தகுதி தேர்வை காரணமாக கொண்டு பட்டதாரி ஆசிரியரை வெளியேற்ற தடை


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை எனக்கூறி, தேனி பட்டதாரி ஆசிரியரை வெளியேற்றும் உத்தரவிற்கு, மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்தது.

தேனியைச் சேர்ந்த  ராதிகா என்பவர் தாக்கல் செய்த மனு: நான் தேனி நாடார் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிகிறேன். என்னை ஆசிரியராக நியமிப்பதற்கான நடைமுறை, 2010 ஆக., 23க்கு முன் துவங்கியது. அந்த தேதிக்கு முன், நியமிக்கப்பட்டவர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு ( டி.இ.டி.,) எழுதத் தேவையில்லை என, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்.சி.டி.இ.,) அறிவித்துள்ளது.

ஆனால், 2010 ஆக., 23க்கு பின், நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களின் பணி நியமனத்தை, ரத்து செய்வதாக தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இதனால், எனக்கு சம்பளத்தை நிறுத்தி விட்டனர். என்.சி.டி.இ.,விதிகள்படி, டி.இ.டி., தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி, ஏற்கனவே நான் அரசிடம் மனு அளித்தேன். அது நிலுவையில் உள்ளது.

கட்டாயக் கல்விச் சட்டப்படி, 2012 ஏப்., 12க்கு பின், நியமிக்கப்பட்டவர்களை, டி.இ.டி., தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. டி.இ.டி.,யில் தேர்ச்சி பெறாதவர்களை, பணி நீக்கம் செய்யக் கூடாது என, எனக்கு பின் வேலையில் சேர்ந்தவர்கள், ஏற்கனவே ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளனர். 

தேனி முதன்மைக் கல்வி அலுவலர், 2010 ஆக., 27ல், எனக்கு அளித்த நியமன உத்தரவில், டி.இ.டி., தேர்ச்சி பெற வேண்டும் என, நிபந்தனை விதிக்கவில்லை. என்னை பணி நீக்கம் செய்வதற்கு தடை விதித்து, டி.இ.டி., தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார். 

நீதிபதி டி.அரிபரந்தாமன் முன், விசாரணைக்கு மனு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார். நீதிபதி, "மனுதாரரை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்படுகிறது" என்றார்.

43,666 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: அமைச்சர் கே.பி. முனுசாமி

பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 22,269 ஆசிரியர்கள் உள்பட 43,666 பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.


பேரவையில் வியாழக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் அ. சௌந்திரராசன் (பெரம்பூர்), கே. பாலகிருஷ்ணன் (சிதம்பரம்), இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் எம். ஆறுமுகம் (வால்பாறை), சு. குணசேகரன் (சிவகங்கை), கே. உலகநாதன் (திருத்துறைப்பூண்டி), வி. பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), பி.எல். சுந்தரம் (பவானிசாகர்), காங்கிரஸ் உறுப்பினர்கள் என்.ஆர். ரங்கராஜன் (பட்டுக்கோட்டை), ஜே.ஜி. பிரின்ஸ் (குளச்சல்) ஆகியோர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதில் அளித்து அமைச்சர் பேசியது:

அதிமுக ஆட்சியில் இதுவரை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மூலம் 54,420, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 13,581 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

64,435 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள், 16,793 சத்துணவு அமைப்பாளர்கள், சமையல், சமையல் உதவியாளர் பணியிடங்கள், 11,803 அங்கன்வாடி பணியாளர் பணியிடங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களில் 16,963, கூட்டுறவு நியாய விலை கடைகளில் 6,307 பணியிடங்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 5,489 பணியிடங்கள், பல்வேறு அரசுத் துறை நிறுவனங்களில் 3717 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: மேலும் 22,269 ஆசிரியர்கள், 1091 காவல் உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 4,042, கூட்டுறவு வங்கிகளில் 3607, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 10,105 காலிப் பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவப் பணி கழகத்தால் 2,159 டாக்டர்கள், 4 ஆயிரம் செவிலியர் பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஏராளமான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் அரசுப் பணிகள் எவ்விதத் தொய்வும் இல்லாமல் சிறப்பாக நடைபெறுகின்றன. மேலும் 43,666 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் அரசின் பணிகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என்றார் அமைச்சர் முனுசாமி.

