த உயர்மட்ட குழு, பட்டியல் ஒன்றைத் தயாரித்து, பல்க் எஸ்.எம்.எஸ்., மற்றும் எம்.எம்.எஸ்., குறித்து முடிவு செய்யும். 

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் அறிமுகம்


மாணவர்கள் வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய 10 கட்டளைகள் குறித்து வாழ்வியல் திறன் விளக்கம் தர அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி 9ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளில் மாணவ, மாணவிகளுக்கு வாழ்வியல் திறன் கல்வி பயிற்சி என்ற தலைப்பில், 10 கட்டளைகள் விளக்கம் தரப்படுகிறது.

மாணவர்களுக்கு விளக்கம் தர, ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.

10 கட்டளைகள்: தன்னை பிறர் நிலையில் வைத்து பார்த்தல், பிரச்னைகளை சமாளிக்கும் திறன், உறவு முறையை வலுப்படுத்தும் திறன், படைப்பாற்றல் திறன், கூர்சிந்தனை திறன், மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் திறன், உணவுர்களை கையாளும் திறன், தன்னை அறிதல், முடிவெடுக்கும் திறன், தகவல் தொடர்பு திறன். 

திண்டுக்கல்லில் நடந்த பயிற்சி வகுப்புகளில் மேற்கூறிய இந்த 10 கட்டளைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Popular Posts