TPT மற்றும் B.Ed கல்வித்தகுதிகள் TET தேர்விற்கு மற்றும் பணி நியமனத்திற்கு ஏற்பு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்துள்ள RTI விளக்கம்


30.06.2014க்குள் அனைத்து அரசு/ நிதியுதவி பள்ளிகளிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு


மருத்துவ மாணவர் சேர்க்கை: தர வரிசை பட்டியல் வெளியீடு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புக்களுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் வெளியிட்டார். 


தரவரிசை பட்டியல் www.tnhealth.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 18ம் தேதி துவங்கி 5 நாட்கள் நடைபெறும் என, மருத்துவ தரவரிசை பட்டியலை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

மாற்றுதிறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூன் 17ம் தேதி நடைபெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும்பணியில் மத்திய அரசு தீவிரம்

ஏழாவது ஊதியக்குழு அமைக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.வரும் 2016ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பள விகிதத்தை நிர்ணயிக்க, ஏழாவது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டது.

 இதன் தலைவராக நீதிபதி அசோக்குமார் மாத்துார், உறுப்பினர்களாக விவேக்ரே, ரத்தின்ராய், செயலாளராக மீனாஅகர்வால் நியமிக்கப்பட்டனர். பிப்., 28ல் அறிவித்தபின், மார்ச் 5ல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தக் குழுவின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.தேர்தல் நடைமுறைகள் முடிந்த நிலையில், புதிய அரசு அமைந்தபின், இக்குழு அலுவல்களை தீவிரப்படுத்தி வருகிறது. முதற்கட்டமாக, அலுவலர்கள் நியமிக்கும் பணி நடக்கிறது. வரும் 15 நாட்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த அலுவலர் குழுவில், 4 சார்பு செயலர்கள், ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டம் அனாலிஸ்ட், 3 செக்ஷன் ஆபீசர்கள், ஒரு உதவியாளர், 6 தனிச்செயலர்கள், 5 ஸ்டெனோ கிராபர்கள், 3 டிரைவர்கள், ஒரு அலுவலக உதவியாளர் என 24 பேர் நியமிக்கப்பட உள்ளனர்.இந்த அலுவலர்களை பிற துறைகளில் இருந்து நியமிக்க, மத்திய பணியாளர் துறையிடம் விபரம் கேட்டுள்ளனர். இந்த நியமனத்திற்குப் பின், 18 மாதங்கள் ஏழாவது ஊதியக்குழு செயல்படும். அதாவது அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை பல்வேறு துறைகளின் தற்போதைய சம்பள விகிதங்களை ஆய்வு செய்து, புதிய விகிதத்தை நிர்ணயிக்கும்.

தொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு

அரசாணை எண் :137-1

இயக்குனர் செயல்முறைகள் 

மாறுதல்  விண்ணப்பம் 


விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014
16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மாறுதல்
16 - மாலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவி உயர்வு
17 - காலை: நடுநிலைப் பள்ளி த.ஆ மாறுதல், மாலை: நடுநிலைப் பள்ளி த.ஆ பதவிஉயர்வு
18 - காலை: ப.ஆ பணிநிரவல், மாலை: ப.ஆ மாறுதல் மற்றும் பதவி உயர்வு

19 - ப.ஆ ஒன்றியம் விட்டு மாறுதல்

21 - ப.ஆ மாவட்ட மாறுதல்
23 - காலை: தொடக்கப்பள்ளி த.ஆ மாறுதல், மாலை: தொடக்கப்பள்ளி த.ஆ பதவி உயர்வு
24 - இ.நி.ஆ பணிநிரவல்
25 - இ.நி.ஆ மாறுதல்
26 - இ.நி.ஆ ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல்
28 - இ.நி.ஆ மாவட்ட மாறுதல்

ஒரே பக்கத்தில் பள்ளிகள் வேலை நாட்கள் விவரம்


முதல்வர் ஜெயலலிதா பிரதமரிடம் கல்வித் துறைக்கு கேட்டவை

ext of the Memorandum presented by Selvi J Jayalalithaa,

Hon’ble Chief Minister of Tamil Nadu to Shri Narendra Modi,
Hon’ble Prime Minister of India on 3.6.2014 is reproduced below:
(c) Grants for School Education


I. Sarva Shiksha Abhiyan
For the year 2011-12, the Ministry of Human Resource
Development had in 2013-2014 sanctioned a sum of Rs.438.38
crores towards committed liability of the teacher salary component,
of which the 65% central share works out to Rs.284.95 crores. As
against this, the Government of India released Rs.57 crores only and
the balance grant of Rs.228 crores is still awaited.

II. Right to Education (RTE) Compensation
The total number of admissions under the Right to Education
Act in private schools for 2013-14 is 49,864 and the reimbursement
amount to be given works out to Rs.25.13 crores. The Government
of India is requested to release a sum of Rs.25.13 crores at the
earliest.

