அரசு ஊழியர் சங்கம் எந்த கட்சிக்கு ஆதரவு

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, காலிப்பணியிடத்தை நிரப்பி, சம்பள வரையறை உள்ளிட்ட, நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற, தேர்தல் வாக்குறுதி வழங்குபவர்களுக்கு, 13 லட்சம் அரசு ஊழியர்கள் ஆதரவு அளிப்பர்,'' என, அரசு ஊழியர் சங்க மாநில செயலர், தமிழ்செல்வி தெரிவித்தார்.

ஈரோட்டில், தமிழ்நாடு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நடந்த, மகளிர் கருத்தரங்கில் பங்கேற்ற, தமிழ்செல்வி, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என, 13 லட்சம் பேர் உள்ளனர். அனைத்து மாநிலங்களும், ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி, அதிகரிக்கப்பட்ட சம்பளம் வழங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் இன்று வரை கிடைக்கவில்லை.

கடந்த சட்டசபை தேர்தலின்போது, தொகுப்பு, மதிப்பு ஊதியமுறை ரத்து, புதிய பென்ஷன் திட்டம் திருத்தம், ஊதியக்குழு முரண்பாடு களைதல், ஊழியர் சங்கங்களை, மூன்று மாதத்துக்கு ஒருமுறை சந்தித்து பேசுதல் என, பல வாக்குறுதிகளை அளித்த, தமிழக முதல்வர், ஜெயலலிதாவை, மூன்றாண்டுகளாக சந்திக்க முடியவில்லை.

சென்னையில், முதல்வரை சந்திக்க, ஒரு லட்சம் பேரை திரட்டி, பேரணி நடத்தியபோதிலும், சந்திக்க முடியவில்லை. புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு, சிறப்பு கால முறை ஊதியம் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கையை நிறைவேற்ற, வாக்குறுதி அளிப்பவருக்கு மட்டுமே, லோக்சபா தேர்தலில், அரசு ஊழியர் சங்கம் ஆதரவு அளிக்கும். இவ்வாறு, அவர் கூறினார். தமிழகத்தில், அடுத்த மாதம், 24ல், லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும்: தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார்

"தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்கள், இரண்டு மணி நேர பயண தூரத்திற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில் பணி அமர்த்தப்பட வேண்டும்' என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது.

இது குறித்து, தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி, பிரவீண்குமார் கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் பணியில், மூன்று லட்சம் மத்திய, மாநில, அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பெரும்பாலும் அரசு ஊழியர்கள், பணி அமர்த்தப்படுகின்றனர்.

போதிய அரசு ஊழியர் இல்லாத மாவட்டங்களில், தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஊழியர்களை பணியமர்த்த, தேர்தல் கமிஷன், அனுமதி வழங்கி உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஊழியர்களை, அவர்கள் வசிப்பிடத்தில் இருந்து, இரண்டு மணி நேர பயண தொலைவிற்குள் உள்ள, ஓட்டுச்சாவடிகளில், பணி அமர்த்த வேண்டும் என்றும், தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. 

எனவே, பெண்கள், இரவே, ஓட்டுச் சாவடிக்கு வந்து, தங்க வேண்டியதில்லை. பகலில் வந்தால் போதும். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஊழியர்கள், பணிக்கு வர முடியாத நிலையில் இருந்தால், மாவட்ட தேர்தல் அலுவலருக்கு, விண்ணப்பிக்க வேண்டும். அவர் இறுதி முடிவெடுப்பார்.
தேர்தல் பணிக்கு வராத ஊழியர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பாஸ்போர்ட் பெற அலையும் ஆசிரியர்கள் : அரசாணை நடைமுறைப்படுத்த வலியுறுத்தல்

தொடக்க கல்வித்துறை, அரசாணை 140ஐ, இதுவரை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதால், தொடக்க பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கான தடையின்மை சான்று வாங்க அலைக்கழிக்கப்படும் சூழல் உள்ளது. தமிழக அரசின் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பில், 2013 நவ., 21ல் வெளியிட்ட அரசாணை எண்:140ன் படி, 'தமிழக அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்வதற்கு, பாஸ்போர்ட் பெற துறையின் தடையில்லா சான்று துறைத்தலைவரால் மட்டுமே பெறப்பட வேண்டும் என்ற விதி உள்ளது. 
 
இனி, 'பி, 'சி மற்றும் 'டி' ஊழியர்கள் தடையில்லா சான்றிதழை, அவர்கள் துறை சார்ந்த நியமன அலுவலர்களே வழங்கலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. ''தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள், பாஸ்போர்ட் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். 
 
பாஸ்போர்ட் வாங்கினாலும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்வதற்கும் துறை தலைவரிடம் தடையின்மை சான்று வாங்கவேண்டும். இதற்கு, மாற்றாக அரசு வெளியிட்ட அரசாணையை தொடக்க கல்வித்துறை இதுவரை நடைமுறைபடுத்தவில்லை. மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களே தடையின்மை சான்று வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும்,'' என்றார். ஆனால், தொடக்க கல்வி துறையில் இதுவரை இந்த அரசாணை குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனால், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க விரும்பும் தொடக்க பள்ளி ஆசிரியர்கள், இயக்குனர் அலுவலகத்துக்கு அலைய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்

இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

இந்த 4 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பில் சேர்ந்தால் இளங்கலை பட்டம் மற்றும் பி.எட். பட்டத்தை ஒருசேர பெற்றுவிடலாம்.கலை, அறிவியல் கல்லூரிகளில் படிப்பவர்கள் ஆசிரியர் பணியில் சேர விரும்பினால் பட்டப் படிப்பை முடித்துவிட்டு அதன்பிறகு கல்வியியல் கல்லூரியில் பி.எட். படிப்பில் சேருவார்கள். அதற்கு தனியே விண்ணப்பித்து இடம் கிடைக்குமா என்று தேடிஅலைய வேண்டும்.

