குழந்தைகளுக்கான கட்டாய மற்றும் இலவச கல்வி உரிமை சட்டம் 2009 ஐ சார்ந்த விழிப்புணர்வை அனைவருக்கும் ஏற்படுத்த கலை குழுக்கள் மூலம் கலை நிகழ்சிகள் மற்றும் வாசகங்கள் தாங்கிய பேரணி வாயிலாகவும் செயல்படுத்த திட்டமிடல் கூட்டம் இயக்குனரகத்தில் 21.06.2012 அன்று நடைபெறுகிறது


விடுபட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 23, 24ல் சான்றிதழ் சரிபார்ப்பு


பதிவுமூப்பு அடிப்படையிலான நியமனத்தில், விடுபட்ட பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்புதாரர்களுக்கு 23ம் தேதியும், விடுபட்ட முதுகலை பதிவுமூப்புதாரர்களுக்கு 24ம் தேதியும், ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது.
கடந்த, 2010-11ம் ஆண்டிற்கான பட்டதாரி ஆசிரியர் பதிவுமூப்பு நியமனத்தில், 350 பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன. விடுபட்ட பதிவுமூப்புதாரர் பட்டியல் மூலம், இந்த பணியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, 1,500 பேருக்கு, வேலூர், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய ஐந்து மண்டலங்களில், 23ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கும் என, டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று தெரிவித்தது. சம்பந்தப்பட்ட பதிவுதாரர்களுக்கு, தபாலில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளன.
அதேபோல், 2010-11ம் ஆண்டிற்கான முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில், நிரம்பாமல் உள்ள 120 பணியிடங்களை நிரப்ப, 24ம் தேதி, மேற்கண்ட ஐந்து மண்டலங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடக்கிறது. இதற்காக, 480 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
இரு தேர்வு முடிவுகள் இன்று(ஜுன் 20) வெளியீடு: அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், 139 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், 154 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவு ஆகியவை, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

கருணை அடிப்படையில் வேலை பெறும் திருமணமாக இருக்கும் பெண் குடும்ப உறுப்பினர்களிடம் மறுப்பின்மை சான்றையும் தான் மற்றும் தன் துணையும் குடும்ப உதவி உறுதி ஆவணமும் அளிக்கும் நிலையில் - வேலை அளிக்கலாம் - அரசாணை வெளியீடு

கருணை அடிப்படையிலான பணி நியமனங்கள் - பணியிடை மரணமடைந்த அரசு ஊழியரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் - விண்ணப்பம் அளிக்கும்போது திருமணமாகாமல் இருந்து பின்னர் பணிநியமனத்திற்கு முன்னர் திருமணமான பெண் வாரிசுதாரருக்கும் பணி நியமனம் வழங்குதல் - தெளிவுரைகள் வெளியிடப்படுகின்றன.

கிராம கல்விக் குழுக்களை கண்காணித்து ஆய்வு மேற்கொள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு - தொடக்கக் கல்வி இயக்குனர் கடிதம்


CCE - கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் 5 பள்ளிகளை மூன்று நாட்கள் ( ஜூன் 19, 20 & 21 ) பார்வையிடுதல் - அறிக்கை சமர்பித்தல் குறித்த செயல்முறைகள்


தமிழ்நாடு சார்நிலைக் கல்விப்பணி - உதவி / கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்தாய்வு பொதுமாறுதல் நடைபெறுவது குறித்து இயக்குனரின் செயல்முறைகள் மற்றும் பணிமாற்றத்திற்கான துணை திருத்திய முன்னுரிமைப் பட்டியல் 2011 - 2012 வெளியீடு


பட்டதாரி ஆசிரியர் பணி இடத்திற்கு ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூகவியல் பாடங்கள் அல்லாமல் வெவ்வேறு (Major subject) பாடங்களை படித்திருந்தாலும் அவை ஒத்த பாடமாக இருந்தால் அவற்றை சமமாக கருத - அரசாணை மற்றும் பட்டியல் வெளியீடு


