சி.இ.ஓ., டி.இ.ஓ.,க்களுக்கு - துறைகள் மாறி ஆய்வு செய்ய பள்ளி கல்வித்துறை புது உத்தரவு


பள்ளி கல்வி துறையில், ஆய்வு அதிகாரிகளான சி.இ.ஓ.,க்கள், டி.இ.ஓ.,க்கள், துறைகள் மாறி ஆய்வு செய்யும் வகையில் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பள்ளி கல்வி துறையில் தொடக்க கல்வி, மேல்நிலை கல்வி, கள்ளர் சீரமைப்பு, மாநகராட்சி போன்ற பிரிவுகள் உள்ளன.

   இவற்றில், டி.இ.ஓ.,க்கள், சி.இ.ஓ.,க்கள் மற்றும் இணை இயக்குனர் அந்தஸ்தில், ஆய்வு அதிகாரிகள் உள்ளனர்.பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் வருகை, விடுப்பு, பள்ளிக்கான வளர்ச்சி திட்டம் போன்றவை குறித்து, ஒரு துறைக்கு உட்பட்ட ஆய்வு அதிகாரி, அத்துறைக்கு உட்பட்ட பள்ளிகளில் மட்டும் ஆய்வு செய்யலாம் என இருந்தது. ஆனால், புதிய உத்தரவால், தொடக்க கல்வி துறை ஆய்வு அதிகாரி, கள்ளர் சீரமைப்பு துறையோ அல்லது மாநகராட்சி பள்ளிகளிலோ ஆய்வு மேற்கொள்ளலாம். இதற்கான உத்தரவை, சி.இ.ஓ.,க்களுக்கு, பள்ளி கல்வி துறை அனுப்பியது.

Popular Posts