TETO JAC ஒரு நாள் வேலைநிறுத்தம் வழிகாட்டு நெறிமுறைகள் :
Click Here

அரசுத் தரப்பில் கால அவகாசம் வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கை நிராகரிப்பு, திட்டமிட்டப்படி போராட்டம் தொடரும் - டிட்டோஜாக் அதிரடி முடிவு

நேற்று தொடக்கக் கல்வி இயக்குனர் அளவில் நடைபெற்ற கூட்டத்திலும், இன்று நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு சபிதா அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முடிவும் எட்டப்படாமல் நிறைவடைந்தது. 
 
இதையடுத்து சென்னையில் கூடிய டிட்டோஜாக் உயர்நிலைக் குழு கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் செய்யும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இதனால் வருகிற மார்ச்-6ல் திட்டமிட்டபடி மிகப்பெரிய ஒரு நாள் வேலை நிறுத்தத்தை வெர்றிகரமாக நடத்த டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.

டிட்டோஜாக் - இன்று மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக அரசு, ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என அறிவிப்பு

இன்று நடைபெற்ற டிட்டோஜாக் உயர்மட்டக் குழு கூட்டத்தில் பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

* 24.02.2014 அன்று மாலை 5மணிக்கு மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயுத்தக் கூட்டம் நடைபெறும். இதில் டிட்டோஜாக் இணைப்பு சங்கங்களின் மாவட்ட/ வட்ட நிரவாகிகள் பங்கேற்பு
* 25.02.2014 அன்று முதல் 28.02.2014 அன்று முடிய பிரச்சாரம் மற்றும் ஆசிரியர் சந்திப்பு கூட்டம் நடைபெறும்.
* 02.03.2014 அன்று மாவட்ட அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
* 03.03.2014 அன்று டிட்டோஜாக் உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் சென்னையில் சந்திப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மேலும் நாளை காலை பள்ளிக்கல்வி செயலாளருடன் சந்திப்பு நடைபெற உள்ளதெனவும் தெரிவித்தார். டிட்டோஜாக்கில் உள்ள சங்கங்கள் அனைத்தும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்ற கருத்தில் உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.
அண்மையில் நடந்த மாபெரும் பேரணியால் தான் இன்று அரசு தரப்பில் பேச அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். கோரிக்கைகள் நிறைவேற்றினால் மட்டுமே வேலை நிறுத்தம் விலக்கிக்கொள்ளப்படும் என்றும் அதுவரை போராட்டங்கள் ஓயாது என நாளை நடைபெறும் செயலாளருடன் சந்திப்பின் போது வலியுறுத்தப்படும் என்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செய்லாளார் திரு. செ.முத்துச்சாமி தெரிவித்தார்.

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (NMMS), பிப்ரவரி 2014 - தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு பதிவேற்றம் செய்து மாணவர்களுக்கு விநியோகித்தல்

22.02.2014 அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத்தேர்வுக்கு (NMMS) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துள்ள மாணவர்கள் அந்தந்த பள்ளி  தலைமை ஆசிரியர்கள் மூலம்  13.02.2014   முதல்   20.02.2014 இத்துறையின் www.tndge.in என்ற இணையதளம் வழியாக தேர்வுக்கூட அனுமதிச் சீட்டினை (Admission Card) பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கான டி.ஏ.வை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க முடிவு..!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் அளவுக்கு உயர்த்துவதுடன் 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இந்த அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இரு முறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படுகிறது. மார்ச் மாதம் அறிவிக்கப்படும் உயர்வு ஜனவரி 1 ல் இருந்தும், செப்டம்பர் மாத உயர்வு ஜுலை 1 ல் இருந்தும் அமல்படுத்தப்படும். கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 10 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது.

 இதை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கான மொத்த அகவிலைப்படி 90 சதவீதமாக உயர்ந்தது. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருப்பதால் நன்னடத்தை விதி அமலுக்கு வருவதற்கு முன்பாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முறையும் 10 சதவீதத்துக்கு குறையாமல் அகவிலைப்படி உயர்த்தப்படும். 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தால் மொத்த அகவிலைப்படி 100 சதவீதமாக உயரும்.