பள்ளிகளில் ECO- CLUB அமைக்க அரசாணை


இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு தடை நீக்கம்


இடைநிலை ஆசிரியர்கள் பணிநியமனத்துக்காக நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை இன்று நீக்கியுள்ளது.
பட்டதாரி ஆசிரியர்களைப் போல இடைநிலை ஆசிரியர்களுக்கும் தகுதித் தேர்வு நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 2 பட்டதாரி ஆசிரியர்கள் மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த மனுவில், இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் தகுதித் தேர்வு நடத்தி அதன் மூலமாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று 7.3.2012 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், இது 15.12.2011 தேதியன்று இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாகும். எனவே, இடைநிலை ஆசிரியர்களை மாநில பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்றும், இடைநிலை ஆசிரியரர்களுக்கான தகுதித் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்து, இது குறித்து தமிழக அரசை பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில், மதுரை கிளை நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தனது பதில் மனுவை தாக்கல் செய்ததோடு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கு இடைக்காலத் தடை விதித்திருப்பதால், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 7,903 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்தது.
தமிழக அரசின் வாதத்தை ஏற்றுக் கொண்ட மதுரைக் கிளை நீதிமன்ற நீதிபதி கே. வெங்கட்ராமன், வழக்குத் தொடர்ந்துள்ள 2 பட்டதாரிகளுக்கான பணியிடங்களை மட்டும் காலியாக வைத்துவிட்டு, இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வை நடத்தி ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், இடைக்காலத் தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள CRC மையங்களில் பங்கேற்க விருப்ப விண்ணப்பம் பெறப்பட இருக்கிறது


1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து அரசு , நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு (CCE ) முறையிலேயே பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும் - தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


Community-wise break up of Job Seekers in the rolls of Emp. Exchanges


2012 - 2013 ஆம் ஆண்டிற்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தமிழக அரசால் வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் அறிவிப்பு -


அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி கடன் :
அ). ரூ. 50000/- வரை -5.50 %
ஆ). ரூ. 50001/-  முதல் 150000/- வரை - 7.00 %
இ). ரூ.150001/- முதல் 500000/- வரை - 9.00 %
ஈ).  ரூ.500000/- த்திற்கு மேல் - 10.00%
கூட்டுறவு வங்கிகளில் பெறும் கடன்களுக்கு - 10.00%

பள்ளி மாணவர்களுக்கு நவீன பஸ் பாஸ்: தமிழக அரசு திட்டம்


தற்போது மாணவர்கள் சேர்க்கை நடப்பதால், அதன்பின் "ஸ்மார்ட் கார்டு" பஸ் பாஸ் தரப்படும் என போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு அரசு டவுன் பஸ்களில் செல்ல தமிழக அரசு சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அட்டை வடிவில் உள்ள பாஸை, மாணவர்கள் கல்வி ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க முடியவில்லை. இரண்டாக கிழிவதால் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
இந்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு புகைபடத்துடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு&' பஸ் பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அந்தந்த பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களின் புகைப்படம் எடுத்து "ஸ்மார்ட் கார்டு&' பாஸ் வழங்க உள்ளனர்.

பள்ளி வயது மற்றும் பள்ளி செல்லா குழந்தைகளின் பதிவேட்டை - Elementary Education Register (EER) - புதுப்பிக்க இயக்குனர் அறிவுரை


குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி அனைத்து பள்ளிகளிலும் ஜூன் 12 (நாளை) எடுக்க அரசு ஆணை


தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி / நடுநிலைப்பள்ளிகளுக்கு சதுரங்க விளையாட்டு பலகை வழங்குவதற்கு பள்ளிகளின் விவரங்கள் கோருதல்


தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ..எண். 007436 /கே 2 / 2012, நாள்.  6. 2012  
பள்ளி மாணவர்களின் திறனை மேம்படுத்த 7 முதல் 17 வயதுள்ளபள்ளி செல்லும் தொடக்க / நடுநிலைப்பள்ளி  மாணவர்களுக்கு சதுரங்க விளையாட்டு 2012 - 2013 ஆம் கல்வியாண்டு முதல்அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

எனவே மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும்நடுநிலைப்பள்ளிகளின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்திசெய்து இயக்ககத்திற்கு அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.

