அகவிலைப்படி நிலுவையை இம்முறை காலதாமதமின்றி வழங்க அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது சிறப்பு நிகழ்வா ? , ஓய்வூதியதாரர்களுக்கு என்ற சொல்லே அரசாணையில் இல்லையே?

ஒவ்வொரு முறை அகவிலைப்படி அரசணை வெளியிடப்படும் போதும் அதில் நிலுவைத் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்படுவது இயல்பே. ஆயினும் தற்போது தேர்தல் என்பதால் அக்குறிப்பின் மீது அதிக கவனம் செல்வதும் இயல்பே.


 குறிப்பாக அனைத்து ஊழியர்களுக்குமான நிலுவை மற்றும் தொடர் வழங்களுக்கான தயாரிப்புகளை செய்து விட்டே அரசுகள் அரசாணைகளை வெளியிடுகிறது, ஆயினும் ஊதியம் பெற்றுத்தரும் அலுவலர்/ அலுவலகம் பொருத்து கால தாமதம் ஏற்படுகிறது. ஆயினும் சிறப்பு நிகழ்வாக விரைவிலேயே அவழங்க அதுவும் வரும் புதனுக்குள் வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆயினும் அவ்வழுத்தம் வழங்கப்பட்டாலும், தேர்தல் பயிற்சி வகுப்புகள், தேர்வு பணிக்கு மத்தியில் பிழையின்றி தாமதமின்றி வழங்கினால் அது ஆச்சரியம் தான்.
ஒவ்வொரு 6 மாதத்திற்கு ஒரு முறை அரசாணை வெளியிடப்படும் போது,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படிக்கு தனி அரசாணை வெளியிடப்படும் ஆனால், இம்முறை அத்தகைய அரசாணைகள் வெளியிடப்படாததால்,ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கான அரசாணையை எதிர்பார்த்து உள்ளனர். இதுஓய்வூதிதாரர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆயினும் அவ்வரசாணை விரைவிலேயே வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts