அஇஅதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெ.ஜெயலலிதா வெளியிட்டார், ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.

ஜெயலலிதா வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில்,  
* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  
* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.  
* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.  

* சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  
* கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  
* அரசியல் சட்டத்தின் 8- வது அட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளும் ஆட்சி மொழியாக்கப்படும்.  
* இலங்கையில் தனி ஈழம் தேவையா என அறிய வாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்காக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் வாழும் ஈழத்தமிழரிடையே வாக்கெடுப்பு நடத்த முயற்சி எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.  
* இலங்கையில் இனப்படுகொலை செய்தோர் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர். குற்றம் செய்தோருக்கு தண்டனை பெற்றுத் தரப்படும்.  
* சட்டசபை, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு பெற்றுத்தர உறுதியளிக்கப்பட்டுள்ளது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  
*மதச்சார்பின்மை கொள்கையை நிலைநாட்ட அதிமுக பாடுபடும்.  * மத்தியில் ஊழலற்ற அரசு அமைய அதிமுக உத்தரவாதம் தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  
* ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும்.  சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் வரிவிலக்கு அளிக்கப்படும்.

Popular Posts