Cabinet decision: Railway employees to get Productivity Linked Bonus equivalent to 78 days of wages.

The Union Cabinet has accepted the proposal of the Ministry of Railways for payment of Productivity Linked Bonus (PLB) equivalent to 78 days' wages for the financial year 2010-2011 for all eligible non-gazetted Railway employees.


The financial implication of payment of 78 days' PLB to railway employees has been estimated to be Rs.1098.58 crore. The wage calculation ceiling prescribed for payment of PLB to the eligible non-gazetted railway employees is Rs.3500/- p.m.

About 12.61 lakh non-gazetted Railway employees are likely to benefit from the decision.

Payment of PLB to eligible railway employees is made each year before the Dusshera/ Puja holidays. The decision of the Cabinet shall be implemented before the holidays for this year as well.

This will be the highest PLB payment ever to be made by Railways. PLB is based on the productivity indices reflecting the performance of the Railways and its payment is expected to motivate the employees for working towards improving the same in future.

Source : PIB

அரசுப்பள்ளி பாழல்ல! அன்னை தமிழும் பாழல்ல!!

கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றும் பணியிடம் இன்றி தவிக்கும் ஆசிரியர்கள்

விருதுநகர் : தமிழகத்தில் ஆசிரியர் கவுன்சிலிங்கில் பணி மாறுதல் பெற்றவர்கள், காலிப்பணியிடம் இல்லாததால் தவிக்கின்றனர். இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் கவுன்சிலிங் முடிந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அனுமதித்த காலிப்பணியிடங்களுக்கு மட்டுமே கவுன்சிலிங் நடத்தப்பட்டது. இதில் பணியிட மாறுதல் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு செல்லும்போது, அங்கு காலிப்பணியிடங்கள் இல்லாத நிலை உள்ளது. நேரடி பணி மாறுதல் பெற்றவர்கள் பணியில் இருப்பதாலும், புதிய நியமனங்களின் மூலம் பணியில் சேர்ந்திருப்பதாலும் சிக்கல் உள்ளது. இதனால், பணியிட மாறுதல் பெற்றவர்கள், சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் சென்று, மீண்டும் வேறு பள்ளிக்கு பணி மாறுதல் உத்தரவு பெற வேண்டிய நிலை உள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், "" பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்கள், காலிப்பணியிடம் இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்படுகிறது. கால விரையம், வீண் செலவு, மன உளைச்சலாலும் பாதிக்கின்றனர்,'' என்றார்.


நன்றி! தினமலர்









லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து: ஒரு "ஹீரோ'வின், "ப்ளாஷ்பேக்'


"ஒரு நாள் இந்த ஆபீசுக்குள்ளே போய், கலெக்டர் சீட்டில் உட்காரணும்...' புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை தன் சகோதரருடன் சைக்கிளில் கடக்கும்போதே, ஆசை விதை, அந்த சிறுவனுக்குள் முளைவிட்டிருந்தது. அந்த விதை, இன்று விருட்சமாக வளர்ந்து, மதுரையில் மையம் கொண்டு, நாட்டையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. தேர்தல் களத்தை சூடாக்கிய அந்த, "ஹீரோ' மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம்.



புதுக்கோட்டை மாவட்டம் பெருஞ்சுணை கிராமத்தை சேர்ந்த, உபகாரம் என்பவருக்கு, ஐந்து மகன்கள். இதில் கடைக்குட்டியாய் பிறந்தவர் சகாயம். பெருஞ்சுணையில் பள்ளிப்படிப்பு, புதுக்கோட்டையில் பட்டப்படிப்பு, சென்னையில் முதுநிலை பட்டப்படிப்பு, சட்டப்படிப்பு என, அடுத்தடுத்து தன் கல்வி தகுதியை சகாயம் உயர்த்திக் கொண்டார். சிறுவனாய் இருந்தபோது முளைத்த, "கலெக்டர் கனவு' நிறைவேற, யு.பி.எஸ்.சி., தேர்வு எழுத வைத்தது. ஐ.ஏ.எஸ்., கிடைக்காத நிலையில், ஏற்கனவே எழுதியிருந்த, டி.என்.பி.எஸ்.சி., குரூப்-1 தேர்வு முடிவுகள் வெளியாக, துணை கலெக்டரானார் சகாயம். தர்மபுரியில் பயிற்சி கலெக்டர், நீலகிரி மாவட்டம், கூடலூரில், ஆர்.டி.ஓ., திருச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது), கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலை சிறப்பு அதிகாரி, காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ., திருச்சி சிவில் சப்ளைஸ் முதுநிலை மண்டல மேலாளர், கோவை கலால் பிரிவு துணை கமிஷனர், சென்னை, டி.ஆர்.ஓ., தொழில் வணிகத்துறை இணை இயக்குனர், மாநில தேர்தல் ஆணைய செயலர், நுகர்பொருள் வழங்கல் துறை இணை ஆணையர், நாமக்கல் மாவட்ட கலெக்டர், புது திருப்பூர் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குனர், மதுரை கலெக்டர் என, இவர், "பந்தாடப்பட்ட' விதமே இவரது நேர்மைக்கு சான்றாக சொல்லலாம்.

பதவி வகித்த இடங்களில் சகாயம் படைத்த சாதனைகளில் சில:

* அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்.டி.ஓ.,வாக இருந்த போது, நேர்மையான நடவடிக்கைகளால், அப்பகுதி மக்களின், "தோழனாக' மாறினார் சகாயம். அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த லீனாநாயருக்கு, சகாயத்தின் செல்வாக்கு சங்கடத்தை கொடுக்க, அதிரடியாக அங்கிருந்து மாற்றம் செய்யப்பட்டார்.


* காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ.,வாக இருந்தபோது, மாசடைந்த குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக வந்த புகாரையடுத்து, "பெப்சி' குளிர்பான உற்பத்தி ஆலைக்கு, "சீல்' வைத்து பரபரப்பு ஏற்படுத்தினார். பாலாற்றில் மணல் திருட்டை தடுக்க எடுத்த கடுமையான நடவடிக்கையால், கொலை முயற்சி தாக்குதலில் இருந்து தப்பினார்.


* கோவை மாவட்டத்தில் கலால் துறை துணை ஆணையராக இருந்த போது, மதுபானக் கடை ஏலத்தை அரசு விதிமுறைப்படி நடத்த வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். அரசியல்வாதிகள், பினாமிகள் பெயரில் ஏராளமான கடைகளை எடுப்பதையும், "சிண்டிகேட்' முறையில் நடந்த முறைகேடுகளுக்கு, "செக்' வைத்தார்.


* அ.தி.மு.க., ஆட்சி நடந்த போது, திருப்பூர் அ.தி.மு.க., பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான பிராந்தி கடைகளில் அதிரடி சோதனைகளை நடத்தி பரபரப்பு ஏற்படுத்தினார். கோவையில் பிரபலமான சைவ ஓட்டலில், அனுமதி பெறாமல் மது வகைகள் பதுக்கி விற்கப்படுவதை அறிந்து, நேரடியாக, "ரெய்டு' நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார்.


* சென்னை டி.ஆர்.ஓ.,வாக இருந்தபோது, பிரபல ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்திருந்த, 48 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிரடியாக மீட்டார். இதேபோல், 500 கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு ஆக்கிரமிப்புகள், சகாயத்தால் அரசின் வசமானது. சுனாமி நிவாரண பணிகளில் நடந்த முறைகேடுகளை களைந்து, உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் பலன் பெற உதவினார்.


