வயது வரம்பை நீக்குவது சட்டக் கல்வியை சீரழிக்கும் இந்திய மாணவர் சங்கம் கண்டனம்

சென்னை, நவ.20-
சட்டக்கல்வி பயில்வதற்கான வயது வரம்பை நீக்கி அகில இந்திய பார் கவுன்சில் நிறைவேற்றி வெளி யிட்டிருக்கும் தீர்மானத்திற்கு இந் திய மாணவர் சங்கம் கடும் எதிர் ப்பினை தெரிவித்துள்ளது.
சட்டக்கல்வி மாணவர் சேர்க் கைக்கு ஐந்தாண்டு படிப்பிற்கு 20 வயது, இட ஒதுக்கீட்டு சேர்க்கை க்கு 22, மூன்றாண்டு படிப்பிற்கு 30, இட ஒதுக்கீட்டு சேர்க்கைக்கு 35 என வயது வரம்பு ஏற்கனவே தீர் மானிக்கப்பட்டு அதனை சென் னை உயர் நீதி மன்றமும், உச்ச நீதி மன்றமும் உறுதிசெய்துள்ள நிலை யில் இந்த வயது வரம்பினை நீக்கி அகில இந்திய பார் கவுன்சில் தீர் மானம் நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வரம் பற்ற மாணவர் சேர்க்கை சட்டக் கல்வியின் ஆரோக்கியமான கல்விச் சூழலை மேலும் சீரழிக்கும் என் பதை இந்திய மாணவர் சங்கம் சுட் டிக்காட்ட விரும்புகிறது.
பாடம் நடத்தப் போதுமான ஆசிரியர்கள், கணினி ஆய்வகம், மாதிரி நீதி மன்றம், தேவையான சட் டப் புத்தகங்களை கொண்ட நூல கம், தமிழில் பாடப்புத்தகம் என சட்டக்கல்வியை திறம்பட பயிற்று வித்திட, முழுமையான சட்ட அறி வோடு மாணவர்களை வளர்த் தெடுத்திட, போதுமான கட்டமை ப்பு வசதிகள் இல்லாமல் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம் மட்டுமே சட்டக்கல்லூரிகளில் பாடம் நடக்கிறது. ஆரோக்கிய மான கல்வி வளாகச் சூழல் இல் லாமல் சட்டக்கல்லூரிகள் திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்த மோ சமான கல்விச்சூழலால் தான் சாதிச் சண்டைகளும் வன்முறைச் சம்ப வங்களும் தொடரும் அவலங் களாக நீடிக்கின்றன.வரம்பு இல்லா மல் யார் வேண்டுமானாலும் சட் டக்கல்லூரிகளில் சேரலாம் எனும் நிலை இருந்தால் அது தற்போதைய மோசமான நிலையை மேலும் சீரழிக்கும். வயது வரம்புக்குட்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றால் தான் மாணவர்களுக்கான கல்வி நிலையமாக சட்டக்கல்லூரிகள் இருக்கமுடியும்.
சட்டக்கல்லூரி களில் மேற்கொள்ளப்படவேண் டிய ஆரோக்கியமான மாற்றங்கள் ஏராளம் இருந்தும் அதனைப் புறக் கணித்துவிட்டு பார் கவுன்சில் தேர்வு எழுத வேண்டும், வயது வரம்பு நீக்கம் என தேவையில்லாத முடிவுகளை எடுத்து மாணவர் களை குழப்பும் நடவடிக்கையை அகில இந்திய பார் கவுன்சில் தொடர்ந்து மேற்கொண்டுவருகி றது.
இது போன்ற நடவடிக்கையை தொடர்ந்தால் மாணவர் சமூகம் அதனை வேடிக்கை பார்க்காது என் பதை இந்திய மாணவர் சங்கம் தெரிவித்துக்கொள்கிறது. சட்டக்கல்வி மேம்படுத்தப்பட வேண்டும் சட்டக்கல்லூரிகளில் ஆரோக்கியமான கல்விச்சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்ப தை கருத்தில் கொண்டு இந்த தீர் மானத்தை அகில இந்திய பார் கவுன்சில் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என இந்திய மா ணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநி லக்குழு வலியுறுத்துகிறது.
மேலும் சட்டமாணவர் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடி யாக தலையிட வேண்டும் என சங் கத்தின் மாநிலத் தலைவர் பி.உச்சி மாகாளி மாநிலச் செயலாளர் ஜோ. ராஜ்மோகன் ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளனர்.

Popular Posts