ஏ.டி.எம்., கட்டணம்: ரிசர்வ் வங்கி எதிர்ப்பு

ஐந்து முறைக்கு மேல் ஏ.டி.எம்., பயன்படுத்தும் அதன் வாடிக்கையாளர்களிடம், வங்கிகள் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன. இதற்கு ரிசர்வ் வங்கி துணை கவர்னர் கே.சி.சக்ரபர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 
இந்நிலையில், ஏ.டி.எம்., மையத்தின் பாதுகாப்பு செலவினம் உயர்ந்துள்ளதாக கூறி, வங்கிகள் அதன் வாடிக்கையாளரிடமே, ஐந்து முறைக்கு மேற்பட்ட, ஏ.டி.எம்., பயன்பாட்டிற்கு, கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளன.
இது குறித்து சக்ரபர்த்தி கூறியதாவது: வங்கிகளின் இந்த திட்டம், மிகவும் அபத்தமான, முரண்பாடான செயல். உலகில் எங்கும் இது போன்ற நடைமுறை இல்லை. இந்த திட்டத்தை இந்திய வங்கிகள் கூட்டமைப்பு மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Popular Posts