* தி.மு.க., ஆட்சியின் போது, முதல்வருக்கு இவர் எழுதிய கடிதம், அதிகாரிகள் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "நேர்மையான அதிகாரிகள் புறக்கணிக்கப்படுகின்றனர்' என்பதோடு, தன் சொத்து விவரம், வங்கிக் கணக்கு உள்ளிட்டவற்றை கடிதத்தில் குறிப்பிட்டு, "இது தவிர எனக்கு ஏதாவது சொத்து இருந்தால், நடவடிக்கை எடுங்கள்' என்று பகிரங்கமாக சவால் விடுத்தார். அதோடு, "நியாயம் கேட்டு, குடும்பத்தோடு உண்ணாவிரதம் இருப்பேன்' என்ற போர் குரலை தொடர்ந்தே, சகாயத்திற்கு ஐ.ஏ.எஸ்., தகுதி உயர்வு கிடைத்தது என்கிறது நேர்மையான அதிகாரிகள் வட்டாரம்.


* நாமக்கல் மாவட்ட கலெக்டராக சகாயம் பணியாற்றிய இரண்டரை ஆண்டுகள், அந்த மாவட்ட மக்களுக்கு பொற்காலமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் தன் சொத்து கணக்கை வெளியிட்டு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மட்டத்தில் பொறாமைக்குள்ளானார்; பொதுமக்கள் மத்தியில் பெருமைக்குள்ளானார்.


* இவரது நேர்மைக்கு தேர்தல் கமிஷன் கொடுத்த அங்கீகாரம், தற்போதைய மதுரை கலெக்டர் பதவி. இவரது இருக்கைக்கு பின்புறம் இருக்கும் வாசகங்கள், "லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிர்த்து!'
நன்றி! கல்விசோலை.

கூடங்குளமும் புகுஷிமாவும்

கூடங்குளமும் புகுஷிமாவும்

-என்.ராமதுரை

தமிழகத்தின் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கும் ஜப்பானில் விபத்துக்குள் ளாகிய புகுஷிமா அணுமின் நிலையத்துக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. கூடங்குளம் தமி ழகத்தின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. புகுஷிமாவும் அப்படித்தான். அது ஜப்பானின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது.


தமிழகத்தை 2004-ல் சுனாமி அலைகள் தாக்கின. புகுஷிமாவை இதேபோல கடந்த மார்ச் மாதம் சுனாமி தாக்கியது. ஆனால், ஒற்றுமைகள் இதோடு சரி, புகுஷிமாவில் உள்ள நிலைமைகள் வேறு. கூடங்குளத்தில் உள்ள நிலைமைகள் வேறு. ஆகவே, புகுஷிமா அணு மின் நிலையத்துக்கு ஏற்பட்ட கதி கூடங்குளத்துக்கு ஏற்பட வாய்ப்பே கிடையாது. முக்கிய காரணம் பூகோள நிலைமைகள்.


நிலப்பகுதியில் ஏற்படுவதைப்போலவே கடலுக்கு அடியிலும் பூகம்பங்கள் ஏற்படுகின் றன. கடலடி பூகம்பங்கள் சில இடங்களில் மட்டுமே நிகழ்கின்றன. பூமியின் மேற்பரப்பா னது பல சில்லுகளால் ஆனது. ஆங்கிலத் தில் இவற்றை “பிளேட்’ என்கிறார்கள். உல கின் கண்டங்களும் கடல்களும் இந்தச் சில் லுகள் மீது தான் அமைந்துள்ளன. சில்லுகள் என்பவை பூமியின் மேற்பரப்புக்கு அடியில் அமைந்த பிரம்மாண்டமான பாறைப் பாளங்கள்.


ஒரு சில்லு என்பது பல ஆயிரம் கிலோ மீட்டர் நீள அகலம் கொண்டதாகவும், பல கிலோ மீட்டர் தடிமன் கொண்டதாகவும் இருக்கலாம். உதாரணமாக, இந்தியத் துணைக் கண்டமும் அதைச் சுற்றியுள்ள கடல்களும் இந்தியச் சில்லு மீது அமைந்துள்ளது. சில்லு கள் ஆண்டுக்குச் சில சென்டிமீட்டர் வேகத் தில் நகருகின்றன. இந்தியச் சில்லு வடகிழக் குத் திசையை நோக்கி நகர்ந்து ஐரோப்பாவும் ரஷியாவும் மத்திய ஆசிய நாடுகளும் அமைந்த யூரேசிய சில்லுவை நெருக்குகிறது.


அண்மையில் சிக்கிமில் ஏற்பட்ட பூகம் பத்துக்கு இதுவே காரணம். ஒரு சில்லு இன் னொன்றை நெருக்காமல் அதை உரசிச்செல் வது உண்டு. வேறு இடங்களில் ஒரு சில்லு இன்னொரு சில்லுக்கு அடியில் புதையுண்டு போவதும் உண்டு. பூமியின் மேற்பரப்பில் பிரதானமாக ஏழு பெரிய சில்லுகளும் மற்றும் பல சிறிய சில்லுகளும் உள்ளன. இந்தச் சில் லுகள் சந்திக்கும் இடங்களில்தான் பிரச்ச னைகள் தோன்றுகின்றன.


இந்தியா அமைந்த சில்லுவின் கிழக்குப் பகுதியானது வங்கக் கடலுக்கு அடியில் பர்மா சில்லுக்கு அடியில் புதைகிறது. இப்படி நிக ழும்போது கடலடியில் கடும் பூகம்பம் ஏற் படும். 2004-ல் இப்படி நிகழ்ந்தபோதுதான் சுனாமி தோன்றி தமிழகத்தைத் தாக்கியது. மிகக் கடுமையான கடலடி பூகம்பங்களே சுனாமியை உண்டாக்குகின்றன. சுனாமி யைத் தோற்றுவிக்கக்கூடிய கடலடி மடு தமி ழகக் கரையிலிருந்து குறைந்தது 1,500 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. 2004-ல் சுனாமி தோன்றியதற்குக் காரணமான கடலடி பூகம்பம் தமிழகக் கரையிலிருந்து சுமார் 1,860 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்டது.


தமிழகத்துடன் ஒப்பிட்டால், ஜப்பானைச் சுற்றி பசிபிக் சில்லு, யூரேசிய சில்லு, வட அமெரிக்க சில்லு, பிலிப்பின்ஸ் சில்லு எனப் பல சிறிய சில்லுகள் அமைந்துள்ளன. இந்தச் சில்லுகளின் சந்திப்புகள் ஜப்பானின் கரை களுக்கு மிக அருகில் உள்ளன. ஜப்பானில் ஓயாது பூகம்பங்கள் நிகழ்வதற்குக் காரணம், இந்தச் சில்லுகளின் நகர்வுகளே.


ஜப்பானின் கிழக்குப் பகுதியில் சில்லுகள் ஒன்றுக்கு அடியில் இன்னொன்று புதைவதும் நிகழ்ந்து வருகிறது. இவை கடலடி பூகம்பங் களை உண்டாக்கும்போது சுனாமிகள் தோன் றுகின்றன. ஜப்பானில் சுனாமி தாக்குதல் என்பது சகஜம். சுனாமி என்பதே ஜப்பானியச் சொல்லாகும். ஜப்பானில், பூகம்ப எச்சரிக்கை நிலையங்களும், சுனாமி எச்சரிக்கை நிலை யங்களும் நிறையவே உள்ளன. ஆனால், எச்சரிக்கை விடுக்கப்பட்ட பின் உஷார் ஆவதற்குப் போதுமான அவகாசம் இருந்தால் தான் எச்சரிக்கைக்கு அர்த்தம் உண்டு.