2012-2013 பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு பணி மாறுதல் மூலம் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் விபரங்கள் கோருதல் -இயக்குனர் செயல்முறைகள்


அரசானை 213-26.12.2011 ல் திருத்தும் - நிதி உதவி பள்ளிகளில் (Aided Schools ) பள்ளி மேலாண்மைக் குழு (SMC ) அமைக்கும் பொது அதன் CHAIRMAN என்ற பதவிக்கு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் (PTA ) என்று இருக்கும் நிதி உதவி பள்ளியானால் அதனோடு The School manager/ correspondent/ secretary or his nominee of the school committee என்று சேர்க்க வேண்டும் - அரசாணை 126 வெளியீடு


SCERT ன் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் CCE பயிற்சி தேதிகள் மற்றும் கால அட்டவனைகள் (Click on the Image & view)



அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை


குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் இல்லாத அரசு பள்ளிகள் பற்றிய விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் மாவட்ட அதிகாரிகள் அறிக்கையாக அனுப்ப வேண்டும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, மாவட்டங்களில் உள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக, விழிப்புணர்வு முகாம்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த நடவடிக்கைகளை, 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
பள்ளிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை அவசியம் இருக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. எனவே, இத்தகைய வசதிகள், அரசுப் பள்ளிகளில் இருக்கிறதா என்பதை, நேரில் சென்று பார்வையிட்டு உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் இல்லாத, அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள் இருந்தால், அதைப் பற்றிய விவரங்களை, 15ம் தேதிக்குள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மூலமாக, சம்பந்தபட்ட வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு கருத்துருக்கள் அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், சிறப்புத் திட்டத்தின் கீழ், ஒரு கழிப்பறைக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில் ஈடுபடுதலை தவிர்க்க இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு
 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
  ..எண். 012921 / 1 / 2012, நாள். 28.05.2012
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில்ஈடுபடுத்துவதாகவும்இதனால் தேவையற்ற நிகழ்வுகள்ஏற்படுவதாகவும் இயக்குநரின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் தொடக்கக்கல்வித் துறையைச்சார்ந்த அலுவலகங்களில் அலுவலக நேரத்திற்கு பின்னர் பெண்ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனதிட்டவட்டமாக அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவித்துஅதன் ஒப்புதலைப் பெற்று கோப்பில் வைத்து கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறது.

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு


சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள்,தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும்எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல்நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்புவழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்விஇயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள்சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்துநேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர்உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012 

மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :-


12.06.2012 - காலை 9-30 மணி -சென்னை,திருவள்ளூர்,வேலூர்,காஞ்சிபுரம்
13.06.2012-காலை 9-30 மணி -கிருட்டிணகிரி,திருவண்ணாமலை,விழுப்புரம்கடலூர்
14.06.2012 - காலை 9-30 மணி - தருமபுரி,நாமக்கல்,சேலம்
15.06.2012 - காலை 9-30 மணி - திருச்சி,பெரம்பலூர்,அரியலூர்,கரூர்
16.06.2012 - காலை 9-30 மணி -தஞ்சை,நாகை,திருவாரூர்,புதுக்கோட்டை
18.06.2012 - காலை 9-30 மணி - ஈரோடு,திருப்பூர்,கோவை,நீலகிரி
19.06.2012 - காலை 9-30 மணி - திண்டுக்கல்,தேனி,திருநெல்வேலி
21.06.2012 - காலை 9-30 மணி - சிவகங்கை,இராமநாதபுரம்,தூத்துக்குடி
22.06.2012 - காலை 9-30 மணி - மதுரை,கன்னியாகுமரி,விருதுநகர்

தொடக்கக் கல்வி - வழக்குகள் - சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் சார்பாக மாவட்ட வாரியாக சீராய்வு மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.


தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண். 2500 / எப்1 / 2012, நாள்.07.06.2012
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் கிளையில் நிலுவையிலுள்ள வழக்குகள், தீர்ப்பாணை வழங்கப்பட்டு செயல்படுத்தாத வழக்குகள் மற்றும் எதிரவாதவுரை தாக்கல் செய்த மற்றும் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சார்ந்த விவரங்கள் கொண்டுவர தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
எனவே சார்ந்த மாவட்டங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் சார்ந்த கோப்புகள் எதுவும் விடுபடாமல் படிவத்தில் பூர்த்தி செய்து நேரில் தவறாமல் ஆஜராகுமாறு தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
நாள். 12.06.2012 முதல் 22.06.2012
மாவட்ட வாரியாக ஆய்வு நிரல் :- 

2012-2013 ஆம் கல்வி ஆண்டின் தோராய 10 குறு வளமைய (CRC) பயிற்சித் தேதிகள்


TNPSC RESULTS


10+2+3+1 கல்வி தகுதியுடன் கணிதம் ஓராண்டு படித்தால் பட்டதாரி கணிதம் பதவி உயர்வுக்கு பரிசீலிக்கப்படும் . இயக்குனர்


Proceeding Letter of தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


Announcements - District Revenue Administration - Issue of Community, Nativity and Income certificates to all sixth standard students studying in all schools of Tamil Nadu - Implementation of the Scheme - Orders issued.