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையவில்லை


சட்டசபையில், மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ., தங்கவேலு பேசுகையில், ""அரசு ஆரம்பப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால், பல பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இதனை, தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.இந்திய கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ., குணசேகரனும், இந்த கருத்தை தெரிவித்தார். இதற்கு, பள்ளிக்கல்வி அமைச்சர் வைகை செல்வன் அளித்த பதில்: அரசு ஆரம்பப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறையவில்லை. ஆரம்பப் பள்ளிகளில், 


14 லட்சத்து, 63 ஆயிரத்து 767 மாணவர்களும்; நடுநிலைப் பள்ளிகளில், 13 லட்சத்து, 83 ஆயிரத்து, 756 மாணவர்களும் படிக்கின்றனர். உயர்நிலைப் பள்ளிகளில், 7 லட்சத்து, 20 ஆயிரத்து, 381 மாணவர்களும்; மேல்நிலைப் பள்ளிகளில், 22 லட்சத்து, 84 ஆயிரத்து, 992 பேரும் படிக்கின்றனர். 

தனியார் பள்ளிகளை விட, 20 லட்சம் மாணவர்கள், அரசு பள்ளிகளில், கூடுதலாக படிக்கின்றனர்.விஜயதாரணி - காங்கிரஸ்: கன்னியாகுமரி மாவட்டத்தில், 22 அரசு ஆரம்பப் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில், ஆங்கில வழிகல்வி திட்டம் இருப்பதும், இது, அரசுப் பள்ளிகளில் இல்லாததும் தான் காரணமா என,தெரியவில்லை. அரசுப் பள்ளிகளில், படிப்படியாக, ஆங்கில வழி கல்வி அமல்படுத்தப்படும் என, அரசே தெரிவித்துள்ளது. எனவே, இந்த பிரச்னையில், அரசு கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

இருமொழி பள்ளிகளில் பணியாற்றும் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குதல் சார்ந்து தகவல் அறியும் உரிமை சட்ட தகவல்


10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரம் மற்றும் இது சார்ந்து வழக்கு தொடுத்துள்ளவர்களின் விவரங்கள் கோரி தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


தொடக்கக் கல்வி துறையில் பணிபுரியும் ஆசிரியர்களில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது ஆசிரியர்களாக பணிபுரிபவர்களின் விவரங்களை உரிய படிவத்தில் அளிக்க இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சி ஒன்றிய / நாகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 10+2+3 என்ற முறையில் கல்வி பயிலாமல் தற்போது பணிபுரியும் ஆசிரியர்களின் ஒன்றிய வாரியான எண்ணிக்கை விவரங்களை உரிய படிவங்களில் 26.03.2013 தேதியன்று தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அளித்திட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது சார்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கு தொடுத்து தீர்ப்பாணை பெற்றவர்களில் தீர்ப்பாணையின் நகலினையும் கொண்டு வர அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களும் கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

தமிழக பட்ஜெட் குறித்து தமிழ்நாடு ஆரம்பபள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில போது செயலாளர் திரு.முருக செல்வராசன் அவர்களின் செய்தியறிக்கை


2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு.


2002-03ஆம் கல்வியாண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் பயிற்றுனராக நியமிக்கப்பட்டு 2006-07ஆம் கல்வியாண்டு பள்ளிக்கல்விதுறைக்கு பணி மாறுதல் விருப்பமின்மை தெரிவித்து தற்போது 2013-14ஆம் கல்வியாண்டில் பணி மாறுதல் செல்ல விருப்பமுள்ள ஆசிரிய பயிற்றுநர்களின் விவரம் கோரி பள்ளிக்கல்வித் துறை உத்தரவு. 

மேற்காணும் விவரங்களை உரிய படிவத்தில் 22.03.2013க்குள் இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

10 ஆயிரம் புதிய ஆசிரியர்கள் : விரைவில் வருகிறது அறிவிப்பு மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள சம்பள பிரச்சனை குறித்து முக்கிய முடிவு - நாளிதழ் செய்தி


தமிழக அரசு பட்ஜெட் 2013-14: பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கீடு


பள்ளி கல்வித்துறை வளர்ச்சிக்காக ரூ.16,965.30 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 97.7 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள் வழங்க ரூ.217.22 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 86.71 மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்க ரூ.110.96 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 