வரும் கல்வியாண்டில் அறிமுகம்

இந்நிலையில், பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பை ஒருங்கிணைந்த 4 ஆண்டுகால படிப்பாக (பி.ஏ.எட். மற்றும் பி.எஸ்சி.எட்.) திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வரும் கல்வியாண்டு (2014-15) அறிமுகப்படுத்த உள்ளது. கலை அல்லது அறிவியல் பிரிவு என தங்களுக்கு விருப்பமான ஒருங்கிணைந்த பி.எட். படிப்பை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

பிளஸ் 2 தகுதி

இந்த ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகளில் பிளஸ் 2 முடித்தவர்கள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் அவசியம். ஓ.பி.சி. பிரிவினர் 55 சதவீத மதிப்பெண், எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 50சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதும்.கலை, அறிவியல் ஆகிய பிரிவுகளில் ஒவ்வொன்றிலும் தலா 30 இடங்கள் உள்ளன. இந்த பல்கலைக்கழகம் மத்திய கல்வி நிறுவனம் என்பதால் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், ஓ.பி.சி. (இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு) வகுப்பினர் ஆகியோருக்கு இடஒதுக்கீடு உண்டு.

ஏப்ரலில் நுழைவுத்தேர்வு

தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு அடிப்படையில் மேற்கண்ட படிப்புகளுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். தமிழகத்தில் திருவாரூர், சென்னை, மதுரை, கோவை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நுழைவுத்தேர்வு ஏப்ரல் 26, 27-ம் தேதிகளில் நடைபெறும்.நுழைவுத்தேர்வு எழுத விரும்புபவர்கள் ஏப்ரல் 2-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucet2014.co.in) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத்தேர்வு, பாடத்திட்டம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் (www.cutn.ac.in) விளக்கமாக தெரிந்துகொள்ளலாம்.தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.) அனுமதி கிடைத்ததும் வரும் கல்வியாண்டில் ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் (கல்வி) ஏ.ஆர்.வெங்கடகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இதுபோன்ற ஒருங்கிணைந்த பி.ஏ.எட்., பி.எஸ்சி.எட். படிப்புகள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள மண்டல கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் வழங்கப்படுகிறது. இத்தகைய ஒருங்கிணைந்த பி.எட். படிப்புகள் தமிழகத்தில் தொடங்கப்படுவது இதுவே முதல்முறை.

கர்ப்பிணி, மாற்றுத்திறனாளி தவிர அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும்

நாடாளுமன்ற தேர்தலில் 3 லட்சம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்ற அரசு ஊழியர்கள் அனைவரும் தேர்தல் பணியாற்ற வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறினார்.

சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார், நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:நாடாளுமன்ற தேர்தலுக்காக தற்போது நடிகர் கமலஹாசன் மூலம், ‘உங்கள் வாக்கினை விற்காதீர்கள்’ என்று புதிதாக ஒரு குறும்படம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அது கேபிள் டிவி மற்றும் தியேட்டர்களில் ஒளிபரப்பு செய்யப்படும்.

அரசியல்வாதிகள், வியாபாரிகள், பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக பணம் எடுத்து சென்றால் கண்டிப்பாக, அதற்கான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். ஆவணம் இல்லாவிட்டால், அரசியல்வாதிகளுக்குத்தான் கொண்டு செல்கிறார்கள் என சந்தேகம் ஏற்படுகிறது. அதனால்தான் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் நேற்று வரை ரூ.6.85 கோடி பணமும், ரூ.47 லட்சம் மதிப்புள்ள தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ரூ.6 கோடி பணத்தை திரும்பப் பெற ஒருவர்கூட வரவில்லை. அதேபோன்று கடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட ரூ.36 கோடி பணத்தை பெற யாரும் வராததால் அந்த பணம் வருமான வரி அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள படம் இரட்டை இலைதான் என்று நீதிமன்றத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. அதை உடனடியாக மறைக்க போக்குவரத்துறை செயலாளருக்கு கடந்த புதன்கிழமை கடிதம் எழுதப்பட்டது. தற்போது அதிமுக சார்பில் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், திங்கட்கிழமை வரை அவகாசம் கேட்டு தேர்தல் கமிஷனுக்கு அரசு போக்குவரத்து துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.

மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டுமென சிலர் தவறாக கூறி வருகிறார்கள். ஆனால், மறைந்த தலைவர்கள் சிலையை மூட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் எப்போதுமே உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால், தலைவர்களின் சிலைகளை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. மறைந்த அரசியல் கட்சி தலைவர்களின் சினிமா படம் குறித்த போஸ்டர் பொது இடங்களில் ஒட்டக்கூடாது. தியேட்டருக்குள் ஒட்ட தடையில்லை.

தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக சுமார் 3 லட்சம் அரசு ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் கண்டிப்பாக தேர்தல் பணியாற்ற வேண்டும். கர்ப்பிணி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்வு எழுதும் ஊழியர்கள் தகுந்த ஆதாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் காட்டி விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். மற்றவர்கள் தேர்தல் பணியை புறக்கணித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மணி நேரம் பயணம் செய்யும் தூரத்தில்தான் தேர்தல் பணி வழங்கப்படும். வாக்குச்சாவடி மையங்களில் இரவு தங்க வேண்டிய நிலை பெண் ஊழியர்களுக்கு ஏற்படாது. சில வாக்குப்பதிவு மையங்களில் அரசு ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டால், தனியார் பள்ளி ஊழியர்களை ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுபவர்கள் மீது புகார் தெரிவிக்க மாவட்டம் வாரியாக தனியாக இணையதளம் மற்றும் இலவச தொலைபேசி எண் வெளியிடப்பட்டுள்ளது. அதை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன் மூலமாகவே படம் எடுத்து தேர்தல் கமிஷனுக்கு அனுப்பினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? தெரிந்துகொள்ள புதிய எஸ்எம்எஸ் வசதி:

வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள், தங்களது பெயர் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள தேர்தல் கமிஷன் எளிதான ஒரு வழிமுறையை முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது. உங்கள் செல்போனில் epic என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு, வாக்காளர் அடையாள அட்டையில் இடம்பெற்றுள்ள எண்ணை டைப் செய்து, 9444123456 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். உடனே, உங்கள் செல்போனுக்கு வாக்காளரின் பெயர், பாகம் எண், எந்த ஓட்டு சாவடி உள்ளிட்ட விவரங்கள் வந்து விடும். பெயர் இல்லாவிட்டால், ‘1950 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்‘ என்று பதில் வரும். இதையடுத்து வாக்காளர்கள் தேர்தல் கமிஷனின் கால்சென்டர் நம்பரான 1950 எண்ணில் தொடர்பு கொண்டு, உங்கள் வாக்காளர் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பதை தெரிந்து கொண்டு, புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள வாக்காளர்கள் 9444123456 என்ற தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். பொதுமக்கள், தங்களிடம் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை இருக்கிறது. நாம் வாக்களித்து விடலாம் என்று நினைக்காதீர்கள். வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என்று பிரவீன்குமார் கூறினார்.

போராட்டத்தில் கலந்த கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய பிறப்பித்த உத்தரவு வாபஸ்

தொடக்கக் கல்வித்துறை ஆசிரியர்கள், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல் மற்றும் 7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதையடுத்து இதில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு ஒரு நாள் ஊதியப் பிடித்தம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவியது.
இதையடுத்து தொடக்கக் கல்வி இயக்குனர் அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்ய வேண்டாம் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அலுவலக செய்திகள் கூறுகின்றன.
அரசு ஆசிரியர்களின் போராட்ட உணர்வை புரிந்து அரசு பின் வாங்கியுள்ளது.
இது வெற்றியின் முதல்படி!
TITO-JAC கின் ஒற்றுமை ஓங்குக!!

652 கணினி ஆசிரியர்களை பதிவு மூப்பின் படி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு


Tamilnadu Department of School Education 3rd Term Exam Timetable.

Click Here

பள்ளிக்கல்வி - தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மூன்றாம் பருவத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியீடு I தேர்வுகள் ஏப்ரல் 3ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 16ஆம் முடிகிறது I ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வுகள் மார்ச் 25க்குள் முடிக்க வேண்டும்.

த.அ.உ.சட்டம் - 2005 - அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரிபவர் அரசு பள்ளியில் பணியில் சேரும் பொழுது அரசாணை எண்.1072ன் படி ஊதியம் நிர்ணயம் செய்து பெறலாமா? அரசுக் கடிதம்




அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் போட்டோவுடன் அடையாள அட்டை அணிய வேண்டும்: பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா

"அனைத்து அரசு பணியாளர்களும், கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும்' என, பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.  
தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களை, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 64 கல்வி மாவட்டங்களாக பிரித்துள்ளனர். தமிழகத்தில், அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மொத்தம், 36,813 பள்ளிகளும், 8,395 நிதியுதவி பள்ளிகளும், 11,365 சுயநிதி பள்ளி என மொத்தம், 56,573 பள்ளி உள்ளன. இந்த பள்ளிகளில், கல்வி பயிலும், 1.35 கோடி மாணவர்களுக்கு, 56,000 ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் வரும், அனைத்து துறையினருக்கும், அரசு முதன்மை செயலர் சபிதா அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அந்த சுற்றறிக்கையில், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் கீழ், அனைத்து அரசு பணியாளர்களும், அலுவலகத்தில் பணியாற்றும் நேரங்களில், தவறாமல் அவர்களது போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிதல் வேண்டும், என ஆணையிட்டுள்ளார். முன்பு இருந்த அடையாள அட்டையில், அரசு பணியாளர்களது பெயர் மற்றும் பதவி ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது. 
 
அந்த முறையை நவீனப்படுத்தும் விதமாக, அடையாள அட்டையில், பணியாளர்களின் பெயர் மற்றும் பதவியை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒன்றின் கீழ் ஒன்று இடம் பெறுமாறு மாற்றி அமைத்து, அடையாள அட்டை வழங்க, அனைத்து துறை தலைவர்களுக்கும், கலெக்டருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் வெற்றி, ஒரு இலட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு



''சம்பள பிடித்தம் அறிவிப்பு, தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,''

ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.


மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல் உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க கல்வித்துறை சார்ந்த, ஆறு ஆசிரியர் சங்கங்கள், நேற்று ஒருநாள், வேலை நிறுத்த போராட்டம் நடத்தின. இதை முறியடிக்க, தொடக்க கல்வித்துறை, பல நடவடிக்கைகளை எடுத்தது.

சம்பளம் 'கட்':

எனினும், மாநிலம் முழுவதும், 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் பங்கேற்றதாக, அண்ணாமலை தெரிவித்தார். அவர் கூறியதாவது: ஒரு பக்கம், வேலை நிறுத்தம் செய்தால், சம்பளம், 'கட்' எனவும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், துறை இயக்குனர், மிரட்டியபடி இருந்தார். மற்றொரு பக்கம், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையும் தாண்டி, 60 ஆயிரம் ஆசிரியர், வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டது, மிகப் பெரிய வெற்றி. ஒவ்வொரு மாவட்டத்திலும், சராசரியாக, 2,000 ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றனர். 


 ஆனாலும், துறை அதிகாரிகள், அரசுக்கு, குறைவான எண்ணிக்கையை காட்டி, அறிக்கை அனுப்புவர். அவர்களுக்கு, வேறு வழி இல்லை. தேர்தலுக்குப் பின், முதல்வர், ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து, பேச்சு நடத்தி, பிரச்னைகளுக்கு சுமுக தீர்வு எடுக்க வேண்டும். இல்லை எனில், ஆறு ஆசிரியர் சங்கங்கள் மட்டும் இல்லாமல், ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களையும் சேர்த்து, போராட்டம் நடத்துவோம். இவ்வாறு, அண்ணாமலை தெரிவித்தார்.

சில கேள்விகளும் பதில்களும்:

மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)? 

இல்லை , ஒப்புதலுக்கான பரிசீலனையில் தான் உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமுலுக்கு வந்துள்ளதால், இனி தேர்தலுக்கு பின்பே அது சார்ந்த அறிவிக்க முடியும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வருமா?

தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருந்தாலும், இயல்பான செயல்முறை என்பதால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று அரசு அறிவிக்க இயலும். எனவே அறிவிப்பு வரலாம்.


இடைநிலை to பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவியுயர்வு கலந்தாய்வு நடைபெறுமா, அது 2013 அல்லது 2014 எந்த முன்னுரிமைப் பட்டியல் படி வரும்?

இது குறித்து நாம் இரட்டை பட்ட வழக்கிற்கு அளித்த பதிலைப்போலவே பதில் கூற முடியும், அதாவது எது ஒன்றும் முறையான அறிவிப்பிற்கு பின்பே உறுதியாக அறிய முடியும். அது வரை காத்திருப்பதும். 

ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை "நோட்டீஸ்'

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், 6வது ஊதியக்குழுவில், மத்திய அரசு, இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கி உள்ள ஊதியத்தை, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும், 2006, ஜன., 1ம் தேதி முதல், வழங்க வேண்டும்;


 பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் உட்பட, ஏழு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள், கடந்த, 25ம் தேதி, உள்ளிருப்பு வேலை நிறுத்த போராட்டம், 26ல், ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு எடுத்தனர். உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், நாமக்கல் மாவட்ட தலைவர், அண்ணாதுரை கூறியதாவது: போராட்டத்தில் ஈடுபட்ட, 62 ஆயிரம் ஆசிரியர்களிடம், அந்தந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம் மூலம், விளக்கம் கோரப்பட்டுள்ளது; மாவட்டம் வாரியாக, கடந்த, 3ம் தேதி முதல், நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.

நிர்வாக ரீதியாக, ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை முறைப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு, அவர் கூறினார். இந்நிலையில், நாளை, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அல்லாத, மற்ற ஆசிரியர் சங்கம் மற்றும் கூட்டணி சார்பில், வேலை நிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. நாளை, பள்ளிக்கு விடுப்பு விடப்பட்டதாக தெரிய வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு: நாளை முதல் விண்ணப்பங்கள் விநியோகம்

சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களிலும்  நாளை(மார்ச் 5) முதல் விநியோகிக்கப்பட உள்ளன.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் வரும் 25-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும். விண்ணப்பங்களை ரூ.50 செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 28-ஆம் தேதி நடைபெற உள்ளது.


பி.எட். முடித்த மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையிலும், ஆசிரியர் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பின்னடைவு காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையிலும் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.பட்டதாரி ஆசிரியர்களுக்காக இந்தத் தேர்வு நடத்தப்படுவதால், இரண்டாம் தாள் தேர்வு மட்டுமே நடத்தப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இந்தத் தேர்வில் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் பேர் வரை பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

தேர்தல் அறிவிப்பு எதிரொலி: திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று வேலை நிறுத்தம் நடைபெறும், டிட்டோஜாக் முடிவு

நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு நாளை வெளியாக உள்ள செய்தி இன்று மாலை வெளியானது, இதையடுத்து நாளை மறுநாள் நடைபெறவுள்ள டிட்டோஜாக் சார்பில் மாபெரும் ஒரு நாள் வேலை நிறுத்தத்திற்கு முட்டுக்கட்டை ஏற்படுமோ என பரவலாக ஆசிரியர்கள் மத்தியில் பேசப்பட்டது.
 
 இதையடுத்து டிட்டோஜாக தலைவர்கள் உடனடியாக மூத்த வழக்கறிஞ்சர்களை தொடர்பு கொண்டு தேர்தல் அறிவிப்பு வெளியாவது குறித்த வினவினர். 
 