III. Rashtriya Madhyamik Shiksha Abhiyan
In 2010-11, the Project Approval Board (PAB) sanctioned 344
infrastructural works at a cost of Rs.499.20 crores with 75 per cent
Central share of Rs.374.40 crores. The amount received from the
Government of India was only Rs.310.52 crores and the balance of
Rs.63.88 crores, already incurred from the State Government funds,
is yet to be received.

For the year 2011-12, the revised PAB approval is Rs.675.05
crores and the entire Central Government’s share of Rs.506.29
crores is yet to be released. Therefore, the Government of India is
requested to reimburse the total pending claims of Rs.570.18 crores
for the years 2010-11 and 2011-12.

தெலுங்கானா மக்களுக்கு அள்ளிக்கோ சலுகைகள்!வாரி வழங்கினார் முதல்வர் சந்திரசேகர ராவ்

புதிதாக உருவாக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்தின் முதல், முதல்வராக பொறுப்பேற்றுள்ள, டி.ஆர்.எஸ்., கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ், ஏராளமான கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, மாநில மக்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.

௨௯வது மாநிலம்:'ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும்' என, ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, தெலுங்கானா பகுதி மக்கள் கோரி வந்தனர். 

அவர்களின் கோரிக்கை, இம்மாதம் 2ல், நிறைவேறியது. நாட்டின், 29வது மாநிலமாக தெலுங்கானா உருவானது. அம்மாநில புதிய முதல்வராக, சந்திரசேகர ராவ் பொறுப்பேற்றார். இந்த பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக, பல ஆண்டுகளாக, பலபோராட்டங்களை நடத்தி வந்த ராவ்,முதல்வரானதும், பல திட்டங்களையும், அறிவிப்புகளையும் அறிவித்து வருகிறார்.

நேற்று அவர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்:
மேலும் புதிதாக, 14 மாவட்டங்கள் உருவாக்கப்படும்;
விவசாய கடன், 12 ஆயிரம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்; இதனால், 23 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்; இது, 10 நாட்களில் செயல்
படுத்தப்படும்.
ஆட்டோ ரிக் ஷாக்களுக்கு சாலை வரி ரத்து.
நலிவடைந்த பிரிவினருக்கு, இரண்டு படுக்கையறை வீடு; முதற்கட்டமாக, 5,000 வீடுகள் கட்டப்படும்.
எல்.கே.ஜி., முதல் முதுகலை படிப்பு வரை கல்வி இலவசம்.
முதியோர் பென்ஷன் 1,000 ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கு 1,500 ரூபாய்.

மோடி நிர்வாகத்தில் புதுமை- மத்திய ஊழியர் சங்க சம்மேளனம் எதிர்ப்பு:


பள்ளி மாணவர்கள் செல்லும் பஸ்களில் படம் மற்றும் பாடல்கள் போடுவதை தடுக்க உத்தரவு

பள்ளி மாணவர்கள் செல்லும் அரசு, தனியார் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும், பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடுக்க, கலெக்டர் விவேகானந்தன், போக்குவரத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில், சமூகப் பாதுகாப்பு துறையின் கீழ் இயங்கும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், கலெக்டர் விவேகானந்தன் தலைமையில் நடந்தது. இதில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 ன் கீழ் பதிவாகும் வழக்குகளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு, கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும்.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் வழங்கப்படும் மறுவாழ்வு நிதியை பெற்றுத்தர உதவிட வேண்டும். ஒவ்வொரு யூனியன் அளவில், குழந்தைகளின் உரிமைகள், குழந்தைகளின் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து வட்டார வள மைய பயிற்றுநர்கள், ஆசிரியர்களுக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலம் மூலம் பயிற்சி அளிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டவுன் பஸ்களில், பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், முன்பகுதியில் இருக்கைகள் ஒதுக்கித் தரவும், மாணவ, மாணவிகள், பள்ளிக்கு செல்லும் பஸ்களில் படம் ஒளிபரப்புவதையும் மற்றும் பாடல்கள் ஒலிபரப்புவதையும் தடை விதிக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம், 2012 குறித்து, போலீஸ் துறையில் செயல்படும் சிறப்பு இளைஞர் போலீஸாருக்கும், ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களில் நியமிக்கப்பட்டு குழந்தைகள் நல அலுவலராக பணியாற்றும் போலீஸாருக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.
மாவட்டத்தில், இடையில் நின்ற குழந்தைகளை, பள்ளிக்கு அனுப்ப ஏற்பாடு செய்வது, அனைத்து குழந்தைகள் இல்லங்கள், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு விடுதிகளில் குழந்தைகளின் பிரச்னைகளை தெரியப்படுத்த, 24 மணி நேரமும் செயல்படும், கலெக்டரின் நேரடி கட்டணமில்லா தொலைபேசி எண், 1077 என்ற எண்ணையும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக தொலைபேசி எண், 04342-232234 ஆகிய எண்களை தெளிவாக ஒட்டி வைக்க வேண்டும்.
மக்கள் கூடும் இடங்களான கலெக்டர் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், தாலுகா அலுவலகங்கள், சார்நிலை அலுவலகம் ஆகிய இடங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், பாலியல் வன்கொடுமை ஆகியவற்றில் ஈடுபடும் நபர்களுக்கு தரப்படும் தண்டனையை, விவரத்துடன், விழிப்புணர்வு பேனர்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, எட்டு யூனியன்களில் செயல்படும் ஒன்றிய குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும், 251 பஞ்சாயத்துகளில் செயல்படும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும்.
தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும், ஆதரவற்ற குழந்தைகள் இல்லங்களில், பதிவு பெறாத இல்லங்களை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இளஞ்சிறார் நீதிச் சட்டம், 2012 கீழ் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பள்ளிக்கல்வித்துறை - 2014-15ம் கல்வியாண்டுக்கான மாதவாரியாக பள்ளி வேலைநாட்கள் விவரம் வெளியீடு, தொடக்க / நடுநிலைப் பள்ளி - 220 நாட்கள், உயர் / மேல்நிலைப் பள்ளிகள் - 210 நாட்கள்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 6 முதன்மை கல்வி அலுவலர், 11 மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 31.05.2014 அன்று ஒய்வுபெறுவதையொட்டி பொறுப்பு அலுவலர்கள் நியமனம் செய்து இயக்குநர் உத்தரவு