இந்த ஆண்டு மார்ச் 11-ம் தேதி புகுஷிமா வைத் தாக்கிய பூகம்பம் ரிக்டர் அளவுகோ லில் 9-ஆக இருந்தது. உடனே பூகம்ப எச் சரிக்கையும் சுனாமி எச்சரிக்கையும் விடப்பட் டன. ஆனால், சுனாமிக்குக் காரணமான கட லடி பூகம்பம் புகுஷிமாவிலிருந்து 130 கிலோ மீட்டர் தொலைவில் நிகழ்ந்தது. சுனாமி அலைகள் மணிக்கு 500 கிலோ மீட்டர் வேகத் தில் செல்பவை. ஆகவே, சுனாமியிலிருந்து தப்ப, போதுமான அவகாசம் கிடைக்கவில்லை.


இத்துடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் கரை ஓரமாகக் கடலடியில் பூகம்பம் ஏற்பட வாய்ப்பே இல்லை. கடலடி பூகம்பம் ஏற்படக் கூடிய, அதாவது சுனாமி தோன்றக்கூடிய பகுதி என்பது தமிழகத்திலிருந்து குறைந்தது 1,800 கிலோமீட்டரில் உள்ளது. ஆகவே, அப் பகுதியில் எதிர்காலத்தில் என்றாவது ஒரு நாள் பெரிய சுனாமி தோன்றியது என்றால் தமி ழகக் கரை ஓரமாக உள்ள இடங்களில் முன் னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் குறைந் தது மூன்றரை மணி நேரம் அவகாசம் கிடைக்கும்.


2004-ம் ஆண்டுக்கு முன்னர் வங்கக் கடல் பகுதியில் சுனாமியைக் கண்டறிந்து எச்சரிக்கை செய்ய எந்த ஏற்பாடும் இல்லா திருந்தது. அவ்வித ஏற்பாடு இல்லாமல் இருந்த நிலையிலும், தமிழகத்தின் கரை ஓரமாக அமைந்துள்ள கல்பாக்கம் அணுமின் நிலை யத்துக்குப் பெரிய பாதிப்பு ஏற்படவில்லை. இப் போது சுனாமி எச்சரிக்கை நிலையங்கள் உள் ளதால், சுனாமி தாக்குதல் ஏற்படும் என்றால் கல்பாக்கத்திலும் சரி, கூடங்குளத்திலும் சரி முன்கூட்டி தக்க நடவடிக்கைகளை மேற் கொள்ள நிறைய அவகாசம் கிடைக்கும்.


எந்த ஓர் அணுமின் நிலையத்திலும் முக் கியமான பகுதி அணு உலையாகும். யுரேனி யம் அடங்கிய உலோகத் தண்டுகள் கட்டுக் கட்டாக அணு உலைக்குள் வைக்கப்பட்டி ருக்கும். யுரேனியம் அடங்கிய தண்டுகளை அருகருகே வைத்த மாத்திரத்தில் சில நூறு சென்டிகிரேட் அளவுக்குப் பயங்கர வெப்பம் தோன்றும். யுரேனியத்தின் விசேஷத்தன்மை இதற்குக் காரணம். இத்தண்டுகளை அப்படி யேவிட்டால் உருகும், ஆவியாகும், காற்றில் கலந்து சுற்று வட்டாரத்தில் கதிர்வீச்சு ஆபத்தை ஏற்படுத்தும்.


ஆகவே, அணுஉலை எப்போதும் தண் ணீருக்குள் இருக்க வேண்டும். ஒருபுறத்திலி ருந்து குளிர்ந்த நீர் வந்து கொண்டிருக்கும். மறுபுறம் அந்த நீர் பயங்கரமாகச் சூடேறி நீராவி யாகி வெளியே சென்று கொண்டிருக்கும். இவ்விதமாகத் தோன்றும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரை இயக்கி மின்சாரத் தை உற்பத்தி செய்கிறார்கள்.


பூகம்பம் ஏற்பட்டால் அணுமின் நிலை யம் பாதிக்கப்படலாகாது என்பதற்காக, எல்லா அணுமின் நிலையங்களிலும் அணுமின் நிலையம் தானாகவே செயல்படாது நின்று விடும். ஆகவே, மின்சார உற்பத்தி அடியோடு நின்றுவிடும். அப்படியானால் அணு உலை என்னாவது? அதற்குத் தொடர்ந்து நீர் கிடைக் காவிட்டால் ஆபத்தாயிற்றே. ஆகவே, எல்லா அணுமின் நிலையங்களிலும் டீசலால் இயங் கும் ஜெனரேட்டர்களை வைத்திருப்பர். அணு உலைக்கு நீரை அளிப்பதற்கான பம்புகள் செயல்படுவதற்கான மின்சாரத்தை டீசல் ஜெனரேட்டர்கள் அளிக்கும்.


புகுஷிமா அணுமின் நிலையத்தைச் சுனாமி தாக்கியபோது டீசல் ஜெனரேட்டர்கள் கடல் நீரில் மூழ்கிப்போயின. அவை கடலோ ரமாகத் தாழ்வான இடத்தில் வைக்கப்பட்டி ருந்ததே காரணம். இவை மட்டும் உயரமான இடத்தில் வைக்கப்பட்டிருந்தால் புகுஷிமா வில் எந்த விபத்தும் ஏற்பட்டிராது. கல்பாக்கத் தில் டீசல் ஜெனரேட்டர்கள் உயரமான இடத் தில் இருந்ததால் 2004-ல் சுனாமி தாக்கிய போது பிரச்சனை ஏற்படவில்லை. இப்போ தெல்லாம் அணுமின் நிலையங்களில் நீரை அளிக்கும் பம்புகளை இயக்குவதற்குக் கூடு தல் ஏற்பாடாக பெரிய மின்சார பாட்டரி களையும் வைத்திருக்கின்றனர்.


டீசல் ஜெனரேட்டர் செயலிழந்தால் பாட் டரிகளைப் பயன்படுத்துவர். புகுஷிமாவில் இப்படியான நவீன ஏற்பாடுகள் இல்லாத தற்கு அது கட்டி 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது என்பதேயாகும். தவிர, சில ஆண்டுக ளில் புகுஷிமா அணுமின் நிலையத்தை மூடி விடத் திட்டமிட்டிருந்தனர்.


ஆகவே, அங்கு நவீன ஏற்பாடுகளை மேற்கொள்ளவில்லை. சுருங்கச்சொன்னால் புகுஷிமாவில் விபத்து ஏற்பட்டதற்கு டீசல் ஜெனரேட்டர்கள் இயங்காமல் போனதே காரணம்.


உலகில் இப்போது 30 நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் உள் ளன. புகுஷிமா விபத்துக்குப் பிறகும் இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. எனினும், புகுஷிமா விபத்துக்குப் பிறகு பொதுவில் மக்களிடையே அணுமின் நிலையங்கள் பற்றி ஒரு பயம் தோன்றியுள்ளது.


எங்கோ ஒரு ரயில் விபத்தில் 100 பேர் மடிந்ததாகச் செய்தியைப் படிக்கின்ற ஒருவர், மறுநாள் காலையில் ரயிலில் ஏறும்போது அவர் மனதில் ஓர் அச்சம் நிலவும். இது இயல்பு. கூடங்குளம் பற்றிய அச்சமும் கிட் டத்தட்ட இது போன்றதே. எனினும் ரயில் விபத்தையும் அணுமின் நிலைய விபத்தையும் ஒப்பிட முடியாதுதான்.


