இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு எண்.33399 / 2013, 7.1.14 அன்றைய விசாரணை நிலவரம்

தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA ) சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய நிலவரம்.
 
 7-1-2014 அன்று நீதிமன்ற விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம் செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ் ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.
நமது மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல் கான் அவர்கள் 17-1-14 க்கு பதிலாக 21.1.2014 அன்று ஆஜராகி வழக்கை முடித்து தருவதாக உ றுதியளித்து உள்ளார்.

Popular Posts