ஊதிய குழு அறிக்கை வெளியிட வேண்டும் ஆசிரியர்கள் தமிழகம் முழுதும் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.



















1.ஆறாவது ஊதிய மாற்ற முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட 3 நபர் குழு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். 
2.மத்திய அரசுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
3.தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய நிதியில் 49 சதவீதம் அன்னிய நேரடி முதலீட்டு முடிவை திரும்ப பெற வேண்டும்.

4.ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்து வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

5. புதிய மருத்துவ காப்பீட்டு தொகையை 50 ரூபாயாக குறைக்க வேண்டும்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுதும் நேற்று (13.07.2013) மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Popular Posts