அடிப்படை சம்பளத்துடன் டிஏ இணைப்பு : 7-வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு -

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு எடுக்கும் என மத்திய பணியாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
( இது பத்திரிக்கை செய்தி மட்டுமே, அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை)


பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 10 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உயர்வு ஜனவரி 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இந்த உயர்வை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 100 சதவீதமாக உயர்ந்துள்ளது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இதற்கு நேரிடையாக ஒப்புதல் அளிக்கப்படவில்லை. 

மத்திய அரசு ஊழியர்களுக்கான புதிய சம்பள விகிதம் பரிந்துரை செய்ய 7 வது சம்பள கமிஷன் அண்மையில் நியமிக்கப்பட்டது. 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7 வது சம்பள கமிஷன் முடிவு எடுக்க மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து 7வது சம்பள கமிஷன் விரைவில் முடிவு எடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். அதன்பின்னர் அகவிலைப்படி அடிப்படை சம்பளத்துடன் இணைக்கப்படும். இது அமல்படுத்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 சதவீதம் அளவுக்கு சம்பளம் உயரும் என மத்திய பணியாளர் துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

Popular Posts