வங்கிகளில் ரூ.10,000 வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு கட்டணம் ரூ.2.50 ஆக குறைப்பு!


வங்கிகளில் ரூ.10,000 வரையான ஆன் லைன் பணபரிமாற்றத்துக்கு(இடிரான்ஸ்பர்கட்டணம் ரூ.5ல் இருந்து ரூ.2.50 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
    வங்கிகளில் பண பரிமாற்றங்களுக்கு காசோலைகள்பயன்படுத்துவதால் ஏற்படும் செலவுகள் அதிகமாக உள்ளதால்,காசோலை பயன்பாட்டை முழுமையாக கைவிட வேண்டுமெனநிதியமைச்சராக பிரணாப் இருந்த போது கூறியிருந்தார்ஆன்லைன் பணபரிமாற்றத்துக்கு கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது என்றும் ரிசர்வ்வங்கியிடம் கோரியிருந்தார்.

      தற்போது ஒரு வங்கி கணக்கில் இருந்துஇன்னொரு கணக்குக்குரூ.1 லட்சம் வரை ஆன்லைனில் பண பரிமாற்றம் செய்வதற்கு ரூ.5கட்டணம் வசூலிக்கப்படுகிறதுஇந்நிலையில்ரூ.10 ஆயிரம் வரை பணபரிமாற்றம் செய்வதற்கு ரூ.2.50 காசுகளாக குறைத்து ரிசர்வ் வங்கிஅறிவித்துள்ளது.

    இது பற்றிரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு வருமாறுகாசோலைசெயல்பாட்டை குறைத்துஆன்லைன் பண பரிமாற்றங்களைஅதிகரிப்பதற்கு வாடிக்கையாளர்களை ஊக்குவிக்க வேண்டும்எனவே,ரூ.10 ஆயிரம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சமாகரூ.2.50 மட்டுமே கட்டணம் வசூலிக்க வங்கிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.இதன்மூலம்ஏராளமான வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பணபரிமாற்றத்துக்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறதுஇவ்வாறுரிசர்வ் வங்கி கூறியுள்ளதுஎனினும்ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரூ.1லட்சம் வரையான ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு ரூ.5ம்,  ரூ.1 லட்சம்முதல் ரூ.2 லட்சம் வரை ஆன்லைன் பண பரிமாற்றத்துக்கு அதிகபட்சம்ரூ.15ம் கட்டணமாக வசூலிக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

Popular Posts