அப்பொழுது வழக்கறிஞ்சர்கள் சார்பில் வேலை நிறுத்தம் செய்வதால் ஏதும் பிரச்சனை இல்லை என்று உறுதியளித்துள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து டிட்டோஜாக் தலைவர்கள் திட்டமிட்டப்படி 06.03.2014 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி - 2014ம் கல்வியாண்டிற்கான AEEO / AAEEO பணிமாறுதல் மூலம் நியமனம், AEEO பதவிக்கு நிர்ணயிக்கப்பட்ட 5 தேர்வுகளிலும் முழுமையாக தேர்ச்சி பெற்று 31.12.2013 முடிய முழுத்தகுதி பெற்ற ஊ.ஒ / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பட்டியலை (SENIORITY LIST) மாவட்ட அளவில் தயார் செய்து அனுப்ப உத்தரவு

தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவருக்கெல்லாம் ஆசிரியர் வேலை கிடைக்காது


இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதனை பின்பற்றி மாநில அரசு தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை 2012ம் ஆண்டு ஜூலை மாதம் நடத்தியது.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த தேர்வில் 6.67 லட்சம் பேர் எழுதியதில் 0.3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.


 அப்போது இடைநிலை ஆசிரியர் தேர்வில் 1735 பேரும், பட்டதாரி ஆசிரியர் 713 பேரும் மட்டுமே தேர்ச்சி பெற்றனர்.கேள்வித்தாள் கடினம், தேர்வு எழுத ஒன்றரை மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்டவை தேர்ச்சி விகிதம் குறைய காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து அதே ஆண்டு அக்டோபரில் துணைத் தேர்வு ஒன்றும் நடத்தப்பட்டது.

அப்போது தேர்வு நேரம் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிக்கப்பட்டது. கேள்வித்தாள் கடினத்தன்மையும் மாறிட இத்தேர்வில் 3 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல்தாள் தேர்வில் 10,397 பேரும், இரண்டாம் தாள் தேர்வில் 8849 பேரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சிபெற்றவர் மொத்த எண்ணிக்கை 19,246 ஆக இருந்தது.இதன் தொடர்ச்சியாக கடந்த 2013 ஆண்டு ஆகஸ்டில் 3 வது ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. முதல் தாள் தேர்வை 2.67 லட்சம் பேரும், 2ம் தாள் தேர்வை 4.11 லட்சம் பேரும் எழுதினர். இதில் முதல் தாளில் 12,596 பேரும், 2ம் தாளில் 14,496 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

கேள்வித்தாள் குளறுபடி காரணமாக கோர்ட் உத்தரவை தொடர்ந்து 2ம் தாள் தேர்வில் நீக்கப்பட்ட கேள்விகளுக்கு 2 மதிப்பெண் வழங்கப்பட்டதால் வெற்றிபெற்றவர்கள் 2436 பேர்அதிகரித்து 16,932 ஆக உயர்ந்தது. அந்த வகையில் தேர்ச்சி 29,528 ஆக உயர்ந்தது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற 150க்கு 90 மதிப்பெண் எடுத்தால்தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. ஆனால் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருக்க மதிப்பெண்ணில் சலுகை அறிவிக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.

தகுதித் தேர்வில் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டு 5 சதவீத மதிப்பெண் சலுகையை தமிழக முதல்வர் அறிவித்தார். கடந்த பிப்ரவரி 6ம் தேதி இது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. இதில் இட ஒதுக்கீடு அடிப்படையில் மதிப்பெண் 82 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் தளர்வு 2013 ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட தேர்வுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

இதனால் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை மேலும் 47 ஆயிரம் அதிகரித்தது.ஏற்கனவே கடந்த ஆண்டு நடந்த தேர்வில் 29,528 பேர் தேர்ச்சி பெற்றிருக்க, மதிப்பெண் தளர்வை தொடர்ந்து 47 ஆயிரம் பேருமாக சேர்த்து 76 ஆயிரம் பேர் நாங்களும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டோம், எங்களுக்கு எப்போது ஆசிரியர் வேலை தருவீர்கள்? என்ற கோரிக்கையுடன் காத்திருக்க தொடங்கிவிட்டனர். இந்த காத்திருப்பு இனி நீண்ட கால காத்திருப்புத்தான் என்ற கசப்பான உண்மை இப்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு தெரிய தொடங்கியுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி, சான்றிதழ் சரிபார்ப்பில் ஒ.கே, ஆனாலும் இவர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை எப்போது வழங்கப்படும் என்பதுமில்லியன் டாலர் கேள்வியாகியுள்ளது.தற்போதைய நிலவரப்படி 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், 13 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் என்று 15 ஆயிரம் ஆசிரியர் காலி பணியிடங்கள் மட்டுமே உள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தேர்ச்சி பெற்ற 76 ஆயிரம் பேரில் இருந்து 15 ஆயிரம் பேருக்கு மட்டுமே வேலை கிடைப்பதற்கான முதல்கட்ட வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையும். எனவே அடுத்து வரும் 2 கட்ட பணி நியமனத்தில் இதர காத்திருப்போருக்கு வேலை கிடைக்கும் என்று கருதினால் அது இலவு காத்த கிளியின் கதையாகிப்போய்விடும் என்கின்றனர் விபரம் அறிந்தவர்கள்.

தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.காலி பணியிடம் 12 ஆயிரம்; தேர்ச்சி பெற்றவர் 76 ஆயிரம்இனி பாஸ் ஆனால் போதாது; பர்ஸ்ட் கிளாஸ் வேண்டும்தேர்வும்... தேர்தலும்...தகுதிதேர்வு எழுதி ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், தகுதித் தேர்வு தொடர்பாக அரசு புதிது புதிதாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுவதாக கருதுகிறோம். இது தேர்வு எழுதி வேலைக்கு காத்திருப்போர் மத்தியில் தேவையற்ற குழப்பங்களையே ஏற்படுத்தி வருகிறது. இதன் மூலம் வரும் காலங்களில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு கல்வி நிறுவனங்களில் சேருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறையும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பாக வெளிப்படையாக எதனையும் தெரிவிப்பது இல்லை. இதனால் எங்களுக்கு வேதனையே மிஞ்சுகிறது என்றனர்.தகுதித்தேர்வு எழுதி 2013ம் ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் ஆசிரியர் பணிக்கு தேர்வாகும் அதே வேளையில், 2014ம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றால் அதில் அதிக மதிப்பெண் பெறுபவர்கள், ஏற்கனவே 2013ல் காத்திருப்போருடன் ஒப்பீடு செய்யப்பட்டு அதில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் சலுகைகள் காலியிடங்களுக்கு ஏற்ப மிதமான தேர்ச்சி, தரமான ஆசிரியர்கள் என்ற சூழலை மாற்றி குறைவான இடங்களுக்கு அதிகமானோர்போட்டி என்ற சூழலை உருவாக்கிவிட்டுள்ளது.

இவை ஒருபுறம் இருக்க 2012ம் ஆண்டில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்றவர்களுக்கும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டு தேர்வு எழுதியவர்கள் ஐகோர்ட் கதவினை இப்போது தட்டியுள்ளனர். இது தொடர்பான மனு, ஐகோர்ட் விசாரணையில் இருந்து வருகிறது. இதில்2012ம் ஆண்டிலும் நடந்த தேர்விலும் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்றுநீதிமன்றம் உத்தரவிட்டால் தகுதியானவர் எண்ணிக்கை மேலும் சுமார் 40 ஆயிரம் வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை லட்சத்தை தாண்டவும் வாய்ப்பு உள்ளது.ஆனால் அந்த அளவிற்கு ஆசிரியர் பணி காலி பணியிடங்கள் இல்லை என்பதுடன் வரும் ஆண்டுகளிலும் அதிக அளவில் காலியிடங்கள் ஏற்படாது என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன. 2013&14ம் கல்வியாண்டில் தொடக்க கல்வித்துறையில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கையை பொறுத்து வேலைவாய்ப்பு ஓரளவு புதிதாக உருவாகும்.

அதே வேளையில் 2014&15ம் ஆண்டுகளில் பணி ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது. பணியில் சேர்ந்துள்ளவர்கள் ஏராளமானோர் இளவயதினராக இருப்பதால் வரும் காலங்களில் காலியிடங்கள் ஏற்படும் வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை கிடைக்கும் என்ற கனவு தகர்ந்துள்ளது.

ஏழாவது ஊதியக் குழு அமைப்பது மற்றும் ஊழியர்களின் பரிசீலினைகளை ஆராய்வதற்கான அதிகாரப் பூர்வ அறிவிக்கை வெளியீடு

GOVERNMENT OF INDIA PUBLISHED THE GAZETTE NOTIFICATION  FOR SEVENTH CENTRAL PAY COMMISSION

Ministry Of Finance

(Department of Expenditure)
RESOLUTION
New Delhi, the 28th Febraury,2014
No.1/1/2013-E.III(A)
The Government of India have decided to appoint the Seventh Central Pay Commission comprsing the fallowing
1.Chairman – Justice Shri Ashok kumar Mathur

2.Member – Shri Vivek Rae
3.Member – Dr. Rathin Roy
4.Secretary – Smt. Meena Agarwal

2.The terms of reference of the commission will be as fallows
a) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding the principles that should govern the emoluments structure including pay, allowances and other facilities/benefits, in cash or kind, having regard to rationalization and simplification therein as well as the specialized needs of various Departments, agencies and services, in respect of the following categories of employees:-
  • i. Central Government employees-industrial and non-industrial;
  • ii. Personnel belonging to the All India Services;
  • iii. Personnel of the Union Territories;
  • iv. Officers and employees of the Indian Audit and Accounts Department;
  • v. Members of regulatory bodies (excluding the Reserve Bank of India) set up under Acts of Parliament; and
  • vi. Officers and employees of the Supreme Court.
b) To examine, review, evolve and recommend changes that are desirable and feasible regarding principles that should govern the emoluments structure, concessions and facilities/benefits, in cash or kind, as well as retirement benefits of personnel belonging to the Defence Forces, having regard to historical and traditional parities, with due emphasis on aspects unique to these personnel.
c) To work out the framework for an emoluments structure linked with the need to attract the most suitable talent to Government service, promote efficiency, accountability and responsibility in the work culture, and foster excellence in the public governance system to respond to complex challenges of modern administration and rapid political, social, economic and technological changes, with due regard to expectations of stakeholders, and to recommend appropriate training and capacity building through a competency based framework.
d) To examine the existing schemes of payment of bonus, keeping in view, among other things, its bearing upon performance and productivity and make recommendations on the general principles, financial parameters and conditions for an appropriate incentive scheme to reward excellence in productivity, performance and integrity.
e) To review the variety of existing allowances presently available to employees in addition to pay and suggest their rationalization and simplification, with a view to ensuring that the pay structure is so designed as to take these into account.
f) To examine the principles which should govern the structure of pension and other retirement benefits, including revision of pension in the case of employees who have retired prior to the date of effect of these recommendations, keeping in view that retirement benefits of all Central Government employees appointed on and after 01.01.2004 are covered by the New Pension Scheme (NPS).
g) To make recommendations on the above, keeping in view:
  • i. the economic conditions in the country and need for fiscal prudence;
  • ii. the need to ensure that adequate resources are available for developmental expenditures and welfare measures;
  • iii. the likely impact of the recommendations on the finances of the State Governments, which usually adopt the recommendations with some modifications;
  • iv. the prevailing emolument structure and retirement benefits available to employees of Central Public Sector Undertakings; and
  • v. the best global practices and their adaptability and relevance in Indian conditions.
  • h) To recommend the date of effect of its recommendations on all the above.
3.The Commission will devise its own procedure and may appoint such advisors, Institutional Consultants and Experts, as it necessary for any particular purpose. It may call for such information and take such evidence, as it may consider necessary. Ministries and Departments of Government of India shall furnish such information and documents and other assistance as may be required by the commission. The government of India trusts the State Governments, Service Associations and other concerned will extend to the Commission their fullest cooperation and assistance
4.The Commission will have Headquarters in Delhi
5.The Commission will make its recommendations within 18 months of the date of its constitution. It may consider, if necessary, sending interim reports on any of the matters as and when the recommendations are finalised.
.