24.76 லட்சம் மாணவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக ரூ.381 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.366.57 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 13 லட்சம் மாணவர்களுக்கு இலவச புத்தக பைகள் வழங்க ரூ.19.77 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் இலவச பேருந்து பயணச்சீட்டுகள் வழங்கும் திட்டத்திற்கு ரூ.322 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்


1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர் / பாட ஆசிரியர் / மாணவர் திரள் பதிவேடு/ இணை செயல்பாடுகள் பதிவேடு என பல பதிவேடுகள் பராமரிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். ஆசிரியர்களின் வேலை பளுவை குறைத்து எளிமையாக்க  அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மார்ச் 21ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்வதை அடுத்து பள்ளிக் கல்வித் துறை சார்ந்த அனைத்து அலுவலர்கள் அலுவலக தலைமையகத்தில் இருக்க உத்தரவு


இந்நிதியாண்டின் தமிழக பட்ஜெட் மார்ச் 21ஆம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதை அடுத்த துறை சார்ந்த அனைத்து விவரங்களும் தாயாற்படுத்தி வைத்து கொள்ளவும், பட்ஜெட் நடக்கும் நாளன்று அனைத்து இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் அவர்களின் அலுவவலக தலைமை இடத்தில் இருக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் பட்ஜெட் நடக்கும் நாட்களில் அலுவலர்கள், எவ்வித வெளி பயணம் மேற்கொள்ள கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனப் பள்ளிகளில் காந்தி பாடம்!


சீனாவில் பள்ளி மாணவர்களுக்கு மகாத்மா காந்தியின் போதனைகள் பாடமாக பயிற்றுவிக்கபடுகிறது. 

இந்தியாவின் முன்னாள் அரசியல் நிபுணர் பி.ஏ.நஸ்ரத் (Pascal Alan Nasereth)  'காந்தியடிகளின் தன்னிகரில்லா தலைமைப் பண்புகள்' என்ற புத்தகத்தை சீனா மொழியில் மொழி பெயர்த்துள்ளார்.

அந்த புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் பேசிய சீனாவின் தெற்கு சிங் நார்மல் பல்கலைகழக பேராசிரியர் குவான்யூ சாங் "முன்பெல்லாம் சீன கல்வியாளர்கள் மட்டுமே காந்தியைப் பற்றி அறிந்து வைத்திருந்தினர். ஆனால் தற்போது ஏராளமான சீன மக்கள் இந்திய சுதந்திர போராட்டம், காந்தியின் சத்தியாகிரக போராட்டம், அவரது போதனைகள் ஆகியவற்றை தெரிந்து வைத்துள்ளனர்'  என்றார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், "சீனாவில் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்து நிலைகளிலும் காந்தியின் போதனைகள் பயிற்றுவிக்கப்படுகிறது" என்றார்.

TNPTF கோரிக்கை மாநாடு 10.04.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது


இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும்VAO தேர்வில் இருந்து பொதுத் தமிழ் பகுதி நீக்கப்பட்டுள்ளது. குரூப் 4 தேர்வுகளிலும் தமிழ் பாடத்திற்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டுள்ளன. அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப்–1, குரூப்–1–ஏ, குரூப்–1–பி, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட தேர்வுகளுக்கும் இதர தொழில்நுட்ப தேர்வுகளுக்கும் பாடத்திட்டம் முற்றிலும் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. 
 
