தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் சென்னையில் - அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ.இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் 2003 க்குபிறகு நியமனம் பெற்றவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனை ரத்து செய்யக்கோரி அனைத்து இயக்கங்கள் சார்பாக பலபோராட்டங்கள் நடத்தப்பட்டன.
எனினும் அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. எனவே தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் உயர்மட்ட பொறுப்பாளர்களின் கூட்டம் அரசு ஊழியர் சங்க கட்டிட சிவ இளங்கோ அரங்கில் வரும் ஜனவரி 8 வியாழன் அன்று நடைபெற உள்ளது.அதுசமயம் CPSரத்து போன்ற பொதுவான பிரச்சினைகள் குறித்து அரசிடம் வலியுறுத்த எடுக்கப்படவேண்டிய கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக அறியப்படுகிறது

Popular Posts