தொடக்கக் மற்றும் பள்ளிக்கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது ?

அரசு அறிவிக்கப்பட்ட பணியிடங்களை நிரப்புவதற்கு முன் சரியான காலிப் பணியிட விவரங்களை அறிய , காட்டாய கல்விச் சட்டத்தின் அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்பட்டு , உபரி ஆசிரிய பணியிடங்கள் காலி பணியிடங்களுக்கு மாற்றப்பட்டு. இப்பணி இட நிரவல் முடிந்த  பின்பு சரியான காலிப் பணி இடங்களைக்  கொண்டு மாறுதல் கலந்தாய்வு நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக அறியப்படுகிறது . இதே போல் பள்ளிக்கல்விதுறையில் உள்ள பட்டதாரி ஆசிரிய பணியிடங்களும் நிரவப்படுகிறது. மீதம் உள்ள பணியிடங்களை இடைநிலை ஆசிரியர்களை பொறுத்தவரை மாநில பதிவு மூப்பு அடிப்படையிலும் பட்டதாரி ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும் நியமிக்கப்பட உள்ளனர். 
ஆனாலும் குறிப்பிட்ட துறைகள் இது சார்ந்து முறையான அறிவிப்பை வெளியிட்டப் பின்பே சரியான தேதிகள் தெரிய வரும். அதுவரை இவை அனைத்தும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும் செய்தியாகவே இருக்கும். உரிய துறைகளின் முறையான அறிவிப்பிற்கு பின் விரைவில் இவர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தேதி நம் இணைய தளத்தில் வெளியிடப்படும் . 

தொடக்கக்கல்வி - 10 + 2 + 3 தகுதியில்லாமல் பதவி உயர்வு பெற்றவர்கள் விவரங்களை கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்..எண். 04404 / 1 / 2012, நாள். 05062012
அரசாணை(நிலைஎண். 107 பள்ளிக்கல்வித்துறை நாள்.18.09.2009அரசாணையின்படி தமிழாசிரியர்பட்டதாரி ஆசிரியர்,நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்உதவித் தொடக்கக் கல்விஅலுவலர் பதவி உயர்வு பெற சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் 10 + 2 + 3கல்வித் தகுதியில்லாமல்பல ஆசிரியர்கள் பதவி உயர்வுபெற்றிருப்பது தொடக்கக் கல்வி இயக்குனரின் கவனத்திற்குகொண்டு வரப்பட்டுள்ளதுஎனவே அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் விவரத்தினை இயக்குனருக்கு அனுப்பிவைக்க உத்தரவிடப்பட்டுள்ளது
(soon the proceeding will be updated)

அரசாணை 177 பத்தி 2.6ன் படி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களுக்கு மே மாதம் ஊதியம் கிடையாது என்றே கருதலாம் - மாநில திட்ட இயக்குனர்


PENSION – Tamil Nadu Government Pensioners’ Family Security Fund Scheme – Enhancement of financial assistance from Rs.25,000/- to Rs.35,000/- in the case of death of pensioners – Orders – Issued.


கவலைக்கிடமாகும் இந்தியாவின் சுகாதாரம்



உலக அளவில் சுகாதாரத்தில் இந்தியாவின் நிலை நாளுக்கு நாள் கவலைக்கிடமாகி வரு கிறது. குறிப்பாக பெண்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.




உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கையில் இந்தியாவே முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டிருக் கிறது. அதாவது உலக அளவில் பிரசவத்தின் போது இறக்கும் பெண்களின் எண்ணிக்கை யில் 20 சதவிகிதம் பேர் இந்தியாவை சேர்ந்த பெண்களாகவே இருக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கடந்த 20 ஆண்டுகளில் 2 லட்சத்து 87 ஆயிரம் பெண்கள் இறந்துள்ளனர். இதில் இந்தியாவில் மட்டும் இறந்தவர்களின் எண் ணிக்கை 56 ஆயிரம் பேர் என ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளிவிபரம் கூறுகிறது.