                                                                                                                     RATAN P.WATAL, Secy

புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கும் கட்சிக்கே வாக்கு, அரசு பணியாளர் சங்க தலைவர் பேட்டி


வன்முறையை தூண்டும் பேச்சு - ஆசிரியர் சங்க நிர்வாகி மீது நடவடிக்கை : மாவட்ட நிர்வாகம் உத்தரவு

சிவகங்கையில், வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி மீது, நடவடிக்கை எடுக்க, கல்வித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2 மாதத்திற்கு முன்பு, திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவரால், அதே பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தை கண்டித்து, ஆசிரியர் சங்கத்தினர் சிவகங்கை முதன்மை கல்வி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பினர். 

அப்போது, பேசிய, ஆசிரியர் சங்க நிர்வாகி சேவியர், "மாணவர்கள் கத்தி எடுத்தால், ஆசிரியர்களும் ஆயுதங்கள் தூக்க வேண்டிய அவசியம் ஏற்படும் என, வன்முறையை தூண்டும் அளவிற்கு பேசியுள்ளார். அவர் மீது உரிய முறையில் விசாரணை நடத்தி, தவறு இருக்கும் பட்சத்தில், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதன்மை கல்வித்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கல்வித்துறை அலுவலர்கள் கூறுகையில், "மாவட்ட
நிர்வாகத்திடம் இருந்து உத்தரவு வந்துள்ளது. விசாரித்து, தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு விசாரணை செய்ய உள்ள துறைகள் மற்றும் பணியிடங்கள் விபரம்

1. AGRICULTURE DEPARTMENT
2. AGRICULTURAL ENGINEERING DEPARTMENT
3. ANIMAL HUSBANDRY DEPARTMEN
4 .FISHERIES DEPARTMENT.
5. HIGHWAYS DEPARTMENT

6. RURAL DEVELOPMENT DEPARTMENT

7. INDUSTRIES AND COMMERCE DEPARTMENT
8. INSPECTOR OF FACTORIES DEPARTMENT
9. STATE HEALTH TRANSPORT DEPARTMENT
10 MOTOR VEHICLE MAINTENANCE DEPARTMENT
11. SERICULTURE DEPARTMENT
12. PUBLIC WORKS DEPARTMEN
13. STATE TRANSPORT AUTHORIT
14. DIRECTORATE OF DIFFERENTLY ABLED REHABLITATION DEPARTMENT
15. TOWN PANCHAYA
16. ELECTRICAL INSPECTORAT
17.I CHENNAI CORPORATION
18. REVENUE DEPARTMENT
19. POLICE DEPARTMEN
20. FOREST DEPARTMENT

அடிப்படை சம்பளத்துடன் டிஏ இணைப்பு : 7-வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு -

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய பணியாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
( இது பத்திரிக்கை செய்தி மட்டுமே, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை)


பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதற்கு நேரிடையாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள விகிதம் பரிந்துரை செய்ய 7 வது சம்பள கமிஷன் அண்மையில் நியமிக்கப்பட்டது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7 வது சம்பள கமிஷன் முடிவு எடுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்பின்னர் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இது அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் அளவுக்கு சம்பளம் உயரும் என மத்திய பணியாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை உள்பட 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மார்ச் 12-ம் தேதி முதல் சென்னை, திருச்சி, கோவை உள்பட 5 இடங்களில் நடத்தப்பட உள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி மதிப்பெண் 5 சதவீதம் குறைக்கப்பட்டது. 

இதனால், கூடுதலாக 46 ஆயிரத்தும் மேற்பட்டோர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின்www.trb.tn.nic.inஎன்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் முதல் தாளில் 1,098 பேரும், 2-வது தாளில் 1570 பேரும் வெற்றிபெற்றுள்ளனர். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் பெயர் விவரங்கள் மாவட்ட வாரியாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. முதல்கட்டமாக முதல் தாளில் வெற்றிபெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு மார்ச் 12-ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட உள்ளது. இதற்கான அழைப்புக்கடிதமும் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை, திருச்சி, கும்பகோணம், சேலம், மதுரை ஆகிய 5 இடங்களில் மண்டல அளவில் நடத்தப்பட உள்ளது.

