ஆசிரியர்கள் போராட்டத்தை தடுக்க மாநில கல்வித்துறை அதிரடி உத்தரவு:- தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் விடுத்துள்ள செய்தி:

                முறைகேடான இட மாறுதலை கண்டித்து ஆசிரியர் சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் மாநில அளவில் நடந்தன. இந்நிலையில் இது போன்ற சம்பவங்களை அறவே தடுக்கும் பொருட்டு, அனைத்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களுக்கும், மாநில தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், முன் அனுமதி பெறாமல் ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு எத்தகைய போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது. அவ்வாறு ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

              இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விருதுநகர் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்ட பொருளாளர் ஆகியோர் விடுத்துள்ள செய்தி:

            ஆசிரியர்களது பிரச்சனைகளை துறை அலுவலர்கள் உரிய முறையில் உடன் தலையிட்டு உத்தரவுகள் பிறப்பித்தால், மற்றும் தமிழகஅரசு இயக்க பொறுப்பாளர்களை அழைத்து பேசி ஊதிய முரண்பாடுகளை கலைந்தால்  எதற்காக போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்?

            அரசு- அலுவலர்கள்  கையில் தான் இப்போரா ட் டங்கள் உள்ளது என்றனர்.

Popular Posts