கல்வித் துறையிலும் அந்நியர் நுழைவு

புதுதில்லி, அக். 19-

“பொருளாதாரச் சீர் திருத்தம்” என்ற பெயரில் நாட்டு மக்கள் மீது ஈவிரக் கமற்ற தாக்குதலை கட்ட விழ்த்துவிட்டுள்ள மன் மோகன் சிங் தலைமை யிலான காங்கிரஸ் கூட் டணி அரசு, அடுத்ததாக கல் வித்துறையை குறிவைத் துள்ளது.

உயர்கல்வித்துறையை அந்நியருக்கு திறந்துவிட்டு, முற்றிலும் தனியார்மயமாக் கிட துடித்துவரும் மன்மோ கன் அரசு ஏற்கெனவே இட துசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பால் நிறைவேற்ற முடியாமல் வைத்திருக்கிற அந்நியப் பல்கலைக்கழகங் கள் மசோதா உள்ளிட்ட கல்வித்துறை சார்ந்த மூன்று மசோதாக்களை எப்படி யேனும் நிறைவேற்றுவது என தீர்மானித்துள்ளது. 

தங்களது “சீர்திருத்த” நடவடிக்கைகள், கல்வித் துறையை அந்நிய முதலீட் டிற்கு ஆதரவாக திறந்து விடாமல் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டாது என மத்திய மனிதவள மேம்பாட் டுத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியிருக்கிறார். 

இந்த வரிசையில் நிலு வையில் நிற்கும் மசோதாக் களை எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரில் நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற எதிர்க்கட்சிகளுடன் பேச இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

உயர்கல்வி மதிப்பீட்டு மசோதா, கல்வித்துறையில் நியாயமற்ற நடவடிக்கை கள் தொடர்பான மசோதா மற்றும் அந்நிய கல்வி நிறு வனங்கள் மசோதா ஆகிய வை பல ஆண்டுகளாக நிலுவையில் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் கபில் சிபல், இந்த மசோ தாக்கள் நிறைவேற்றப்படா ததால் உயர்கல்வித்துறையில் அந்நிய நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் பெருமளவிற்குவரவேண்டும் என்ற அரசின் நோக்கம் நிறைவேறாமல் தள்ளிப் போகிறது என்று வருத்தப் பட்டுக்கொண்டார்.

“குளிர்கால கூட்டத் தொடரில் இம்மசோதாக் களை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் எங்களுக்கு ஆதரவு தரும் என்று நம்பு கிறேன்” எனவும் அவர் கூறி னார். 

தில்லியில் வெள்ளி யன்று நடைபெற்ற இந்தி யா-நியூசிலாந்து கல்விக் கவுன்சிலின் முதலாவது கூட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றவந்த கபில்சிபல், செய்தியாளர்களிடம் பேசு கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

2020ம் ஆண்டில் 4.5 கோடி மாணவர்கள் பல்க லைக்கழகங்களுக்குச் சென்று உயர்கல்வி பெறுப வர்களாக அதிகரித்திருப் பார்கள் என்றும், இவ்வ ளவு பேருக்கும் உயர்கல்வி அளிக்க அரசாங்கத்தால் முடியாது என்றும் கபில் சிபல் கைவிரித்தார். (பிடிஐ)

Popular Posts