எந்தெந்த மாவட்டங்களுக்கு எந்த மண்டலத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு என்ற விவரம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர்,மதுரை மாவட்டங்கள் எம்.ஆர்.ஆர். எம்.ஏ.வி.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், அண்ணா பஸ் ஸ்டாண்ட், மதுரை-20 ( போன் நம்பர் 0452-2531754).

திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், தேனி மாவட்டங்கள் ஏ.டி.எம்.ஆர்.சி.எம். வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 11, பேர்ட்ஸ் ரோடு, கண்டோன்மென்ட், திருச்சி-1 (போன் நம்பர் 0431-2416648).

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்கள் சாரதா பாலமந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாஜி ரோடு, சேலம்-7 (போன் நம்பர் 0427-2412160)

திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள்  மாதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பஸ் ஸ்டாண்ட் அருகில், கும்பகோணம் (போன் நம்பர் 0435-2431566)

கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் - ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 319, ஜி.எஸ்.டி. ரோடு, குரோம்பேட்டை, சென்னை-44 (போன் நம்பர் 044-22417714)

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன.
 
 இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை நீக்க அரசு நியமித்த குழுக்களினால் பலன் ஏற்படவில்லை. இதனால் ஊழியர்கள் சங்கங்கள் குறைப்படுகளை நீக்க உத்தரவிடக் கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
 
இவ்வழக்கு விசாரித்த நீதிமன்றம் 2 முதன்மை செயலாளர் அடங்கிய ஒரு புதிய குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு.

இன்று கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப் படி 10 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டு 100 சதவிகிதம் ஆக்கப்பட்டுள்ளது. மேலும் இம்முடிவால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

மேலும் 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் இதனால் பலன் பெறுவார்கள்.

மேலும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

யூரியாவுக்கான உற்பத்தி விலையை டன்னுக்கு 350 ரூபாய் அதிகரிக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. யூரியா உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் முதலீட்டுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தவும் ஒப்புதல் தரப்பட்டது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது. 

தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Paper - CV finished + 55% relaxation = total
தாள் 1 ல் - 12596. + 17996. =30592
தாள் 2 ல் - 16932. + 24651. =41583

TOTAL. - 29528. + 42647. =72175

ஆசிரியர் தகுதித் தேர்வு: தமிழக அரசின் புதிய சலுகையால் பாதிப்பு இல்லாதவர்களுக்கு (கட்-ஆப் 77க்கு மேல்) உடனடியாக பணி நியமனம் வழங்கப்படுமா?

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியவர்களுக்கு அண்மையில் தமிழகமுதல்வர் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்ப்பு முடித்து அரசு வேலை கிடைக்கும் என எண்ணி இருந்த ஆசிரியர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.


ஆனால் CUT-OFF 77மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு அரசின் புதிய அறிவிப்பால் எந்த பாதிப்பும் இல்லை எனபது தான் உண்மை, அவர்கள் கலக்கமடைய தேவையில்லை. ஏனெனில் புதிய அறிவிப்பின்படி ஆசிரியர்த் தகுதித் தேர்விற்கு 36 (82 முதல் 89வரை) மதிப்பெண்ணும், மற்ற 10 அல்லது 12வகுப்பு மதிப்பெண் மற்றும் D.T.Ed / DEGREE / B.Ed ஆகியதகுதிகளுக்கு அதிகபட்சமாக 40 மதிப்பெண்ணும் வழங்கப்படும் ஆக மொத்தம் 76மதிப்பெண் மட்டுமே அதிகபட்சமாக பெற முடியும் என்பதால் ஏற்கனவே ஆசிரியர் தகுதித் தேர்வில் CUT-OFF 77 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் தேர்தலுக்கு முன்பாக பணி நியமனம் வழங்குவதில் அரசுக்கு எந்த சுமையும் இல்லை.

இதனால் தமிழக அரசு, புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களின் குடும்பத்திற்கு புரிந்த பேருதவியாக இருக்கும். 

இடஒதுக்கீடு அடிப்படையில் (CUT-OFF-77 முதல் 100மதிப்பெண்களில் இல்லையெனில்) மொத்த பணியிடங்கள் நிரப்ப முடியாமல் போனால் CUT-OFF 77க்கு கீழ் உள்ளவர்களுக்கு (அரசு அறிவித்த சலுகையால் பயனடைந்தவர்களுக்கு) பணி வழங்குவதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை அரசு கவனிக்குமா எனபது தேர்வர்களின் கோரிக்கை....

(இந்த கருத்தில் மாற்றம் வேண்டிருப்பின் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம்)

மார்ச் 1ந் தேதியிலிருந்து அமல் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்த முடிவு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதனிடையே வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஊழியர்களின் அகவிலைப்படியை 10% அதிகரிக்கவும் முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 100%ஆக உயரும் அகவிலைப்படியில் 50% அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படும் என தெரிகிறது. 

இதனால் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 30 லட்சம் ஓய்வூதியர்களும் பயன் பெறுவார்கள். தேர்தல் விதிகளை பாதிக்காது வகையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னேர இந்த 2 முடிவுகளும் வெளியாகும் என தெரிகிறது.

Popular Posts