தனியார் பள்ளிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு முன் அனுமதி தேவையில்லை


தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே பொதுத்தேர்வு எழுத முடியும்: கல்வித்துறை

அடுத்த கல்வியாண்டு (2015-16) முதல், அனைத்து பள்ளிகளிலும் 10ம் வகுப்பில் தமிழ் முதல்பாடமாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அரசு பொதுத்தேர்வு எழுத முடியும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

சென்னையில், அமைச்சர் வீரமணி தலைமையில், பள்ளிகல்வித்துறை ஆய்வுக்கூட்டம் நடந்தது. முதன்மை செயலர் சபீதா, அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி, மெட்ரிக் பள்ளி இயக்குனர் பிச்சை, உயரதிகாரிகள், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், தொடக்ககல்வி அதிகாரிகள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். 

மாவட்ட வாரியாக, பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதம், அதை அதிகரிப்பது எப்படி, மாணவர்களுக்கு அரசின் இலவச நலத்திட்டங்களை வழங்குவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. அடுத்த கல்வியாண்டு(2015-16) முதல், மெட்ரிக் உள்ளிட்ட அனைத்துப் பள்ளிகளிலும், 10ம்வகுப்பில், தமிழ் முதல் பாடமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அம்மாணவர்கள், அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறியதாவது: ஆறாம் வகுப்பில், தமிழ் முதல்பாடமாக கட்டாயம் இருக்க வேண்டுமென முன்னர் அமல்படுத்தப்பட்ட திட்டம், படிப்படியாக அடுத்தடுத்த வகுப்புகளுக்கு கொண்டுவரப்பட்டு, அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் அமல்படுத்தப்படுகிறது. தமிழ் முதல்பாடமாக இருந்தால் மட்டுமே, அப்பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத முடியும்.

மாறாக, மலையாளம், இந்தி, தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் உள்ளிட்டவற்றை முதல்பாடமாக எடுத்தால், அவர்கள் கண்டிப்பாக தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டது. தமிழ் பாடத்தை கட்டாயமாக்கும் நோக்கிலேயே இவ்வாறு கூறப்பட்டது.

தற்போது பிற மொழியை, முதல் பாடமாக எடுத்து படிக்கும் மாணவர்கள் 500க்கு 500 பெற்றாலும், அவர்களுக்கு மாநில ரேங்க் தரப்படுவதில்லை. கடந்த கல்வியாண்டில், 3, 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. அதில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, அவர்களை மேம்படுத்தும் நோக்கில் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்து பயிற்சி, கணிதப்பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

புதிதாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தால் மட்டுமே ஊதியம்

தமிழக அரசு 1.4.2003 முதல் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய பென்ஷன் திட்டத்தை (சிபிஎஸ்) தமிழ அரசு ஊழியர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. 
 
அவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் ஏராளமானோர் புதிய பென்ஷன் திட்டத்தில் சேரவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் 1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து சிபிஎஸ் பதிவு எண் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
 
புதிய அரசு ஊழியர்கள் சிபிஎஸ் எண் பெறுவதற்கு அந்தந்த துறை தலைவர்கள், அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கான படிவத்தை பூர்த்தி செய்து அதனை துறை தலைவர் வாயிலாக அரசின் டேட்டா சென்டருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கிருந்து சிபிஎஸ் எண் பெற்றுக்கொள்ள வேண்டும்.
1.4.2003க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களில் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இனி ஊதியம் கோரப்பட வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான எண் பெறுவதற்காக மேலும் 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறை தலைவர்களும், தலைமை அதிகாரிகளும், சம்பள பிரிவில் உள்ள அதிகாரிகளும் புதிய ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்து அதற்கான எண் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழைய ஓய்வூதிய திட்ட விவரங்களை மட்டுமே பராமரிப்பதால் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்களின் விவரங்களை அளிக்க இயலாது - தமிழக AG அலுவலகம் தகவல் உரிமைச் சட்டத்தில் தகவல்


Popular Posts