எல்லாம் சரி, அணுமின் நிலையங்க ளுக்கு மாற்று உள்ளதா? நிலக்கரியைப் பயன் படுத்தும் அனல் மின் நிலையங்களை அமைப்பது தலைவலிபோய் திருகுவலி என் பதற்கு ஒப்பானது. காற்றைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் காற்றாலை கள் மூலம் ஆண்டில் சில மாதங்களுக்கு மட் டுமே மின்சாரம் கிடைக்கும். சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற இயலும். ஆனால், ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ரூ. 25 வீதம் செலுத் தத் தயாராக இருக்க வேண்டும். எரிவாயு மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


தமிழகத்தில் போதுமான எரிவாயு கிடைக் கவில்லை. ஆந்திர மாநிலத்தின் கரை ஓர மாகக் கடலுக்கு அடியில் ஏராளமான அள வில் எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராட்சதக் குழாய்கள் மூலம் இதைத் தமிழகத் துக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்யப்படுமா னால் எரிவாயுவைப் பயன்படுத்தும் மின் நிலையங்களை அமைக்க முடியும்.


ஏற்கெனவே நிறுவப்பட்டுத் தயார் நிலை யில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தை என்ன செய்வது? அது பாதுகாப்பானதுதான் என்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரையில் காத்திருப்பதைத் தவிர, வேறு வழியில்லை என்றே தோன்று கிறது.

நன்றி: தினமணி (23.9.2011)



பள்ளிக்கல்வித்துறை: 2011-12 ஆண்டிற்கான நாட்காட்டி:

பள்ளிகல்வி புதிய இயக்குனர்கள்:


DIRECTORS OF EDUCATION DEPARTMENT OF TAMIL NADU


S.NO DESIGNATION DIRECTORS PHONE NUMBER

1. DIRECTOR OF SCHOOL EDUCATION Mr P.MANI 044-28278796,
044-28232580 (Fax)



2. DIRECTOR OF GOVERNMENT EXAMINATIONS Mrs D.VASUNDHARADEVI
044-28278286, 9444216250



3. DIRECTOR OF ELEMENTARY EDUCATION Mr A.SANKAR 044-28270169, 9840615670



4. DIRECTOR OF MATRICULATION SCHOOLS Mrs T.H.CHENTHAMIZHSELVI 044-28271169, 9444188868



5. DIRECTOR OF PUBLIC LIBRARIES Mr ANBAZHAGAN 044-28550983,



6. DIRECTOR OF NON FORMAL AND ADULT EDUCATION Mr KARUNAKARAN 044-28272048, 9884802396



7. DIRECTOR OF TEACHERS EDUCATION RESEARCH AND TRAINING Mr K.DEVARAJAN 044-28278742, 9444028803



8. SARVA SHIKSHA ABHIYAN Mrs JEYASHREE RAGHUNANTHAN 044-28278068,



9. TAMIL NADU TEXT BOOK SOCIETY 044-28271468



10. TEACHERS RECRUITMENT BOARD Mr G.ARIOLI 044-28269968,9444028268



11. RMSA Mr Dr R.ELANGOVAN 044-


PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் - 26-09-2011 அன்று சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் - மாலை 2 மணிக்கு

தோழர்களே. மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அரசுப் பணிகளை மேற்கொண்டதன் காரணமே, வேலைக்குப் பாதுகாப்பு உண்டு, பணியிலிருந்து ஓய்வு பெற்றால் ஓய்வூதியம் உண்டு என்பதுதான். ஆனால் இன்று பணிப்பாதுகாப்பும், ஓய்வூதியமும் இல்லாமல் போகும் ஆபத்து உருவாகி உள்ளது. இந்திய நாட்டின் அரசியல் சட்டம் முதியோருக்கு ஓய்வூதியம் அளிப்பதை வழிகாட்டும் நெறிமுறையாக ஏற்றுக் கொண்டுள்ளது. உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பிலும் ‘ஓய்வூதியம் என்பது பிச்சைக்காரன் தட்டில் போடப்படும் பிச்சைக்காசு அல்ல. ஒவ்வொரு ஊழியனின் சட்டப்படியான உரிமை’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. பல்வேறு அணி திரட்டப்படாத துறைகளில் பணி புரியும் படிக்காத பாமரர்களுக்கும் மத்திய அரசும், மாநில அரசுகளும் ஓய்வூதிய திட்டத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களாகவே தங்களுடைய ஓய்வூதியத்தை உயர்த்திக் கொள்கிறார்கள். ஆனால் முப்பது வருடம், முப்பத்தி ஐந்து வருடம் என்று உழைத்து ஓடாய்த் தேய்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் கிடைக்குமா? தோழர்களே, பா.ஜ.க. தலைமையிலான NDA அரசாங்கம் 2002ல் புதிய ஓய்வூதிய திட்ட மசோதாவை நாடாளூமன்றத்தில் அறிமுகம் செய்தது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடும் எதிர்ப்பினால் மசோதா நாடாளூமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. நிலைக் குழுவிலும் மத்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனங்களும், இரயில்வே ஊழியர் மற்றும் பாதுகாப்பு ஊழியர் சம்மேளனங்களும் இந்த திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். 2004ல் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் தலைமையிலான UPA-I மீண்டும் நாடாளுமன்றத்தில் ஓய்வூதிய மசோதாவை அறிமுகப்படுத்தியது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்பின் காரணமாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்படவில்லை. எனவே, அன்றைய நிதி அமைச்சர் திரு.ப.சிதம்பரம் அவர்கள் முதலமைச்சர்களின் மாநாட்டைக் கூட்டி, அந்த மாநாட்டின் முடிவாக ஒரு Executive Orderஐப் போட்டு 1-1-2004 முதல் பணியில் சேரும் மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டு விட்டது. இந்த புதிய ஓய்வூதிய மசோதாவின்படி, ஊழியர்களிடமிருந்து 10% ஊதியம், பஞ்சப்படி பிடிக்கப்படும். மற்றும் அரசு தன் பங்காக 10% வழங்கும். அரசு, ஊழியர் பங்களிப்பு இரண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்படும். இதை நிர்வகிப்பதற்கென்று ஒரு நிதி மேலாளரும், உறுப்பினரும் நியமிக்கப்படுவார்கள். அதன்படி, 1. SBI Funds Pvt.Ltd. 2.UTI Retirement Solutions 3. LIC Pension Fund Pvt. Ltd. ஆகிய நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணத்தைப் பராமரிப்பதற்கென்று National Securities and Depositories Limited நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் போடப்படும் பணத்திற்கும் அதன் வருமானத்திற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை. இந்த PFRDA Billல் Section 20(f) படி நம்முடைய ஓய்வூதியத்திற்கு எந்த ஒரு implicit மற்றும் explicit உத்தரவாதம் இல்லை என்றும், சந்தைதான் அதை நிர்ணயிக்கும் என்றும் கூறியுள்ளது. அதாவது பங்குச் சந்தையில் இலாபம் ஈட்டினால் ஒரு வேளை ஓய்வூதியம் கிடைக்கலாம். மேலும் இந்தத் திட்டத்தில் சேர்ந்தவர்கள் ஓய்வு பெறும் போது, தான் சேர்த்த 60%ஐ மட்டுமே கையில் பெற முடியும். மீதமுள்ள 40%த்தை பங்குச் சந்தையில் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். VRSல் செல்வோர் 20%த்தைக் கட்டாயம் முதலீடு செய்ய வேண்டும். இப்படி முதலீடு செய்யும் பணத்தின் வருமானத்திற்கு எந்த ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஒரு வேளை முதலீடு செய்த பிறகு இறந்து போனால், போட்ட பணமும் கிடைக்காது. குடும்ப ஓய்வூதியமும் கிடையாது. பணத்தை சேமித்து வைத்து விட்டு ஒருவர் இறந்து போனால், அந்தப் பணம் அவருடைய குடும்ப வாரிசுகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பது இந்திய திருநாட்டின் சட்டம். ஆனால், இந்தத் திட்டத்திற்கு இந்த சட்டம் பொருந்தாதாம். நாம் வாங்கிக் கொண்டிருக்கும் ஓய்வூதியத் திட்டத்தின் பெயர் Defined Benefit Scheme. இந்தத் திட்டத்தில் என்ன ஓய்வூதியம் கொடுக்கப்படும் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஓய்வூதியத் திட்டமான Defined Contribution Schemeல் சம்பளத்தில் எவ்வளவு பிடிக்கப்படும் என்று மட்டும் கூறப்பட்டுள்ளது. நண்பர்களே, தோழர்களே, இப்போது சொல்லுங்கள். இது New Pension Schemeமா? அல்லது No Pension Schemeமா? எனவே இதை முறியடிக்க ஊழியர்களை அணி திரட்டவும், மக்களின் ஆதரவைத் திரட்டவும் ஒரு புதிய ஒற்றுமை உருவாகியுள்ளது. ரயில்வேயில் உள்ள SRMU, DREU, Loco Running Staff, ICF Workers union, பாதுகாப்புத் துறையில் உள்ள AIDF, BSNL ஊழியர் சங்கங்கள், Confederation, தமிழ்நாட்டிலுள்ள அரசு ஊழியர் இயக்கங்களான TNGEA, TNGEU, Secretariat Employees Union, தமிழ்நாடு அனைத்துப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு, AUT, MUTA, GCTA உள்ளிட்ட கல்லூரி ஆசிரியர்கள் அமைப்புகள், பல ஓய்வூதியம் பெறுவோர் அமைப்புகள் ஒன்று சேர்ந்து 10-09-2011 அன்று PFDRA மசோதா எதிர்ப்புக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளார்கள். அதன் தலைவராக SRMU தலைவர் தோழர் C.A. இராஜா ஸ்ரீதர் மற்றும் தோழர் M. துரைப்பாண்டியன் அவர்களை Convenor ஆகவும், அனைத்து சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் இணை கன்வீனர்களாகவும் செயல்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. வரும் 26-09-2011 அன்று மாலை 2 மணிக்கு சென்னை சின்னமலையில் உள்ள செயிண்ட் தாமஸ் கம்யூனிட்டி ஹாலில் PFRDA மசோதா எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெறும். அதன்பின் தமிழக ஆளுநரைச் சந்தித்து மனு வழங்குவது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை இந்த மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதை முறியடிக்கும் விதமாக அன்றைய தினமே இந்த மசோதாவுக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தைத் தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தோழர்களே, நம்முடைய ஓய்வூதியத்தைப் பாதுகாக்க ஓரணியில் அணி திரள்வோம். புதிய ஒற்றுமையை மேலெடுத்துச் சென்று மேலும் பல வெற்றிகளைக் குவிப்போம்.


தோழமையுடன் C.A. இராஜா ஸ்ரீதர்

விடுப்பும் ஊதியமும்:

துய்க்கும் விடுப்பு உரிய ஊதியம்

ஈட்டிய விடுப்பு:
 முழு ஊதியம்+ அனைத்து படிகள் (விதி 28-ஏ)


மருத்துவ விடுப்பு:
(ஈட்டா விடுப்பு ) முழு ஊதியம்+ அனைத்து படிகள்
(விதி 28-ஏ)



சொந்த காரண ஈட்டா விடுப்பு:

அடிப்படை ஊதியம் 50%+
அனைத்து படிகள் (விதி 28-ஏ)


ஒப்புவிப்பு விடுப்பு:

(ஈட்டிய விடுப்பு) முழு ஊதியம்+ அனைத்து படிகள்

(அரசு கடிதம் 34412/படி 1189-2, நிதி நாள் 5.5.89) மருத்துவப்படி இல்லை



ஒப்புவிப்பு விடுப்பு சொந்த காரண விடுப்பு:

முழு ஊதியம்+ அனைத்து படிகள்
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)



மகப்பேறு விடுப்பு:

முழு ஊதியம்+ அனைத்து படிகள்
அ.வி. 18.85 எ & (விதி 23-எ)

ஊதியமில்லா விடுப்பு:
ஊதியம் இல்லை



முடியாமை விடுப்பு:

Disability Leave முதல் 4 மாதங்கள் =முழு ஊதியம் +படிகள்
அடுத்த 2 மாதங்கள் =அரை ஊதியம்&படிகள் (அ.வி. 83& 83 ஏ)



மருத்துவமனை விடுப்பு (Hospital) :
முதல் 3 மாதங்கள் =முழு ஊதியம்
அடுத்த 3 மாதங்கள் =அரை ஊதியம் (அ.வி. 101 ஆ 2)



தற்செயல் விடுப்பு &சிறப்பு தற்செயல் விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள்



ஊதியமில்லா விடுப்பும் கருணைத்தொகையும்:
 மருத்துவ விடுப்பு 540 நாள்கள் எடுத்துவிட்ட தொழு/காச/புற்று நோயாளி பணியாளருக்கு ஊதிய வேறுபாடின்றி 24 மாதங்களுக்கு ஊதியமில்லா விடுப்பிளிருக்கும்போது மாதந்தோறும் ரூ 250 கருணைத்தொகையாக வழங்கப்படும் (அரசாணை ப.நி.சீ. நாள் 17.10.88)



தத்தெடுப்பதற்கு: வளர்ப்பதற்கு விடுப்பு:
முழு ஊதியம்+ அனைத்து படிகள் (அரசாணை 342 ,சமூக நலம் நாள் 08.12.95 ) (அரசு கடிதம் 20300 சமுக நலம் 96-1 நாள் 05.09.96 )

ஆசிரியர் கவுன்சிலிங் முன்னுரிமை: "ஸ்பவுஸ்' கட்டுப்படுத்த திட்டம்

ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.


ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

• ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி,

•கண்பார்வை இல்லாதவர்,

•விதவை,

•40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,

•மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி,

•இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்,

•மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர்

போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர்.

கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன.

நன்றி!


டூ வீலர் வைத்திருந்தால் 4 சிலிண்டர் தான்! மக்கள் தலையில் இடியை இறக்குகிறது மத்தியஅரசு

