ஒரு நாள் வேலை நிறுத்தம் - டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

இன்று (04.02.2014) சென்னையில் நடைபெற்ற டிட்டோஜாக் கூட்டத்தில் வருகிற 06.03.2014 (வியாழக்கிழமை) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வது என முடிவாற்றப்பட்டுள்ளது. 
2.2.2013  மாவட்ட பேரணி முடிந்துள்ள நிலையில் அரசு எவ்வித முடிவும் எட்டாத நிலையில் டிட்டோஜாக் இந்த வேலை நிறுத்தத்தை  அறிவித்துள்ளது. 
தமிழக அரசு மேலும் மௌனம் சாதித்தால் போராட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என தெரிகிறது. எனவே அனைத்து ஆசிரியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என டிட்டோஜாக் வேண்டுகோள் விடுத்துள்ளது.  

 1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு 
2.டிட்டோ ஜாக் அமைப்பு டன் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும். 
3.இல்லை யேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு.

தொடக்கக்கல்வித் துறையில் உள்ள 6 இயக்கங்கள் உள்ளடக்கிய டிட்டோஜாக் சென்னையில் இன்று கூடி இம்முடிவை அறிவித்துள்ளது.

Popular Posts