ஊதிய முரண்பாடுகள் களையப்படும் - பட்ஜெட் உரையில் அறிவிப்பு :

•அரசுப் பணியாளர்களின் ஒத்துழைப்பும் ,ஈடுபாடும் பல்வேறு நல திட்டப்பணிகளையும் ,வளர்ச்சி பணிகளையும் வெற்றிகரமாக செயல்படுவதற்கு இன்றியமையாதவை என இந்த அரசு கருதுகிறது. இந்த திருத்த ஊதியவரவு செலவு மதிப்பீட்டில் 27,091 கோடி ரூபாய் பணியாளர்கள் ஊதிய செலவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.


•ஊதிய முரண்பாடுகளை களைய முந்தைய அரசால் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்திய பின்பும் முரண்பாடுகள் தொடர்பாக அரசுக்கு கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளதால் ,இந்த அரசு

முரண்பாடுகள் தொடர்பான கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கும்.

•இவ்வாறு 2011-2012 பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது. .

Popular Posts