             இது தொடர்பாக 72 பக்கங்கள் அடங்கிய புதிய பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சியை தகுதியாகக் கொண்டு எழுதும் குரூப் 4 மற்றும் வி.ஏ,ஓ தேர்வுகளில் புதிய மாற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
                வி.ஏ.ஓ. தேர்வில் இதுவரை பொது அறிவு, புத்தி கூர்மை , சிந்தித்து விடை அளித்தல் உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்களும், கிராம நிர்வாகம் தொடர்பான பகுதிகளில் இருந்து 50 வினாக்களும், பொதுத் தமிழ் பகுதிக்கு 100 வினாக்களும் ஒதுக்கப்பட்டிருந்தன. தற்போது புதிய பாடத்திட்டத்தின் படி, பொதுத் தமிழ் பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. இதேபோல், குரூப் 2 தேர்வில், அனைத்து மதிப்பெண்களும் பொது அறிவுப்பகுதிக்கே ஒதுக்கப்பட்டுள்ன.
                குரூப் 4 தேர்வில் இதுவரை 100 வினாக்கள் பொது அறிவு பகுதிகளுக்கும், 100 வினாக்கள் பொதுத் தமிழுக்கும் ஒதுக்கப்பட்டது. புதிய பாடத்திட்டத்தின் படி, பொது அறிவு, சிந்தித்து விடை அளித்தல், புத்தி கூர்மை உள்ளடக்கிய பகுதியில் இருந்து 150 வினாக்கள் கேட்கப்படும். இதற்காக 225 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள 50 வினாக்கள் மட்டுமே பொதுத் தமிழில் இருந்து கேட்கப்படவுள்ளது. இதற்காக 75 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
                  இதுவரை தனியாக நடத்தப்பட்டு வந்த மாவட்ட கல்வி அதிகாரி (டி.இ.ஓ.) தேர்வு மட்டும் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்பட்டு உள்ளது.
                    முன்பு அறிவிக்கப்பட்டபடி, நகராட்சி கமிஷனர் (கிரேடு–2), சார்–பதிவாளர் (கிரேடு–2), துணை வணிகவரி அதிகாரி, இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி ஆகிய பதவிகள் குரூப்–1 தேர்வுடன் சேர்க்கப்படவில்லை. எனவே, இந்த பதவிகள் முன்பு போல குரூப்–2 தேர்வில்தான் இடம்பெற்று இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குரூப்–2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளுக்கு மட்டும் முதல்நிலைத்தேர்வுடன் கூடுதலாக மெயின் தேர்வு (Objective Type) நடத்தப்படும்.
CTET July 2013 | மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு

CLICK HERE

IMPORTANT DATES:

STARTING DATE FOR ONLINE REGISTRATION: 15-03-2013.

CLOSING DATE FOR ONLINE REGISTRATION: 16-04-2013.

LAST DATE FOR RECEIPT OF APPLICATION: 22-04-2013.

LAST DATE FOR RECEIPT OF APPLICATION (FAR FLUNG AREAS): 29-04-2013.

DATE OF WRITTEN EXAMINATION: 28-07-2013.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (OBC) வழங்கப்பட்டுள்ள 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கான வருமான வரம்பு ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.


அரசின் வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இது செல்லாது என அறிவிக்கக்கோரி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

           இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் விசாரித்து இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் செல்லும் என அறிவித்தது. அதே சமயம் அதிக வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அளிக்கக்கூடாது என உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஆண்டுக்கு ரூ. 4.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு சலுகை அளிக்க கடந்த 2008ம் ஆண்டு மத்திய அரசு முடிவு செய்தது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த வருமான வரம்பை மறுபரிசீலனை செய்யவும் முடிவு செய்யப்பட்டது.
                  இந்நிலையில் நகர் புறங்களில் வருமான வரம்பை ரூ. 12 லட்சமாகவும், கிராம புறங்களில் வருமான வரம்பை ரூ. 9 லட்சமாகவும் உயர்த்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து வருமான வரம்பை உயர்த்துவது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த அமைச்சரவை குழு கூட்டத்தில் பெட்ரோலிய துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் நலத்துறை அமைச்சர் வயலார் ரவி, மனிதவள மேம்பாட்டு துறை இணை அமைச்சர் பல்லம்ராஜு, சமூக நீதி துறை அமைச்சர் செல்ஜா, பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
                   இந்த குழு நேற்று தீவிர ஆலோசனை நடத்தியது. வருமான வரம்பை ரூ. 7 லட்சமாக உயர்த்த வேண்டும் என வீரப்ப மொய்லி, நாராயணசாமி, வயலார் ரவி ஆகியோர் கோரிக்கை வைத்தனர். வருமான வரம்பை அதிக அளவுக்கு உயர்த்தினால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என மற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து வருமான வரம்பை ரூ. 6 லட்சமாக உயர்த்துவது என ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு பிறகு இது நடைமுறைக்கு வரும். ஆண்டுக்கு ரூ. 6 லட்சம் வரை வருமானம் ஈட்டும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இனி இடஒதுக்கீடு சலுகையை அனுபவிக்கலாம்.

சத்துணவு மையங்களுக்கு மிக்சி வழங்க உத்தரவு


பள்ளிகளில் உள்ள சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு, 99 ஆயிரம் மிக்சிகள் வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.


தமிழக அரசின் செய்திக்குறிப்பு: பள்ளிகளில் உள்ள சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களில், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப, ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்கப்படுகிறது. 