வழக்கமாக அகவிலைப்படி 50 சதவீதத்தை தாண்டினால் அதனை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க வேண்டும். அடிப்படை சம்பளம் உயர்ந்தால் வீட்டுவாடகை, போக்குவரத்து முதலான இதர படிகளும் உயரும். இதன் காரணமாக அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்காமல் மத்திய அரசு தள்ளிப்போட்டு வந்தது. 

தற்போது 7 வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அகவிலைப்படியில் குறைந்தது 50 சதவீதத்தையாவது அடிப்படை சம்பளத்துடன்  இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைத்தால் 30 முதல் 35 சதவீதம் வரை சம்பளம் உயரும் என மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியக்காரர்கள் பலன் அடைவார்கள் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அவசரப்பட்டு விட்டாரா முதல்வர்? இடியாப்ப சிக்கலில் டி.ஆர்.பி.,

"ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்று, அரசுப் பணி கிடைக்காமல் காத்திருப்போர், அடுத்த பணி நியமனத்தில் முன்னுரிமை கேட்க முடியாது. மதிப்பெண் அடிப்படையில் தான் ஆசிரியர் பணி நியமனம் இருக்கும்" என ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) வட்டாரம் தெரிவித்தது.

டி.இ.டி., தொடர்பான, அரசின் அறிவிப்புகள் அனைத்தும் மாறி மாறி வருவதால், இந்த விவகாரத்தில் முதல்வர் அவசரப்பட்டு விட்டதாகவும், தங்களை அரசு அறிவிப்புகள் குழப்புவதாகவும், தேர்வு எழுதியவர்கள் கூறுகின்றனர். தேர்வு எழுதியவர்களின் கேள்விக் கணைகளைச் சமாளிக்க முடியாமல், டி.ஆர்.பி., சிக்கித் தவிக்கிறது.

கடந்த ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், 27 ஆயிரம் பேரும், சமீபத்தில், முதல்வர் அறிவித்த, 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக, 47 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 12 ஆயிரம் இடங்கள் மட்டுமே காலியாக உள்ள நிலையில் 74 ஆயிரம் பேர், தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது பெரும் சிக்கலை உருவாக்கி உள்ளது. ஏனெனில் தேர்ச்சி பெற்ற அனைவரும், அரசு வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். 

தற்போதுள்ள காலி இடங்களுக்கு, தேர்வு பெறுவோர் போக மீதம் உள்ளவர்களுக்கு அடுத்த பணி நியமனத்தின் போது முன்னுரிமை கிடைக்கும் என, தேர்வர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஆனால், இதில் உள்ள குழப்பத்தை நீக்குவதற்கு டி.ஆர்.பி., முன்வரவில்லை.

எனினும் இந்த விவகாரம் குறித்து, டி.ஆர்.பி., வட்டாரம் கூறியதாவது: கடந்த, 2013 தேர்வில் தேர்ச்சி பெற்றோர், 5 சதவீத மதிப்பெண் சலுகையின் காரணமாக தேர்ச்சி பெற்றோர் ஆகிய இரு தரப்பினரின் மதிப்பெண்களையும் மதிப்பீடு செய்து இடஒதுக்கீடு வாரியாக அதிக ம திப்பெண் பெற்ற விண்ணப்பதாரர் மட்டுமே ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவர். 

தேர்வு பெறாதவர்கள், அடுத்த காலி பணியிடங்களை நிரப்பும் போது முன்னுரிமை கோர முடியாது. அடுத்து, மீண்டும் டி.இ.டி., தேர்வு நடந்தால், அதில் தேர்ச்சி பெறுபவரின் மதிப்பெண் மற்றும் ஏற்கனவே, 2013ல் தேர்ச்சி பெற்று அரசு பணி கிடைக்காமல் காத்திருக்கும் விண்ணப்பதாரருடைய மதிப்பெண் ஆகிய இரண்டையும் கலந்து அதில் அதிக மதிப்பெண் பெறும் விண்ணப்பதாரரே, அரசுப் பள்ளி ஆசிரியர் பணிக்கு, தேர்வு செய்யப்படுவார். இவ்வாறு, டி.ஆர்.பி., வட்டாரம் தெரிவித்தது.

ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை

''ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது, என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.


"ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,) மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

 இதை உள்ளீடு செய்யும் அதிகாரம், அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே உள்ளது. ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்படும், ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுடன், சரிபார்த்த பின்னரே, இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். 

ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது. 

இது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகத்துக்கு, பல்வேறு தரப்பில், புகார் சென்றது. இதையடுத்து, தொடக்க கல்வி இயக்குனரகம் சார்பில், மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் 'தேசிய தகவல் மையத்தால், உதவி தொடக்க கல்வி அலுவலகங்கள் மட்டுமே, பயன்படுத்தும் வகையில், மென்பொருள் கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர்கள், நேரடியாக அப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் விபரங்களை, இணையதளத்தில் உள்ளீடு செய்தல் கூடாது. ஒன்றிய அளவில் செயல்படும் 'இ.எம்.ஐ.எஸ்' குழுக்கள் மூலம், மட்டுமே மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

ஒரு நாள் வேலை நிறுத்தம் - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 06.03.2014 (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 
2.2.2013  மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை  அறிவித்துள்ளது. 
தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

 1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு 
2.டிட்டோ ஜாக் அமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். 
3.இல்லை யேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு.

தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு GO வெளியிடப்பட்டது | TET 82/150 pass GO



Click Here



         
       Tamilnadu Teacher Eligibility Test ( TNTET ) - New GO now released. 82 / 150 Passingmark for reservation category candidates.

Reservation Category - ST, SC, MBC, BC, BCM Candidates

ஒரு நாள் வேலை நிறுத்தம் - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 06.03.2014 (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 
2.2.2013  மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை  அறிவித்துள்ளது. 
தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

 1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு 
2.டிட்டோ ஜாக் அமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். 
3.இல்லை யேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு.

தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

2013 டிசம்பர் மாதத்துக்கான விலைவாசிக் குறியீட்டு எண் இன்று (31.01.2014) வெளியிடப்பட்டது. இதன்படி அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயருகிறது. தற்போது 90% அகவிலைப்படி பெறும் அரசு ஊழியர்கள் 01.01.2014 முதல் 100% அகவிலைப்படி பெறுவார்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஜூலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுவழங்கப்படும். இதையொட்டி மாநில அரசும் தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கும்.

கடைசியாக கடந்த 2013 ஜூலை முதல் 80 சதவீதமாக இருந்த அகவிலைப்படியை 10 சதவீதம் அதிகரித்து தற்போது 90 சதவீதமாக இரு அரசு ஊழியர்களும் பெற்று வருகின்றனர். இனி 2013டிசம்பர்மாத அடிப்படையில் அகவிலைப் படியை அறிவிக்க வேண்டும்.

இதன்படிடிசம்பர்இறுதியில், நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் அடிப்படையில், மத்திய அரசு 10 சதவீத அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகையை ஜனவரி முதல் நிலுவையாக வைத்து வழங்கும். இதையடுத்து மாநில அரசும் அகவிலைப்படி உயர்வை மார்ச்சில் அறிவித்து, ஏப்ரலில் 3 மாத நிலுவையுடன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . 


AICPIN for the month of December 2013

Consumer Price Index Numbers for Industrial Workers (CPI-IW) December 2013
According to a press release issued by the Labour Bureau, Ministry of Labour & Employment the All-India CPI-IW for December, 2013 declined by 4 pointsand pegged at 239(two hundred and thirty nine). On 1-month percentage change, it decreased by 1.65 per cent between November and December compared with the rise of 0.46 per cent between the same two months a year ago.

The largest downward pressure to the change in current index came from Food group contributing -4.96 percentage points to the total change. At item level, Onion, Ginger, Chillies Green, Brinjal, Cauliflower, Cabbage, Peas, Tomato, Potato and other Vegetable items, Sugar etc. are responsible for the decrease in index. However, this was compensated to some extent by Fish Fresh, Eggs, Hen, Poultry, Milk, Pure Ghee, Garlic, Firewood, ESI Contribution, etc. putting upward pressure on the index.

