TNPTF க்கு கிடைத்த வெற்றி:

சமச்சீர் கல்வி வழக்கில் தீர்ப்பு : மாணவர்கள் மகிழ்ச்சி!
சென்னை : சமச்சீர் கல்வி தீர்ப்பை அடுத்து பல இடங்களில் மாணவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர். மேலும் சமச்சீர் கல்வி தீர்ப்பால் பெற்றோர்கள், மாணவர்கள் ஆரவாரம் செய்தனர்.

சென்னை : சமச்சீர் கல்வி வழக்கில் உச்சநீதிமன்றம் என்ன ஆணையிடுகிறதோ அதன்படி இந்த மாநில அரசு நடக்கும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டப்பேரவையில் கூறியிருந்தார். இந்நிலையில் சமச்சீர் கல்வியை 10 நாட்களில் அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை தமிழக அரசு ஏற்குமா என்று சற்று நேரத்தில் தெரியும். இதுகுறித்து சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெயலலிதா பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து ஜெயலலிதா என்ன பேசுவார் என்று தமிழக மக்களும், மாணவர்களும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடியானது. மேலும் உயர்நீதிமன்ற நீதிமன்றத்தில் தலையிடமுடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Popular Posts