இந்த மையங்களில், போதிய உபகரணங்கள் இல்லாததால், அரவை நிலையங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க, சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கு, பிற உபகரணங்களுடன், மிக்சி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார். 

முதல் கட்டமாக, 52 ஆயிரத்து 881 சத்துணவு மற்றும் குழந்தைகள் நல மையங்களுக்கும், இரண்டாம் கட்டமாக, 46 ஆயிரத்து 448 குழந்தை நல மையங்களுக்கும், தலா ஒரு மிக்சி வீதம், 99 ஆயிரத்து 329 மிக்சிகள், 12.37 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

2011-2012 ம் கல்வி ஆண்டில் மேல்நிலைபள்ளியாக நிலை உயர்த்தப்பட்ட 100 பள்ளிகளில் தோற்றுவிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களுக்கு பிப்ரவரி மாத சம்பளம் பெறுவதற்கான ஆணை

TNPSC REVISED SYLLABUS RELEASED | குரூப்–1, குரூப்–2, குரூப்–4 உள்ளிட்ட அனைத்து போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை டி.என்.பி.எஸ்.சி. மாற்றி அமைத்துள்ளது. புதிய பாடத்திட்டம் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிப்பு


கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான சந்தேகங்களை அறிய, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த, கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஆணையாளராக ஓய்வு ஐ.ஏ.எஸ். அதிகாரி மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.


 இவரது அறிவுரைபடி, விருதுநகர் மாவட்டத்தில், பதிவாளர் மற்றும் செயற் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 713 தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு, முதல் நிலையில் நான்கு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இத்தேர்தலை நடத்த வாக்காளர் பட்டியல் வெளியிட்டு,அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி ராஜபாளையம், விருதுநகரில் நடக்க உள்ளது. தேர்தல் தொடர்பான சந்தேகங்கள், புகார்கள் தெரிவிக்க, கட்டுப்பாட்டு அறைகளும் செயல்பட்டு வருகிறது. மாநில அளவிலான சந்தேகங்களை 044 2435 1403, விருதுநகர் மாவட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்கள் தொடர்புடைய தேர்தல் சந்தேகங்களுக்கு 04562 252 680, ஸ்ரீ வில்லிபுத்தூர் துணை பதிவாளர் அலுவலகம் 04563 260 312, அருப்புக்கோட்டை துணை பதிவாளர் 04566 228 220 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளி துவங்குவதற்குள் ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு : பள்ளி கல்வி துறை திட்டம்


ஜூன் மாதம், பள்ளிகள் திறந்தபின், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்தினால், ஆசிரியர்கள், பாடம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் வாங்குவதிலேயே, கவனம் செலுத்துகின்றனர். இதனால், கற்பித்தல் பணி பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டு, கோடை விடுமுறையான, மே மாதத்திலேயே, பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 


கடந்த சில ஆண்டுகளாக, ஜூன், ஜூலையில், ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. இதனால், கலந்தாய்வு முடியும் வரை, ஆசிரியர்கள், கற்பித்தல் பணியில், ஈடுபாடு காட்டுவதில்லை. மாறாக, தாங்கள் விரும்பும் இடங்களுக்கு, மாறுதல் உத்தரவு வாங்குவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். இதற்காக, பள்ளிகளுக்கும் செல்லாமல், மாறுதல் உத்தரவு வாங்கும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.

படிப்பு பாதிப்பு : குறிப்பாக, ஆளுங்கட்சி பிரமுகர்களை சந்திப்பதற்காகவும், தங்கள் மாவட்ட அமைச்சரை சந்தித்து, பரிந்துரை கடிதங்களை பெறவும், சென்னைக்கு பறந்து வந்து விடுகின்றனர். இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதை அறிந்த பள்ளிக் கல்வி இயக்குனரகம், கலந்தாய்வை, கோடை விடுமுறை காலமான மே மாதத்திலேயே, நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது.