The year-on-year inflation measured by monthly CPI-IW stood at 9.13 per cent for December, 2013, as compared to 11.47 per cent for the previous month and 11.17 per cent during the corresponding month of the previous year. Similarly, the Food inflation stood at 11.49 per cent against 16.17 per cent of the previous month and 13.53 per cent during the corresponding month of the previous year.
At centre level, Giridih recorded the highest decline of 12 points each followed by Ahmedabad, Chhindwara, Varanasi, Munger, Jamalpur, Nagpur and Bhavnagar (10 points each).Jamshedpur (09 points), Rourkela, Ludhiana, Tripura and Angul Talcher (08 points each) Among others, 7 points decrease was registered in 9 centres, 6 points in 8 centres, 5 points in 11 centres, 4 points in 8 centres, 3 points in 7 centres, 2 points in 9 centres and 1 point in 7 centres. On the contrary, Sholapur centre reported an increase of 4 points followed by Puducherry (2 points), Coimbatore and Srinagar centres 1 point each. Rest of the 3 centres’ indices remained stationary.
The indices of 37 centres are above All-India Index and other 38 centres’ indices are below national average. The index of Varanasi and Vijaywada centre remained at par with all-India index.
The next index of CPI-IW for the month of January, 2014 will be released on Friday, 28 February, 2014. The same will also be available on the office website www.labourbureau.gov.in.

- PIB

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...


ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக Ministry ofsocial justice & Empowerment இயக்குநர் ,ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பிய கடிதத்தின் நகல்...


அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டவர் மீது நடவடிக்கை; தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவு

அவதூறான வார்த்தைகளுடன் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்தவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அவதூறு வரிகள்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முளகுமூட்டை கிராமத்தை சேர்ந்தவர் ஹோமர்லால். இவர், தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அரசு அலுவலகம் குறித்து விவரங்களை கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து, தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் அப்பீல் செய்தார். அந்த அப்பீல் மனுவில், ‘தகவல் தர மறுப்பவர்களுக்கும், தவறு செய்பவர்களுக்கும் துணை செய்து, தகவல் அறியும் உரிமை சட்ட மனுக்களுக்கும் தவறான தகவல் தருபவர்கள் விபசாரிகளின் புரோக்கர்களுக்கு சமமானவர்கள்’ என்றும் ‘லஞ்சம் வாங்குபவனும், ஊழல் செய்பவனும் தன் மனைவியை மட்டுமல்ல, தனது உறவு பெண்களையும் வாடகைக்கு விடுவதற்கு சமமானவன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
கோர்ட்டு அவமதிப்பு
இவ்வாறு அவதூறு வாசகங்களுடன் மனு அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தமிழ்நாடு தகவல் ஆணையம், இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மாநில தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி, மாநில தகவல் ஆணையர்கள் பி.நீலாம்பிகை, எஸ்.எப்.அக்பர் ஆகியோர் கொண்ட முழு அமர்வு முடிவு செய்தது.
பின்னர், இதுகுறித்து விசாரணை நடத்திய இந்த அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில் கூறியிருப்பதாவது:–
தகவல் ஆணையம் என்பது, குடிமக்களுக்கு தேவையான அனைத்து விவரங்களை வழங்குவதற்காக பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ளது.
எனவே மக்களுக்கு தகவல் வழங்கவும், வழங்கப்பட்ட தகவல் சரியானதுதானா? என்பதை உறுதி செய்வதற்காகவும் மட்டுமே தகவல் ஆணையம் உள்ளது.
அதிகாரம் உள்ளது
ஆனால், மனுதாரர் தன்னுடைய மனுவில் அசிங்கமான, அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி, தகவல் கேட்டுள்ளார். இவ்வாறு அவதூறான வார்த்தைகளுடன், விவரம் கேட்பதற்காக, இந்த சட்டம் கொண்டுவரப்படவில்லை. எனவே அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம்.
கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தில், ‘கோர்ட்டு’ என்ற வார்த்தைக்கு நீதி பரிபாலனம் செய்யும் அமைப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் ஆணையமும், நீதி பரிபாலனம் செய்யும் அமைப்பு என்பதால், இந்த ஆணையத்துக்கு கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
மன்னிப்பு
இதன்படி இந்த மனுவை விசாரிக்க முடிவு செய்து, மனுதாரர் ஹோமர்லாலை 2013–ம் ஆண்டு செப்டம்பர் 11–ந் தேதி நேரில் ஆஜராக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.
ஆனால், தனக்கு உடல் நலம் சரியில்லை என்றும், அதனால் தன்னால் நேரில் ஆஜராக முடியவில்லை என்றும் மனுவில் அவதூறான வார்த்தைகளை குறிப்பிட்டதற்கு மன்னிப்பு கேட்டும் மனுதாரர் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மனுதாரர், தகவல் கேட்டு கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ள அசிங்கமான வாசகங்கள், இந்த ஆணையத்தின் நன்மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் விதமாக உள்ளது.
கண் துடைப்பு
இதனால், அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்கிறோம். அவர் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது எல்லாம் வெறும் கண் துடைப்புக்குத்தான்.
எனவே, மனுதாரர் ஹோமர்லால் மற்றும் அவரது கே.எச்.லா அசோசியேட்ஸ் பெயரில் அனுப்பும் மனுக்கள், அப்பீல் மனுக்களை தகவல் ஆணையத்தின் பதிவுத்துறை இனி ஏற்க கூடாது. மேலும், அவதூறான வார்த்தைகளை மனுவில் எழுதியதற்கு மனுதாரர் ஹோமர்லால் மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் ஆன்லைனில் பதிவேற்றம்.