இந்தியாவில் பெண்களுக்கு போதிய அள வில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்பதே இதற்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. குறிப்பாக இந்திய பெண்களில் 56.2 சதவிகிதம் பேர் இரத்தசோகை நோயால் பாதிக்கப்பட் டிருக்கின்றனர். இந்தாண்டின் துவக்கத் தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆய்வறிக் கையை வெளியிட்டார். ஐந்து வயதிற்கு உட் பட்ட குழந்தைகளில் 42 சதவிகிதம் பேர் குறைந்த எடையளவிலேயே இருக்கின்றனர். 52 சதவிகித குழந்தைகள் போதிய வளர்ச்சியற்ற நிலையி லேயே இருக்கின்றனர் என்று கூறினார். இப்படி இந்திய மக்க ளின் ஆரோக்கியம் மற்றும் சுகாதார நிலை குறித்து ஆய்வு செய்தால் கவலையளிப் பதாகவே இருக்கிறது.




ஒரு புறம் சேமிப்பு கிடங்குகளில் உள்ள உணவு தானியங்கள் மக்கி வீணாகின்றன. மறுபுறம் எலிகளுக்கு உணவாக்கப்படுகிறது. ஆனாலும் மத்திய அரசு அதனை உணவின்றி தவிக்கும் ஏழைகளுக்கு கொடுக்க மறுத்து வருகிறது. உச்சநீதிமன்றம் வீணாகும் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று கூறிய போது, அதெல்லாம் முடியாது. அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்று பிரதமர் மன்மோகன் சிங், ‘கொள்கை’ முழக்கமிட்டார். கொஞ்சம்நஞ்சம் ஒதுக்கும் பொதுசுகாதாரத்திற் கான நிதியையும் காப்பீட்டு திட்டம் என்ற பெயரில் தனியார் மருத்துவமனைக்கு திருப்பி விடுகின்ற னர். மக்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் விதமாக சுகாதாரத்தையே அரசு தனது பொறுப்பி லிருந்து கைவிடும் கொள்கையையே பின்பற்றி வருகிறது.




ஏழைகள் உணவின்றி உயிரை விட்டாலும் பரவாயில்லை எனக் கருதும் மத்திய அரசு, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் லாப விகி தம் குறையாமல் இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது. அதற்காக இதுவரை அள்ளிக் கொடுத்த மக்களின் வரிப்பணம் போதாது என்று, தற்போதும் ஏற்றுமதி நிறுவனங் களுக்கு பல்லாயிரங்கோடி ரூபாய்களை அள் ளித்தர தயாராகி வருகிறது. இந்தியாவின் சுகா தாரம் தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரு கிறது. இந்நிலை நீடிப்பது இந்தியாவிற்கு நல்ல தல்ல. இந்த நேரத்திலாவது இடதுசாரிகளிடம் 2004 ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி உறுதியளித்தபடி சுகாதாரத்திற்கு கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும். அதன் மூலம் ஏழைகளை பாதுகாத்திட மத்திய அரசு முன்வர வேண்டும்.
 நன்றி ! தீக்கதிர் 

அரசு நிதியில் ஆதாயம் தேட முனையும் ரிலையன்ஸ்: பிரதமருக்கு தபன்சென் கடிதம்

சிஏஜி மற்றும் கட்டண ஆணைய அறிக்கைக்கு பின்னரே கேஜி-டி 6 இயற்கை எரிவாயு விலை தொடர்பாக அரசு ஆய்வு செய்ய வேண்டும் என தபன் சென் எம்.பி. பிரதமருக்கு எழுதிய கடிதத் தில் கூறியுள்ளார்.


கே.ஜி-டி6 எனப்படும் கோதாவரிப் படுகை எரிவாயு விலையை உயர்த்துதல் விஷயத்தில் பிரதமர் அலுவலகம் தலை யீடு தொடர்பாக சிஐடியு பொதுச்செயலாள ரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தபன் சென் எம்.பிக்கு பிரதமர் அனுப்பிய கடி தத்தை தொடர்ந்து 16.5.2012 அன்று தபன் சென், பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதி னார். கடிதத்தில் அவர் கூறியிருப்ப தாவது:-


தனது கடிதத்தில் குறிப்பிடப்பட்ட நிதர்சனமான, முக்கியமான விஷயத்தை கவனிப்பதற்கு தவறியுள்ளது துரதிர்ஷ்ட வசமானது. தனது முதல் கடிதத்தைத் தொடர்ந்து 31.3.2012 அன்று மற்றொரு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கட்டண உயர்வு தொடர்பாக ரிலையன்ஸ் இண்டஸ் ட்ரிஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) அனுப்பிய கடிதத்தை பிரதமர் அலுவலகம் ஏற்றுக் கொண்டு, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திற்கு சட்ட ஆலோ சனை பெற அனுப்பப்பட்டுள்ளது.