புதுதில்லி, செப்.13-


மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்வதை குறைக்க பிரணாப் முகர்ஜி தலைமை யிலான அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 16ம் தேதி (வெள்ளி) ஆலோசனை செய்கிறது. இதற்கு முன்னர் இந்தக்குழு ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கூடி மண்ணெண் ணெய், எல்பிஜி எரிவாயு, உரம் மீதான நேரடி மானிய மாற்றம் குறித்து நடவடிக்கை பிரிவு அளித்த பரிந்துரையை ஆலோசனை செய் தது. அந்தக் கூட்டத்தில் மானிய விலை சமையல்எரிவாயு சிலிண்டர் கள் எண்ணிக்கையை வீடுகளுக்கு குறைப்பது தொடர்பாக முடிவெடுக் காமல் தள்ளிவைத்தனர். தற்போதை யக் கூட்டத்தில் மானிய விலை சிலிண்டர்களைக் குறிக்கும் முடிவு எடுக்கப்பட்டால், தில்லியில் வீடு களுக்கு ரூ.395.95 விலையில் 4 முதல் 6 சிலிண்டர்கள் வரை அளிக்கப் படும். அதற்கு மேல் பெறும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.666 செலுத்த வேண்டியிருக்கும். கட்டுப் படுத்தப்பட்ட சிலிண்டர் சப்ளை, சொந்தக்கார், 2 சக்கர வாகனம், சொந்தவீடு வைத்திருப்பவர்களுக் கும் வருமானவரிப் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்களுக்கும் பொருந்தும். பொது விநியோகத் துறை சமையல் எரிவாயு விநியோ கஸ்தர்கள் புள்ளி விவரப்படி, ஒரு ஆண்டிற்கு வீடுகளில் சராசரியாக 20-30 சிலிண்டர்கள் பயன்படுத்தப்படு கின்றன. மானிய விலை சமையல் எரி வாயு பெருமளவு வர்த்தக நிறுவன செயல்பாட்டுக்கு பயன்படுத்தப்படு வதாக தெரியவருகிறது என குறிப் பிடப்பட்டுள்ளது. வர்த்தக பயன் பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சந்தை விலையில் வேறுவிதமான அளவு சிலிண்டர் களுடன் விற்பனை செய்யப்படுகிறது. மானியவிலை சிலிண்டர்களை வீடு களுக்கு விநியோகம் செய்வதை குறைப்பதன் மூலம், அரசு நிறுவனங் களுக்கு ஏற்படும் இழப்பைக் குறைக் கலாம் என கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு விற்பனை இழப்பு மட்டுமல்லாமல் டீசல், மண் ணெண்ணெய் ஆகியவற்றின் விற்ப னையால் ஏற்படும் இழப்பு குறித்தும் அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது. இந்த அத்தியாவசிய எரிபொருள் விற்பனையால் ஏற்படும் இழப்பை பாதியாக குறைக்க அமைச்சர்கள் குழு ஆலோசிக்கிறது என தகவல்கள் கூறுகின்றன.

தற்போதைய வருவாய் இழப்பு பகிர்வு நடைமுறையில் மாற்றம் செய்யவேண்டுமா என்பது குறித்தும் விவாதிக்கப்படுகிறது. (பிடிஐ)
நன்றி! 
 

திருத்தப்பட்ட பட்டதாரி ஆசிரியர்தேர்வுப் பட்டியல் வெளியீடு

சென்னை:மாறுதலுக்குப் பின், புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறையில் ஆறு பாடங்களுக்கு 1,110 பேரும், தொடக்க கல்வித்துறையில் மூன்று பாடங்களுக்கு 216 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை மற்றும் தொடக்க கல்வித்துறையில் காலியாக உள்ள, 3,665 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு, மாநில பதிவுமூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்தவர்களின் தேர்வுப் பட்டியலை, கடந்த பிப்ரவரி இறுதியில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.



இந்நிலையில், மாநில பதிவு மூப்பில் விடுபட்டவர்களின் பட்டியலை, காலதாமதமாக வேலை வாய்ப்பு இயக்குனரகம், ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் அளித்தது.இதனால், அவர்களுக்கு தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடத்தப்பட்டன. அப்பட்டியலில் இருந்த பலர், தேர்வுப் பட்டியலில் இடம்பெறும் நிலை ஏற்பட்டதால், ஏற்கனவே தயாரித்திருந்த தேர்வுப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியலை வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்தது. அதன்படி, பாட வாரியாக புதிய பட்டியலை தயாரித்துள்ளது.

முதற்கட்டமாக, பள்ளிக் கல்வித்துறையில், தமிழ், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு மற்றும் புவியியில் ஆகிய ஆறு பாடங்களுக்கும், தொடக்க கல்வித்துறையில் இயற்பியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய மூன்று பாடங்களுக்கும் புதிய பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. மீதமுள்ள பாடங்களுக்கு, பின்னர் வெளியிடப்படும் என தெரிகிறது.

பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழில் 210 பேர், இயற்பியலில் 444, தாவரவியலில் 193, விலங்கியலில் 58 மற்றும் புவியியலில் 12 பேர் என மொத்தம் 1,110 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர் விவரங்கள் தேர்வு வாரிய இணையதளத்தில் (தீதீதீ.tணூஞ.tண.ணடிஞி.டிண)வெளியிடப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறைக்கு, இயற்பியலில் 116 பேர், தாவரவியலில் 50 பேர், விலங்கியலில் 50 பேர் என 216 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீட்டில், 29 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இன சுழற்சிகளில் 131 பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பது பணியிடங்கள், கோர்ட் உத்தரவுப்படி, "ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளன. தொடக்க கல்வித்துறையில், எட்டு பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் இல்லை என்றும், 9 பேரின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பணியிடம்,"ரிசர்வ்' செய்யப்பட்டுள்ளது.



பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள் அரசு தெளிவு : இடைநிலை , பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பகுதி நேர பணியிடமாகாது

முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர் பணியிடங்கள், 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. இதில், ஓவிய ஆசிரியர்கள், தையல், கைவேலை மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் ஆகிய, மூன்று பிரிவினர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பள்ளிக்கல்வி அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, அதிகபட்சமாக, 1,221 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கும் வகையில், 16 ஆயிரத்து, 549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதற்கான பணியிடங்கள், அரியலூர், திருப்பூர் ஆகிய இரு மாவட்டங்களை தவிர்த்து, மீதமுள்ள 30 மாவட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.



பகுதி நேர ஆசிரியர்களாக ஓவிய ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் தையல், கை வேலைப்பாடு ஆகிய, மூன்று பிரிவுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மட்டுமே, தேர்வு செய்யப்பட இருப்பது, தற்போது தெரிய வந்துள்ளது. மாணவர்கள், கல்வி கற்பதற்கு தேவைப்படும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள், தேர்வு செய்யப்படவில்லை. பகுதி நேர பணியில் சேர, பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், இவர்கள் தேர்வு செய்யப்படாதது, அவர்கள் மத்தியில் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.


இதுகுறித்து, பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறும் போது, "இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள், முறையான அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான பணியிடங்கள், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களை பணி நியமனம் செய்துவிட்டால், கூடுதல் ஆசிரியர்கள் தேவை இருக்காது. அதனால் தான், பகுதி நேர ஆசிரியர் பட்டியலில், இவர்கள் இடம் பெறவில்லை' என்றனர். மொத்த பணியிடங்களான 16 ஆயிரத்து, 549ல், ஓவிய ஆசிரியர்கள் 5,253 பேரும், உடற்கல்வி ஆசிரியர்கள் 5,392 பேரும், தையல் உள்ளிட்ட ஆசிரியர்கள் 5,904 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 30 மாவட்டங்களுக்கான பணியிட ஒதுக்கீட்டில், அதிகபட்சமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் விழுப்புரம் மாவட்டத்திற்கு, 1,221 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மட்டுமில்லாமல், கல்வியில் பின் தங்கிய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு, முக்கியத்துவம் தரப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு, 944 பணியிடங்கள், வேலூர் மாவட்டத்திற்கு, 1,093 பணியிடங்கள், கடலூர் மாவட்டத்திற்கு, 706 பணியிடங்கள், தர்மபுரிக்கு, 535 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.