தொடக்கக் கல்வித் துறையில் கல்வி மேலாண்மைத் தகவல் முறையின் (EMIS) ஓர் அங்கமான ஆசிரியர் தன்விவரங்களை (Teachers Profile) ஆன்லைனில் பதிவேற்றுவதற்காக மாவட்டக் கருத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை நேற்று (28.01.14) சென்னையில் நடைபெற்றது. 

இதில் மாவட்டத்திற்கு இருவர் வீதம் கலந்து கொண்டனர்.ஏற்கனவே ஆஃப்லைனில் பதிவு செய்த விவரங்களும் பள்ளிகளுக்கான DISE விவரங்களும் அரசு இணையத்தளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஆசிரியர்களின் தற்போதைய அடிப்படை விவரங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றியங்களில் ஆன்லைனில் பதிவிடஅறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, பணிப்பதிவேட்டிலுள்ள அனைத்துப் பதிவுகளும் பதிவிடப்படவுள்ளன. முதற்கட்டமாக அடிப்படை விவரங்களையும் புகைப்படத்தையும் தரவேற்றும் பணி பிப்ரவரிமுதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ளது.ஏற்கனவே பள்ளிகள் குறித்த DISE விவரங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன.

அதில் e-ServiceRegister என்னும் பக்கத்தில் ஆசிரியர்களின் அடிப்படை விவரங்களான பெயர் பிறந்த தேதி, பணியில் சேர்ந்த தேதி, மொழி, இனம், பதவி உயர்வு, சம்பளம், வீட்டு முகவரி, இரத்த வகை, அங்க மச்ச அடையாளங்கள், புகைப்படம், மெயில் முகவரி, செல்பேசி எண், இருசக்கர நாற்சக்கர ஓட்டுநர் உரிம எண், PAN கார்டு எண், போன்றவை தற்போது பதியப்படுகின்றன.
பணிப்பதிவேட்டில் பதியும் அனைத்து விவரங்களும் விடுப்பு, சரண்டர் போன்ற விவரங்களும் TPF, CPS, SPF, HF, பணிக்கொடை போன்றவற்றுக்கான வாரிசு நியமனம், ஆதார் எண் போன்றவையும் அடுத்த கட்டப் பணியின் போது பதிவேற்றப்பட உள்ளன.சம்பளக் கமிஷன் ஊதிய நிர்ணயம், ஓய்வுக் காலப் பயன்கள், மாநிலக் கணக்காயருக்குக்கருத்துரு அனுப்புதல், ஓய்வூதிய நிர்ணயம், பதவி உயர்வு, மாவட்ட மாறுதல், முன்னுரிமைப் பட்டியல், வாரிசு நியமனம் போன்ற அனைத்தையும் எளிதில் தெளிவாக முடிக்க e-ServiceRegister உதவிகரமாக இருக்கும் என்பதால் இம்முறையை மகிழ்ச்சியுடன் வரவேற்கலாம். மேலும் அலுவலகத்தில் பணிப்பதிவேடு சிதிலமடைந்தாலோ, வெள்ளம், தீ, இடிபாடு போன்றவற்றால் பாழடைந்தாலோ காணாமல் போய்விட்டாலோ இனி கவலைப்படத் தேவையில்லை.

