சி.பி.எஸ்.இ. கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு-


மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ. சார்பில், 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்க்ளுக்கு, 2012ம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்க உள்ளது.

  டில்லியை தலைமையிடமாக கொண்ட சி.பி.எஸ்.இ., 10 மற்றும் 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு மெரிட் ஸ்காலர்ஷிப் வழங்கவுள்ளது. இதுமட்டுமின்றி சி.பி.எஸ்.இ. மெரிட் ஸ்காலர்ஷிட்ப் திட்டம் மூலம் ஒரு பெண் குழந்தையை தேர்வு செய்து 12ம் வகுப்பிற்கான உதவிதொகை வழங்கவுள்ளது. 

   கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களுக்கும் சி.பி.எஸ்.இ.  மூலம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தகுதி, விண்ணப்பம் மற்றும் இதர தகவல்களை www.cbse.nic.in என்ற இணையதளத்தில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பத்தை அனுப்ப அக்டோபர் 31ம் தேதி கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular Posts