இதற்காக, ஆசிரியர் வகை வாரியாக, தனித்தனியாக, கலந்தாய்வு தேதி பட்டியலை தயாரித்து, அரசின் ஒப்புதலுக்காக, கல்வித் துறை அனுப்பி வைத்துள்ளது. பொது மாறுதல் கலந்தாய்வை, காலம் தாழ்த்தி நடத்துவதில் ஏற்படும் பிரச்னைகளை, கல்வித் துறை உயர் அதிகாரிகளும், நன்கு உணர்ந்துள்ளதால், இயக்குனரகத்தின் திட்டத்திற்கு, ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்-லைன் முறை : மேலும், "ஆன்-லைன்' முறையில், அனைத்து ஆசிரியர்களுக்கும், கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது. அரசு அனுமதி அளித்ததும், பொது மாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியாகும்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் தியாகராஜன் கூறியதாவது: பள்ளி துவங்கிய பின், கலந்தாய்வை நடத்துவதால், மாணவர்களுக்கு மட்டுமில்லாமல், ஆசிரியர்களுக்கும், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. தங்கள் பிள்ளைகளை, மாறுதலாகிச் செல்லும் இடங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ப்பதில், கடுமையான பிரச்னைகளை சந்திக்கின்றனர். தற்போது, முன்கூட்டியே, கலந்தாய்வை நடத்துவது என்பது வரவேற்கத்தக்கது. இதனால், மாறுதலாகிச் செல்லும் இடங்களில், தங்கள் பிள்ளைகளையும், முன்கூட்டியே பள்ளிகளில் சேர்ப்பதற்கான பணிகளில், ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியும்.

காலியிட விவரங்கள் மற்றும் கலந்தாய்வு அட்டவணையை, ஏப்ரல் இறுதியிலேயே வெளியிட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள், கோடை விடுமுறைக்காக, சொந்த ஊர்களுக்கு செல்வர்.

கலந்தாய்வு அட்டவணையை, முன்கூட்டியே வெளியிட்டால், அதற்கேற்ப, அவர்கள், தங்கள் பயணத்தை, திட்டமிட முடியும். முன்கூட்டியே கலந்தாய்வு நடத்தும் திட்டத்தை, இந்த ஆண்டுடன் நிறுத்தி விடாமல், ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்தவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தியாகராஜன் கூறினார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 1984- திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது- ஆணை வெளியிடப்படுகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் சிறப்பு சேம நலநிதி மற்றும் பணிக்கொடைத் திட்டம், 2000 - திட்டத்தின்கீழ் வட்டி கணக்கிட்டு வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது

RTI - பொருளாதாரம் பட்டம் படித்தவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு எழுத அனுமதி இல்லை - TRB விளக்கம்


தபால் மூலம் வாக்காளர் அட்டை: தேர்தல் கமிஷன் ஏற்பாடு


தபால் மூலம் அடையாள அட்டையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ள, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகத்தில், 1993 முதல், போட்டோவுடன் கூடிய வாக்காளர் பட்டியல், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை, தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்தது; 2000ல், 100 சதவீதம் நிறைவு செய்து ஒருங்கிணைக்கப் பட்டது. புதிய வாக்காளர் சேர்க்கை, நீக்கம், திருத்தம் செய்யப்பட்டு, பட்டியல் சரிபார்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், "போட்டோவுடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில், போட்டோக்களை புதியதாக மாற்றிக் கொள்ளலாம்' என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. அதன்படி, புதிய வாக்காளர் அடையாள அட்டை மேம்படுத்தப்பட்டு, பி.வி.சி., (பிளாஸ்டிக் ) அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிட்டுள்ளது.

புதிய அடையாள அட்டை பெறுவதற்கான வழிகாட்டி முறைகளையும், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. இதற்காக, ஓட்டுப்பதிவு மையம், பொது சேவை மையம், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களிடம் விண்ணப்பம் செய்யலாம். "டூப்ளிகேட்' அடையாள அட்டை பெறுவதற்கு, 25 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது இலவசமாக வழங்கப்பட உள்ளன. இதை, விண்ணப்பம் செய்யும் இடங்களிலே பெற்றுக் கொள்ளலாம். தபால் மூலம் பெற விரும்புபவர்கள், விண்ணப்பத்துடன், சுய முகவரியிட்ட, ஸ்டாம்ப் ஒட்டிய கவர்களை வழங்க வேண்டும். புதிய அட்டை தயாரானதும், வாக்காளர்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க, தேர்தல் பிரிவு தாசில்தார்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 8% அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் அறிவிக்கக்கூடும் என எதிர்பார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு, மார்ச் 3வது வாரத்தில் முறையாக அறிவிக்கக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அகவிலைப்படியானது, ACPIN-ன் குறியீட்டு கணக்கின் படி 8% ஆக இருக்கும் எனவும், ஜனவரி 2013 முதல் கணக்கீட்டு வழங்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடக்கக் கல்வித்துறையில் 01.04.2003க்கு பிறகு பணியில் சேர்ந்து மரணமடைந்த மற்றும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் முதல் பட்டியலில், ஒருவர் கூட ஓய்வூதியம், பணிக்கொடை இன்றுவரை பெறவில்லை!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் M.Com. (Financial Management), M.Com. (Bank Management), M.Com. (Computer Application), B.Com.(Applied), B.Com. (Bank Management) and B.Com. (கம்ப்யூட்டர் Application) ஆகிய பட்டப்படிப்புகள் B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பிற்கு சமமாக அங்கீகரித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு

B.Com., மற்றும் M.Com., பட்டப்படிப்பில் ஒரு சில பல்வகை (Multi Branch) பிரிவுகளுக்கு M.Com., பட்டப்படிப்பிற்கு இணையாக கருத இயலாது என தமிழக அரசு அரசாணை வெளியீடு

7வது சம்பள கமிஷன் அமைக்க திட்டமா?


7வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் நமோ நாராயன் மீனா லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்ல 6வது சம்பள கமிஷனின் பரிந்துரைகள் ஜனவரி 2006 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது, 7வது சம்பள கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. ஆனால் பொதுவாக 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சம்பள கமிஷன் அமைக்கப்படுகிறது என கூறினார்.

2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட 18000 இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலுக்கு விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் SSTA சார்பில் 280 ஆசிரியர்கள் வழக்கு தொடுப்பு


Part Time Teachers Priority | பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்


பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியர் நியமனம் நடக்கும் போது பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என சேலத்தில் நடந்த விழாவில் செம்மலை எம்.பி., பேசினார்.

தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர் சங்கம் சார்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி அறிவிப்பு மாநாடு சேலத்தில் நேற்று நடந்தது. சங்கத்தின் சேலம் மாவட்ட செயலாளர் ராமர் தலைமை வகித்தார். பொருளாளர் முருகேசன், ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் பெரியசாமி வரவேற்றார்.

அதிமுக அமைப்பு செயலாளரும் எம்.பி.யுமான செம்மலை சிறப்புரை ஆற்றினார். அவர் பேசியது: தமிழகத்தில், எஸ்.எஸ்.ஏ. திட்டத்தின் கீழ் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட போது இத்திட்டம் 2014ம் ஆண்டுடன் முடிந்து விடும். அதன்பின், பகுதி நேர ஆசிரியர்களுக்கு வேலை இருக்காது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

ஆனால் மத்திய அரசு, எஸ்.எஸ்.ஏ. திட்டத்தை 2017ம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் பகுதி நேர ஆசிரியர்கள் யாரும் கவலைப்பட வேண்டும். அப்படியே, எஸ்.எஸ்.ஏ. திட்டம் நின்று போனாலும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உங்களை தத்தெடுத்துக் கொள்ளும். பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படும் போது, பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். முதல்வர் ஜெயலலிதா உங்களுக்கு அரணாக இருப்பார்.

அதே நேரம், நீங்களும் உங்கள் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். தகுதித்தேர்வு எழுதி, தேர்ச்சி பெற வேண்டும். ஆசிரியர் என்பவரும் மாணவர்கள்தான். அதனால், ஆசிரியர் பணியில் சேர்ந்துவிட்டோம் என்பதற்காக படிப்பதை நிறுத்தி விடக்கூடாது. தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் உங்களை பார்த்து கற்றுக் கொள்ளும் வகையில் நீங்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும்.

கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 16549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமித்து முதல்வர் உத்தரவிட்டார். இதில், சேலத்துக்கு 763 பணியிடங்கள் கிடைத்தது. சமீபத்தில் 1800 பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில், சேலத்துக்கு 77 பணியிடங்கள் கிடைத்தது. இந்த அரசு, ஆசிரியர்களுக்கு பக்கபலமாக இருக்கும். இவ்வாறு செம்மலை எம்.பி., பேசினார்.

சேலம் மாநகராட்சி மேயர் சவுண்டப்பன், துணை மேயர் நடேசன், ஆத்தூர் எம்எல்ஏ மாதேஸ்வரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சங்க நிர்வாகிகள் சுந்தர், கணேஷ், அருள், வேல்முருகன், இளவரசன், செல்வக்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிய வேண்டும் அமைச்சர் வைகைச்செல்வன


பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால், சிறந்த மாணவர் களை உரு வாக்க முடியும் என அமைச்சர் வைகைச் செல்வன் கூறினார். 