தொடக்கக் கல்வி - தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவியில் தேர்வுநிலை / சிறப்புநிலை வழங்க 01.06.1988க்கு முன்னர் இடைநிலை ஆசிரியராக பணிபுரிந்த காலத்தை கணக்கிடுவது சார்பான அரசாணைகளின் தொகுப்பு

நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் MPHIL க்கான ஊக்க ஊதியம் உண்டு!


அரசு ஊழியர்கள் குறைக்கப்பட்ட ஊதியம் ஜனவரி மாத சம்பளத்தில் பிடிக்கக் கூடாது : கருவூலங்களுக்கு நிதித்துறை அவசர உத்தரவு

ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின் படி அமல்படுத்தப்பட்ட ஊதிய விகிதங்களில் முரண்பாடுகள் உள்ளதாக அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டின.முரண்பாடுகளை களைய தமிழக அரசு 3 நபர் குழுவை அமைத்தது. இந்த குழுக்களின் பரிந்துரைகள் கடந்த ஜூலை மாதம் 52 அரசு ஆணைகளாக வெளியிடப்பட்டன. 

இதில் வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை துறை, தோட்டக் கலைத் துறை, மீன்வளத்துறை, வருவாய் துறை, போலீஸ் துறை, நெடுஞ்சாலைத்துறை  உள்ளிட்ட 22 துறைகளைச் சேர்ந்த 52 பதவிகளுக்கான அடிப்படை ஊதியம், தர ஊதியத்தில் மாற்றம் செய்து தமிழக நிதித்துறை உத்தரவிட்டது.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் தரப்பில்  மூன்று ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கெனவே நிர்ணயித்து வழங்கப்பட்ட அடிப்படை ஊதியத்தை அரசு ஆணையின் அடிப்படையில் திடீரென குறைக்கக் கூடாது என அந்த மனுவில் கூறப்பட்டது. இது தொடர்பாக நிதித்துறை செயலாளர் சண்முகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: ஐகோர்ட்டில் நடந்து வரும் இந்த வழக்கின் இறுதி விசாரணை வரும் 30ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால் அரசு ஊழியர் களுக¢கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படாது என அட்வகேட் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

வழக்கு நிலுவையில் உள்ளதால் அடிப்படை ஊதியம் குறைத்து உத்தரவிடப்பட்ட ஊழியர்களுக்கு ஜனவரி மாத ஊதியத்தில் பிடித்தம் செய்யக் கூடாது. ஏற்கனவே  வழங்கப்பட்ட ஊதியத்தையே ஜனவரி மாதத்திற்கும் வழங்க வேண்டும் என அந்தந்த துறைகளின் சம்பள கணக்கு அலுவலர்கள், மாவட்ட கருவூலம், சார் நிலை கருவூலங்களில் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இளம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி

இளம் தலைமையாசிரியர்களுக்கு மூன்று நாட்கள் தலைமைப் பண்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த இந்தியா - இங்கிலாந்து கூட்டு திட்டத்தின் படி தலைமைப் பண்பு பயிற்சி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு, அரசு பள்ளிகளை மேம்படுத்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இளம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி பிப்ரவரி 3ம் தேதியில் இருந்து 8ம் தேதிக்குள் மூன்று நாட்கள் அந்தந்த மாவட்டங்களில் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், உயர் தொழில்நுட்ப முறையில் பள்ளி நிர்வாகம், ஆசிரியர் - மாணவர் உறவு, மாணவர்களின் திறனை வெளிப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

Popular Posts