Other State லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Other State லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புகை பிடித்தால் வேலை கிடையாது : ராஜஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பு

ராஜஸ்தானில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு, அரசு வேலை கிடையாது என, மாநில, காங்., அரசு அறிவித்துள்ளது.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் மாநில சட்டசபைக்கு, அடுத்த மாதம், 1ம் தேதி தேர்தல் நடக்கிறது. 
 மாநில அரசு, சமீபத்தில் பிறப்பித்துள்ள அரசாணையில், புகைபிடிப்பவர்கள், குட்கா புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு அரசு வேலை கிடையாது என, தெரிவித்துள்ளது. மேலும், அரசு வேலையில் சேர்பவர்கள், புகைபிடிக்க மாட்டேன்; புகையிலை தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த மாட்டேன் என, உறுதிமொழி அளிக்க வேண்டியது கட்டாயம் எனவும், அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசின் இந்த முடிவுக்கு, புகையிலை எதிர்ப்பாளர்கள், வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

5.63 லட்சம் ஆசிரியர்களின் வருகையை தெரிவிக்கும் எஸ்.எம்.எஸ்., திட்டம் விரைவில் மாநிலமெங்கும்!

கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தின் கீழ், 5.63 லட்சம் ஆசிரியர்களின் விவரம், இம்மாத இறுதிக்குள், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்,'' என, பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை: முதல்வர் உத்தரவுப்படி, பள்ளி கல்வித் துறையில், ஆசிரியர்களின் வருகை பதிவை, அதிகாரிகளுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பும் திட்டம், கல்விசார் மேலாண்மை தகவல் முறைமை திட்டத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) ஒரு அங்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.
 
 இத்திட்டத்தை, முதலில், திருச்சி மாவட்டத்தில், செப்., 5ல், முதல்வர் துவக்கி வைத்தார். இ.எம்.ஐ.எஸ்., திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும், 56,573 பள்ளிகள், 5.63 லட்சம் ஆசிரியர், 1.35 கோடி மாணவர்களின் விவரம், இணையதளத்தில் சேர்க்கப்பட்டு வருகின்றன.

இப்பணியை, இம்மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து விவரமும் ஒருங்கிணைக்கப்பட்ட பின், எஸ்.எம்.எஸ்., திட்டம், மாநில அளவில் செயல்படுத்தப்படும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்து உள்ளார்.

Popular Posts