எரிவாயு விலை தொடர்பாக அதிகார மளிக்கப்பட்ட அமைச்சர் குழு (இஜிஓஎப்) விடம், இந்த எரிவாயு விலை உயர்வு வேண்டுகோள் வருவதற்கு முன்பாக பெட்ரோலிய அமைச்சகத்திற்கு ஆர்ஐ எல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


பொதுமக்களின் நலனைக் கருத் தில்கொண்டு தனது கேள்வியாக, ரிலை யன்ஸ் நிறுவனம் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக கேட்டபோது பெட்ரோலியம்- இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் பதிலளிக்கப்படவில்லை. தற்போதைய தலையீடு மற்றும் நிகழ்வுகளின் தொடர்ச்சி, புறக்கணிப்பு காரணமாக தனியார் நிறுவனம் ஆதாயம் உரிமை பெற்றுவிடக்கூடாது. 


தற்போதைய விலை நிர்ணய காலம் காலாவதி ஆவதற்கு முன்னர் தேசிய கரு வூலத்தின் மதிப்பில் மற்றும் லட்சக் கணக்கான மின்சாரம் மற்றும் உர வாடிக் கையாளர்கள் மதிப்பில் ஆதாயம் தேட நிறுவனம் முயன்றுள்ளது.


ஆர்ஐஎல் ஒப்பந்தகாரர் வேண்டு கோளை அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சகம் 2010ல் நிராகரித்தது. எரி வாயு விலை உயர்வு தொடர்பாக அந்நிறு வனத்தின் தற்போதைய வேண்டு கோளை பெட்ரோலிய அமைச்சகம் நிரா கரித்தது. 


எரிவாயு விலையை விநியோகம் தொடங்கிய நாளில் இருந்து 5 ஆண்டு களுக்கு அனுமதித்தது. எனவே அமைச் சர்கள் குழு முடிவு செய்த விலையை ஆர்ஐஎல் நிறுவனம் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்திற்கு தரப்பட்ட இந்த உத் தரவுப்படி 5 ஆண்டு ஒப்பந்தத்தை அதா வது 2014ம் ஆண்டு வரை பெட்ரோலிய அமைச்சகம் கடைப்பிடிக்க வேண்டும். சட்ட ஆலோசனை மூலமாக இந்த விவ காரம் பிரதமர் அலுவலகம் மூலம் ஆய்வு செய்து மீறக்கூடாது. இந்த சூழ்நிலையில் சட்ட கருத்து ஆலோசனை என்பது விதி முறை மீறலாக உள்ளது.


தேசிய அனல் மின் கழகங்களின் கவாஸ்+காந்தார் (குஜராத்) மின் நிலையங் களுக்கு ஆர்ஐஎல் நிறுவனம் முதலில் 2.34 எம்பிடியு அளவு எரிவாயுவை 17 ஆண்டுகளுக்கு அளிக்க ஒப்புக் கொண்டது. பின்னர் அது தனது கருத்தை மாற்றிக்கொண்டது. எரிவாயு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடவில்லை. இதன் காரணமாக இந்த மின் நிலையங்கள் பணி இன்றுவரை முடங்கியுள்ளது. மின்துறை அமைச்ச கமோ, பிரதமர் அலுவலகமோ இவ்விஷ யத்தில் தலையிடவில்லை. சட்ட ஆலோ சனை பெறும் விஷயத்திலும் இந்த அலு வலகங்கள் தலையிடவில்லை.


அதனால் பொதுத்துறை நிறுவனம் கேஜி-டி6ல் இருந்து எரிவாயு பெற வேண்டி வந்தது. தேசிய அனல் மின் நிலையக் கழகம் மும்பை உயர்நீதிமன் றத்தை இவ்விவகாரம் தொடர்பாக அணு கியது. இந்த வழக்கு நீதிமன்ற விசா ரணையிலேயே உள்ளது.


தற்போதைய உடனடி விவகாரத்தில் ஆர்ஐஎல் நியாயம் இல்லாத வகையில் இயற்கை எரிவாயு விலையை உயர்த்த போலியான உரிமையை காணும் மாற்று உரிமையை ஆர்ஐஎல் கண்டறிந்துள்ளது.