சத்துணவுத் திட்டமும் ஊழியர் எதிர்பார்ப்பும்

பள்ளி செல்லும் குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு வயிற்றுப்பசி ஒரு தடையாக இருந்திடக்கூடாது. இவர்க ளுக்கு ஒரு வேளை உணவாவது நிறை வாக கிடைத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடனும், குழந்தைகளு க்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவினை வழங்கி, அவர்களிடையே காணப்படும் ஊட்டச்சத்து குறைவினை சரி செய்தல், அவர்களை கல்வி கற்க தூண்டி படிப்பை இடையிலேயே நிறுத்துவதை தவிர்க் கவும், மாணவர்களின் அன்றாட வருகை யை உத்தரவாதப்படுத்துவதும் போன்ற சீரிய நோக்கங்களின் அடிப்படையில் 1982ம் ஆண்டு அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களால் தமிழகத்தில் 1.7.1982 முதல் முதலமைச்சர் குழந்தை கள் சத்துணவுத் திட்டம் என்று அறிமுகப் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் நோக் கங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்று மகத்தான திட்டமாக உருவெடுத்துள்ளது.




திட்டத்தின் விரிவாக்கம்



1.7.1982 முதல் ஊரகப் பகுதிகளிலு ள்ள குழந்தைகள் நல மையங்களில் 2 முதல் 5 வயதிற்கு உட்பட்ட முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகள் மற்றும் 5 முதல் 9 வயதிற்கு உட்பட்ட ஆரம்பப் பள்ளி குழந்தைகள் ஆகியோர் பயனடை யும் வகையில் துவங்கப்பட்டது. பின்னர் 15.9.1982 முதல் நகர் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1984 முதல், 10 முதல் 15 வயது வரை யிலான பள்ளி மாணவ, மாணவிக ளும் பயனடையும் வகையில் திட்டம் மேலும் விரிவாக்கப்பட்டது.



சமூக நல கட்டுப்பாட்டின் கீழ் ஊரக மற்றும் நகர்ப்புற பள்ளி சத்துணவு மையங் களும், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட ஆணையரின் கட்டுப் பாட்டின் கீழ் 2 முதல் 5 வயது குழந்தை களுக்கான குழந்தைகள் நல மையங்க ளும் செயல்பட்டு வருகின்றன.



திட்டத்தின் பயனாளிகள்



தமிழகம் முழுவதும் சுமார் 51 ஆயிரம் குழந்தைகள் நல மையங்களும் அதில் 2 முதல் 5 வயது வரை சுமார் 12 லட்சம் குழந்தைகளும், முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் பயனடைந்து வரு கின்றனர்.



இதே போல் ஊரக பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் பள்ளி சத்துணவு மையங்க ளில் சுமார் 54 லட்சம் மாணவ, மாணவி களும் தினந்தோறும் பயனடைந்து வரு கின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பயனாளிகளுக்கு மேல் பயன் பெறும் முன்னோடி திட்டமாக இத்திட்டம் செயல்பட்டு வருகின்றது.



3.6.1989 முதல் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் வாரம் ஒருமுறை வேகவைத்த முட்டை யுடனும் 15.7.2006முதல், வாரம் மூன்று முட்டைகளுடன், இது தவிர வாரம் ஒரு நாள் (செவ்வாய்க்கிழமை) வேகவைத்த 20 கிராம் கருப்பு கொண்டை கடலை அல்லது 20 கிராம் வேக வைத்த பச்சை பயறும், வெள்ளிக்கிழமைகளில் 20 கிராம் வேக வைத்த உருளைக்கிழங்கும் வழங் கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து 15.7.2008 முதல் முட்டை சாப்பிடாத 2 வயது முதல் 15 வயது வரை யிலான குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு முட்டைக்குப் பதி லாக, முட்டை வழங்கும் நாட்களில் வாழைப்பழமும், 15.9.2010 முதல், வாரத்தில் ஐந்து பள்ளி வேலை நாட்களி லும் முட்டையுடன் உணவு வழங்கப் பட்டு வருகின்றது. இது தவிர மாணவர் களுக்கு ஊட்டச்சத்து குறைவினால் ஏற் படும் இரும்புச் சத்து குறைவு/இரத்த சோகை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும் நீக்கிடவும் சாதாரண உப்புக்கு பதிலாக அயோடின் கலந்த உப்பு சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.



ஒரு பள்ளி மையத்திற்கு ஒரு அமைப் பாளர், ஒரு சமையலர் மற்றும் ஒரு சமை யல் உதவியாளர் என்ற அடிப்படையில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் மேற் பட்டவர்கள் சுமார் 42 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட பள்ளி சத்துணவு மையங் களில் பணியாற்றி வருகின்றனர். இவர்க ளில் 80 சதவீதத்திற்கு மேல் பெண்களே என்பதும் குறிப்பிடத்தக்கது.



திட்டத்தின் பெருமை



நடைபெறும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் ஆகஸ்ட் 22ல் தமிழக முதல்வர் கல்வி மானியக் கோரிக்கைக் கான கேள்வி-பதில் நேரத்தில், எம்.ஜி. ஆர். கொண்டு வந்த சத்துணவுத் திட்டம் நாட்டிற்கே முன்னோடியான திட்டம் எனவும், இத்திட்டத்தை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றமே உத்தரவிட்டது எனவும், இந்தியாவிலேயே இதற்கு ஈடான திட்டம் எதுவும் இல்லை என்றும் இத்திட்டத் தைப் பற்றி பெருமையாக கூறியுள்ளார். இப்படி பெருமைக்குரிய இத்திட்டத்தில் பணியாற்றுவது என்பது ஊழியர்களுக் கும் பெருமையே.



திட்டத்தில் ஊழியர் நிலையும்-எதிர்பார்ப்பும்



திட்டம் துவங்கப்பட்டு கால் நூற் றாண்டை கடந்தும் அரசின் மிகப்பெரும் நிரந்தரமான இத்திட்டத்தில் பணியாற்றக் கூடிய ஊழியர்கள் முழுநேர அரசு ஊழி யர்களாக அறிவிக்கப்படாமல், பணி நிரந் தரமின்றி பணி பாதுகாப்பில்லாமல் பணி யாற்றுகின்றனர். இவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கான பல உரிமைகளும், சலுகைகளும் மறுக்கப்பட்டு வருகிறது. இன்றுள்ள கடுமையான விலைவாசி உயர்வில் வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளைக் கூட நிறைவு செய்து கொள்ள முடியாத வரையறுக்கப்படாத ஊதியத்திலும், பணி ஓய்வுக்கு பின் சட்டப்பூர்வ ஓய்வூதியம் இல்லாத நிலையிலும் பணியாற்றி வருகின்றனர்.



கடந்த கால ஆட்சியாளர்கள், நடு ஆற்றில் தவிக்கும் சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் படகில் பத்திரமாக கரை சேர்ப்பேன் என்றும், பள்ளி இறுதி வகுப் பில் தேரியவர்களை பல்வேறு அரசுத் துறை காலிப்பணியிடங்களில் இள நிலை உதவியாளர்களாக பணியமர்த்த பரிசீலனை உள்ளது எனவும் பல்வேறு அறிவிப்புகளை வழங்கியது என்பது அம லாகாமல் தண்ணீரில் எழுதப்பட்ட வையாகவே ஆனது.