மாநில பள்ளி கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு நேற்று முதல் முறையாக அமைச் சர் வைகைச்செல்வன் விருதுநகர் மாவட்டம் வந்தார். விருதுநகர் விருந்தினர் மாளிகையில் அவருக்கு கலெக்டர் ஹரிஹரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. எஸ்பி மகேஸ்வரன், டிஆர்ஓ ராஜூ, ஆர் டிஓ குணசேகரன், திட்ட அலுவலர் பிரபாகரன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து விருதுநகர் கேவிஎஸ் மேல் நிலைப்பள்ளியில் கல்வித் துறை உயர் அதிகாரி கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், `விருதுநகர் மாவட்டம் அரசு பொதுத் தேர்வுகளில் கடந்த 25 ஆண்டுகளாக முதலிடம் பெற்று, கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. 


ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றினால் சிறந்த மாணவர் களை உருவாக்க முடியும். கல்வித்துறை அதிகாரிகள் அரசு பள்ளிகளில் அடிக்கடி ஆய்வு நடத்த வேண்டும்.


தமிழக முதல்வர் கல்விக்காக பல்லாயிரம் கோடி ரூபாய் நிதிஒதுக்கீடு செய்துள்ளார். தமிழகத்தை கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றிட ஆசிரியர்கள், அதிகாரிகள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண் டும் என்றார். கூட்ட த்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பகவதி மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அனைத்து அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் ஒரே சமயத்தில் சம்பளம்-புதிய சாப்ட்வேர் அறிமுகம்


புதிய சாப்ட்வேர் மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

          அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு கடந்த 5 வருடங்களாக இசிஎஸ் முறையில் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இம்முறையில் அரசுத் துறைகள், பள்ளிகள் சம்பளப் பட்டி யலை சிடி மூலம் கருவூலத்தில் கொடுத்து விட வேண்டும். கருவூல அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் அந்த பட்டியல் அந்தந்த மாவட்ட பாரத ஸ்டேட் வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர் வங்கிகள் மூலம் அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேமிப்பு கணக்கில் சம்பளம் போய் சேர்ந்து விடும்.

         இதனால் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் உடனடியாக சம்பளம் கிடைத்து விடும். ஆனால் மற்ற வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ஓரிரு நாட்கள் தாமதமாக சம்பளம் கிடைக்கும்.
          இந்த தாமதத்தை தவிர்க்க, புதிதாக ‘பே ரோல் 9.0’ என்ற சாப்ட்வேரை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சாப்டுவேரில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் சம்பளப் பட்டியல் தயாரிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் எந்தெந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்திருக்கிறார்களோ அந்த வங்கியின் எம்ஐசிஆர் கோடு நம்பரும் ஏற்றப்பட வேண்டும். பின்னர் அந்த சம்பளப் பட்டியலை கருவூலத்தில் கொடுக்க வேண்டும்.
         கருவூல அதிகாரி ஒப்புதல் அளித்தவுடன் பாரத ஸ்டேட் வங்கிக்கு  சம்பளப் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு அந்த சம்பளப் பட்டியல் அனைத்தும் சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் சிசிபிசி மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து அனைத்து ஊழியர்களின் சேமிப்பு கணக்கிலும் ஒரே சமயத்தில் சம்பளம் ஏற்றப்படும். இதன் மூலம் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரே நாளில் சம்பளம் கிடைத்துவிடும். இதன் மூலம் சம்பள பட்டுவாடாவில் தேவையற்ற தாமதம் தவிர்க்கப்படும்.

தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது.


தகுதி வாய்ந்த நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு 08.03.2013 அன்று சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் காலை 10.00 மணியளவில் இணையதளம் வாயிலாக நடைபெறவுள்ளது. 

2012-13 ஆண்டிற்கான  உதவித்தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் (வ.எண் 1முதல் 104 வரை) பரிசீலிக்கப்பட்டு, மேலும் 07.11.2012ன் படி  திருத்திய முன்னுரிமை பட்டியலில் உள்ள 1 முதல் 94 வரையுள்ள நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இந்த உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களாக பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெற இருக்கிறது.

AEEO Panel

Popular Posts