மேலும் இயற்கை எரிவாயு விலை அதிகரித்தால் பல லட்சம் மின் நுகர்வோர் களின் மின் கட்டணம் அதிகரிக்கும். இத னால் உரத்திற்கு அரசு கூடுதல் மானியம் தரவேண்டி இருக்கும். இந்த நிலையில் ஒப்பந்ததாரர், அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு 5 ஆண்டுகளுக்கு அதாவது 2014ம் ஆண்டுவரை 4.2 டாலர் என்ற விலையில் எம்பிடியு எரிவாயு வழங்க வேண்டும் என்ற முடிவை மறு பரி சீலனை செய்யக்கூறியுள்ளார். ஆர்ஐஎல் நிறுவனம் 2.3 டாலர் / எம் பிடியு அளவுக்கு தேசிய அனல் மின் நிலையங்களுக்கு 17 ஆண்டுகளுக்கு எரி வாயு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளது. 


இந்திய உர நிறுவனங்கள், ஓமன் இந் தியா எண்ணெய் நிறுவனத்தில் இருந்து எரிவாயுவை 2006ம் ஆண்டு ஜனவரி 1ல் 0.77 டாலருக்கு பெற்று வருகின்றன. 6 ஆண்டுகளுக்குப் பின்னரே அதன் விலையில் 15 சதவீதம் தற்போது அதி கரிக்கப்பட்டுள்ளது.


எரிவாயு சப்ளை காலம் ஓமன் எண் ணெய் நிறுவனம் மற்றும் உர நிறுவனங் களுக்கு இடையே ஜனவரி, 2006 முதல் 2020ம் ஆண்டுவரை 15 ஆண்டுகளுக்கு உள்ளது. இதற்கிடையே ஆர்ஐஎல் தனது விலை உயர்வை ஒப்பந்தம் பெற்ற 3 ஆண்டுகளில் உயர்த்தப்பார்க்கிறது.


எனவே உள்நாட்டு எரிவாயு விலையை சர்வதேச விலை அளவிற்கு உயர்த்தக் கூறுவது தவறான நோக்கத்துடன் வைக் கப்பட்ட ஆலோசனையாகும். அரசு பொது நிதி மற்றும் மின்சாரம்/உர வாடிக்கை யாளர்கள் மதிப்பில் ஒப்பந்ததாரர் பலன டைய முயற்சி பெறும் சூழலாக உள்ளது.


இன்றைய நிலையில் கேஜி-டி6 வய லில் உத்தரவாதம் அளிக்கப்பட்ட (80 எம் எஸ்சிஎம்டி) அளவு உற்பத்திக்குப் பதிலாக பாதிக்கும் குறைவான உற்பத் தியே (34எம்எம்எஸ்சிஎம்டி) நடந்துள் ளது. திட்டமிட்டு வேண்டுமென்றே உற் பத்தி குறைக்கப்பட்டுள்ளது. 


இயற்கை எரிவாயுவை கேஜி-டி6 களத்தில் உற்பத்தி செய்வதற்காக உண் மையான மதிப்பீட்டை கட்டண ஆணை யம் மதிப்பீடு செய்ய வேண்டும். சிஏஜி எனப்படும் தலைமை கணக்கு தணிக்கை ஆணையத்திற்கு ஆர்ஐஎல் அனுப்பப்பட வேண்டும். 5 ஆண்டு ஒப்பந்தம் காலாவதி ஆவதற்கு முன் (2014) ஆர்ஐஎல்-ன் சட்ட ஆலோசனை அனுமதிக்கப்பட்டு, விலை உயர்த்தப்படக்கூடாது. கட்டண ஆணை யம் சிஏஜி அறிக்கைக்கு பின்னர் கேஜி-டி6 எரிவாயு விலை ஆய்வு செய் யப்பட வேண்டும். இவ்வாறு அவர் வலி யுறுத்தியுள்ளார்.

ஆங்கில பள்ளி திறப்பு இயக்குனர் செயல்முறை ந.க.எண் : 11640/E1/2012 நாள் : 12.05.2012


Go.23 உடனே செயல்படுத்த இயக்குனர் செயல்முறைகள் ந.க .எண் : 12956/E4/2011 நாள் : 15.05.12


சார்நிலை பணி காலி பணியிட பதவி உயர்வு பட்டியல்


ஆசிரியர் பொது மாறுதல் உத்தரவு தற்காலிக நிறுத்தம்


Popular Posts