அரசு ஊழியர்- ஆசிரியர்களின் ஏக்கத்தை கவனிக்குமா? கருவூலகத்துறை.

உதவி கருவூலகங்களில் பட்டியல் பதிவேற்றப்பட்டவுடன் அதற்கான வவுச்சர் எண்ணை வாங்க மாவட்ட கருவூலத்திற்கு செல்ல வேண்டிய அவலம் அனைத்து சம்பளம் பெற்றுத் தரும் அலுவலகங்களுக்கும் உள்ளது. அறிவியல் எவ்வளவோ முன்னேறி தகவல் தொழில் நுட்பம் வளர்ந்த இந்த காலத்தில் கூட இந்த நிலையை மாற்றாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. இதனால் சில நேரங்களில் தவறுதலாக பதிவேற்றப்படும் பணத்தை மீளபபெற முடியாமல் அரசு ஊழியர்கள் தவிக்க வேண்டிய சூழல் உள்ளது. அவ்வாறு தவறாக செலுத்தப்படும் பணம் எந்த தலைப்பின் கீழ் சேர்ந்துள்ளது என்பது பரியாத புதிராகவே உள்ளது. மாவட்ட கருவூலத்தில் சென்று வவுச்சர் எண் கேட்டால் பிரிவு அலுவலர்கள் அவ்வளவு எளிதாக அதை பதிவு பண்ணிக் கொடுப்பதில்லை என்பதுதான் நிஜம். இதனால் ஊழியர்களுக்கு கால விரயம் ஏற்படுவதுடன் தேவையில்லாத மன உளைச்சலும் ஏற்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த பிரச்சணைக்கு மாநில கருவூலத்துறை தீர்வு காண முயல வேண்டும் என்பதே நமது அவா. மிஸ்ஸிங் கிரெடிட் ஆன பல கணக்குகள் திரும்ப கிடைக்க வழியில்லாமல் ஊழியர்கள் புலம்புவதை தவிர்க்க சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்கும் நடவடிக்கையை கொண்டு வரலாம். இதனால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள் பயன் பெறும். சம்பளம் பெற்றுத்தரும் அலுவலகங்களுக்கும், கருவூலத்திற்கும் ஒரு நல்ல புரிந்துணர்வு வேண்டும். இன்றைய அவசர யுகத்தில், ஊழியர் பற்றாக்குறை நிலவும் நேரத்தில் வீண் அலைச்சல்களை போக்கும் நல்லெண்ண அடிப்படையில் சம்பந்தப்பட்ட உதவி கருவூலகங்களே வவுச்சர் எண்ணை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டுமாய் மாநில கருவூலகத்துறையை தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Popular Posts