இந்நிலையில் தான் ஊழியர்கள் தங்க ளுடைய வாழ்வாதார கோரிக்கையான வரையறுக்கப்பட்ட ஊதியம் மற்றும் சட் டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியம் உள் ளிட்ட கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்து நிறைவேற்றப்படாத நிலையில், அரசின் கவனத்தை ஈர்க்க 2010 ஆகஸ்ட் 30ல் போராட்ட நடவடிக்கையில் ஈடுபட் டனர். அப்போது அன்றைய ஆட்சியாளர் கள் போராட்ட நடவடிக்கைகளை கொச் சைப்படுத்தி விமர்சனப்படுத்தியதோடு, காவல்துறையை ஏவிவிட்டு பெண்கள் என்றும் பாராமல் கடுமையான அடக்கு முறைகளை தமிழகம் முழுவதும் உள்ள ஊழியர்களிடம் கையாண்டனர். பொய் யான காரணம் கூறி சங்கத் தலைவர்கள் மீது எதேச்சதிகாரப் போக்கில் பணி நீக்க நடவடிக்கையும் எடுத்து, போட்டி சங் கங்களை உருவாக்குவதற்கான முயற்சி களையும் அந்த அரசு மேற்கொண்டது.



அன்றைய காலக்கட்டத்தில் ஆளும் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சி தலைமைகளும், தொழிற்சங்க தலைமை களும், துறைவாரியான தோழமை மற்றும் பொதுச் சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவு தந்து அறிக்கைகள் விடுத்தன. அன்றைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலை வரும் இன்றைய முதல்வரும் தனது அறிக்கையில் போராட்டம் நியாயம் என் றும், போராடும் தலைமையை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும், விரைவில் அஇஅதி முக தலைமையிலான எம்.ஜி.ஆர். ஆட்சி மலரும், சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றும் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சட்ட மன்ற தேர்தல் அறிக்கையில், சத்துணவு பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்சனைகள் முன்னுரி மையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப்படும் எனவும், தேர்தல் பிரச் சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந் தால் சத்துணவு ஊழியர்களின் கோரிக் கைகள் நிறைவேற்றப்படும் என்ற அறி விப்புகளும், ஒட்டுமொத்த ஊழியர்களின் ஆதரவோடு ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்ததோடு, ஊழியர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பை யும் உருவாக்கியுள்ளது.



இத்திட்டத்தில் பணிபுரியும் ஊழியர் கள் அனைவரையும் முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து, வரையறுக்கப் பட்ட ஊதிய விகிதம் மற்றும் சட்டப்பூர்வ மாதாந்திர ஓய்வூதியத்தினை வழங்கும் அறிவிப்புகளை நடைபெறுகின்ற சட்ட மன்ற பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே தமிழக முதல்வர் வழங்கி, சத்துணவு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பார் என்பதே ஒட்டுமொத்த சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



-கட்டுரையாளர், சத்துணவு



ஊழியர் சங்க பொதுச்செயலாளர்





2011 RL List :

Central Board Of School Education

Cabinet Committee to decide on additional dearness allowance hike tomorrow, 8th September 2011

Cabinet Committee to decide on additional dearness allowance hike tomorrow, 8th September 2011


The Union Cabinet Committee tomorrow may decide on raising additional dearness allowance to central government employees, official sources said.

The Union Cabinet Committee likely to approve the second additional instalment of 7% dearness allowance for this year to Central Government employees and dearness relief to Central Government pensioners due from 1.7.2011.



More than 50 lakh serving employees and 38 lakh pensioners are expecting eagerly for this announcement to compensate the price hike in essential commodities and other goods.



SAMACHEER KALVI SUPREME COURT J U D G E M E N T


கல்வி உரிமையா? கல்வி மறுப்பா?


பொது பள்ளிகூடங்கள் மலரட்டும் :

:

GO.336 dt.30.12.2009


கட்டாய கல்வி சட்டம்-2009


பகுதிநேர ஆசிரியர்கள் சொந்த மாவட்டங்களிலேயே நியமனம்

சென்னை: முதல்வர் அறிவித்த 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்கள், அந்தந்த மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் பட்டியல் பெறப்பட்டு, அவர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

காலை அல்லது பிற்பகல் என அரை நாள் வேலை,தொகுப்பூதியமாக மாதம் 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.பள்ளிக் கல்வித் துறையை சீரமைக்கும் வகையில்,சமீபத்தில் பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். 775 பள்ளிகளின் தரத்தை உயர்த்தியும், இதற்காக ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்தும் முதல்வர் அறிவித்தார்.
மேலும், கூடுதலாக ஆசிரியர்கள் தேவைப்படும் பள்ளிகளுக்காக, 16 ஆயிரத்து 549 பகுதி நேர ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதன்கீழ்,உடற்கல்வி ஆசிரியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கை வேலைப்பாடு, தையல் ஆசிரியர்கள், இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர். குறிப்பாக, இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் அதிகளவில் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
பல அரசுப் பள்ளிகளில், ஒரு வகுப்பில் 70, 80 மாணவர்கள் இருக்கின்றனர். இதுபோன்ற பள்ளிகளை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் ஏற்கனவே அடையாளம் கண்டு, மாவட்டம் வாரியாக பட்டியல் எடுத்துள்ளது. அதன்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற வீதத்தில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையிலேயே, 16 ஆயிரத்து 549 ஆசிரியர்கள் தேவைப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
பணி நியமனம் எப்படி? பகுதி நேர ஆசிரியர்கள் அனைவரும், தொடக்க கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் தேர்வு செய்யப்பட உள்ளனர். பகுதி நேர ஆசிரியர்கள், 32 மாவட்டங்களிலும் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்ற விவரங்களையும் பட்டியலிட்டு, அதை பள்ளிக் கல்வித் துறை மற்றும் தொடக்க கல்வித் துறையிடம், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும், பதிவு மூப்பு பட்டியலை பெற்று,சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், அவர்களை அந்தந்த உள்ளூர் மாவட்டங்களிலேயே பணி நியமனம் செய்ய, இரு துறைகளும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
மாவட்டத்தில் அதிக காலிப் பணியிடங்கள் இல்லாதபட்சத்தில், அருகில் உள்ள மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்.இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, &'எந்த முறையில் பகுதி நேர ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறித்து, இதுவரை முடிவு எடுக்கவில்லை. அரசிடம் இருந்து உரிய வழிகாட்டுதல் வந்த பிறகே முடிவு எடுக்கப்படும்&' என்றார்.
சம்பளம் எவ்வளவு? பகுதி நேர ஆசிரியர்களுக்கு, தலா 5,000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கான சம்பளத்தை, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் வழங்கும். மாவட்டம் வாரியாக உள்ள எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மூலம், சம்பளம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு 99 கோடியே 29 லட்சம் ரூபாய் செலவிடப்படும். 
வேலை நேரம்: ஆசிரியர்களின் பணியைப் பொருத்து, காலை அல்லது பிற்பகல் என, ஏதாவது ஒன்றை தேர்வு செய்து, அரை நாள் வேலை செய்யும் வகையில், உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்தப் பணி நியமனங்கள், அடுத்த மாதத்திற்குள் நிறைவேற்றி முடிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
பகுதி நேர ஆசிரியர்கள் நியமன அறிவிப்பு, பட்டதாரிகளிடையே படு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது

வெளிநாடு செல்ல இயக்குனர் செயல்முறைகள்


G.O. 2D no. 6 February 22, 2011-மாற்றுத் திறனாளிகள் நலம் - தொகுதி IV -ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பின்னடைவு பணியிடங்களைத் (Backlog Vacancies ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தல் - ஆணை


G.O. 2D no. 6 February 22, 2011/சிறப்பு போட்டித் தேர்வு - மாற்றுத் திறனாளிகள் நலம் - தொகுதி IV -ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் - மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பின்னடைவு பணியிடங்களைத் (Backlog Vacancies ) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக சிறப்புப் போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.


100 உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்துதல் அரசாணை எண்: 120


Popular Posts