எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் யோசனை

தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.


தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில், 385 வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும், முதுகலை அல்லது பட்டதாரி ஆசிரியர் தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்துள்ளது. இதில், 25 சதவீதம் பேர் முதுகலை ஆசிரியர்கள். கடந்த 2000ல் துவங்கிய எஸ்.எஸ்.ஏ., திட்ட காலம் 2010ல் முடிந்த நிலையில், 3 ஆண்டு நீடிக்கப்பட்டுள்ளது.
 இத்திட்டத்தை கலைத்து, அனைவருக்கும் இடை நிலை கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்துடன் இணைக்கும் யோசனையில், மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயல்படுகிறது. ஒரு திட்டம் துவங்கி 10 ஆண்டுக்குள் முடிய வேண்டும். சில காரணத்திற்காக எஸ்.எஸ்.ஏ., ஓரிரு ஆண்டு நீடிக்கலாம். தமிழகத்தில் இத்திட்டம் 3 ஆண்டு நீடித்த நிலையில், இனிமேலும், நீடிக்க வாய்ப்பு குறைவாகவே உள்ளதாக,கல்வித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
 அதிகாரி ஒருவர் கூறுகையில், "" எஸ்.எஸ்.ஏ.,வை, ஆர்.எம்.எஸ்.ஏ.,வுடன் இணைக்கும் பட்சத்தில், தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளியில் உள்ள தலைமை ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது எஸ்.எஸ்.ஏ., திட்ட மேற்பார்வையாளர்களுக்கு ( பி.டி., தகுதி ஆசிரியர்) முக்கியத்துவம் அளிக்கப்படும்.இத்திட்டத்தில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்களை அரசு மேல்நிலைப்பள்ளி காலியிடங்களில் நியமிக்க, பள்ளிக்கல்வித்துறை முடிவெடுக்கும்,'' என்றார்.

Popular Posts